கச்சத்தீவு: தி.மு.க. எதிர்க்கவில்லையா?- பழ.நெடுமாறன் பேட்டி

1 Min Read

கச்சத் தீவு தாரைவார்க்கப்பட்டதை அப்போது மாநில ஆட்சியில் இருந்த திமுக அரசு தடுக்கவில்லையா?
இந்திய அரசும், இலங்கை அரசும் செய்துகொண்ட உடன்பாடு அது. ஒன்றி யத்தில் ஆளும் அரசானது அந்நிய நாடுகளுடன் உடன்பாடு செய்யும் பிரச் னையில் மாநில அரசு தனது ஆட்சேபனையைத் தெரிவிக்கலாம். நேரடியாகச் சண்டையிட முடியாது. இருப்பினும், நாடாளுமன்றத்தில் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூக்கையா தேவர், திமுகவைச் சேர்ந்த இரா. செழியன், நாஞ்சில் மனோகரன் ஆகியோர் கேள்விகள் எழுப்பி, கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர், தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் அனைத்துக் கட்சிகளால் விவாதிக் கப்பட்டு, தங்களது எதிர்ப்புகளை பேரவையில் பதிவு செய்தனர். அப்போதைய முதலமைச்சர் கலைஞரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததற்கான அதிகாரபூர்வ ஆவணங்கள் உள்ளன.

-தினமணி, (பக்கம்9) 14.4.2024

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *