பி.ஜே.பி.,க்குக் கவுண்ட்டவுன் ஆரம்பமாகிவிட்டது!
பெரியாருக்கும் – ஆர்.எஸ்.எஸ்.க்குமிடையே நடைபெறும் தத்துவப் போராட்டமே இந்தத் தேர்தல் என்கிறார் ராகுல்காந்தி, புரிந்துகொள்வீர்!
உங்கள் சின்னம் – ஏழைகளின் சின்னம் பானை சின்னம்!
திருமாவளவனை வெற்றி பெறச் செய்வீர்!!
ஆண்டிமடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை
ஆண்டிமடம், ஏப்.14 நாட்டில் நடக்கவிருக்கும் மக்கள வைத் தேர்தல் முக்கியமானது. தந்தை பெரியார் தத் துவத்திற்கும் – ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்குமிடையே நடக்கும் போராட்டம் என்று காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி கூறியிருப்பதன் பொருளைத் தெரிந்து கொண்டு, நமது எழுச்சித் தமிழர் தொல்.திருமாவள வனின் – ஏழைகளின் சின்னமான பானைச் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளனை ஆதரித்து ஆண்டிமடத்தில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை
நேற்று (13.4.2024) மாலை 7 மணியளவில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களை ஆதரித்து ஆண்டி மடத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
முன்பு நடைபெற்ற தேர்தல்களைவிட
மிக முக்கியமான தேர்தல் இது!
வருகின்ற 19 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கக் கூடிய இந்தியாவினுடைய 18 ஆவது பொதுத் தேர்தல் மிக முக்கியமானதாகும். இதுவரை நடந்த பல தேர்தல் களைவிட மிக முக்கியமானதாகும்.
இதில் நாம் அனைவரும், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கின்ற ஒடுக்கப்பட்ட மக்கள், தாழ்த் தப்பட்ட மக்கள், உரிமை இழந்த மக்கள், அடக்கப்பட்டு கிடக்கின்ற மக்கள் அத்தனை பேரும் அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க வாக்களிக்கவேண்டும் என் பதை வலியுறுத்தவும். இதை ஓர் அறப்போராகக் கருதி, ஏன் கடமையாற்றவேண்டும் என்பதை விளக்கவேண் டும் என்பதற்காகவும் இப்பரப்புரைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியின் சார்பாக நம்முடைய எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள், நம்முடைய முதலமைச்சர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டாவது முறை யாக இங்கே மீண்டும் வெற்றி பெறவிருக்கிறார் என்பதை மகிழ்ச்சியோடு உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்பு நடைபெற்ற தேர்தலில் அவர் பெற்ற வாக்கு களைவிட அதிகமான அளவு வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறவேண்டும். அது அவருக்காக அல்ல; அவருடைய கட்சிக்காக அல்ல; அவருடைய கூட்டணிக் கட்சிக்காக அல்ல – திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக அல்ல – உங்களுக்காக, எதிர்கால சந்ததிக்காக, வருங் கால சந்ததியினுடைய வாழ்வை பாதுகாப்பதற்காக என் பதை விளக்குவதற்காகத்தான் இங்கே நாங்கள் வந்திருக்கின்றோம்.
பரப்புரைக் கூட்டம் வருகின்ற 17 ஆம் தேதி மாலை தஞ்சையில் நிறைவு பெறவிருக்கிறது
இந்தத் தேர்தல் பரப்புரைக் கூட்டம் என்பதை கடந்த 2 ஆம் தேதியன்று நாங்கள் தென்காசியில் தொடங்கி னோம். இந்தப் பரப்புரைக் கூட்டம் வருகின்ற 17 ஆம் தேதி மாலை தஞ்சையில் நிறைவு பெறவிருக்கிறது.
இதற்கிடையில், தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் உரையாற்றிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், என் னுடைய பேச முடியாத சூழ்நிலையில் எனது தொண்டை இருந்தாலும், நான் விடுவதாக இல்லை. காரணம், 94 வயதானபொழுதுகூட, ஒரு கையிலே மூத்திரச் சட்டி யைத் தூக்கிக்கொண்டு, இன்னொரு கையில், மக்களி டையே பிரச்சாரம் செய்த தலைவர் நம்முடைய அறி வாசான் தந்தை பெரியார் அவர்கள்.
அவருடைய வாழ்நாள் தொண்டன், அவருடைய வாழ்நாள் மாணவன் என்ற முறையில், என்னால், ஓய்வெடுத்துக்கொண்டு அமர்ந்திருக்க முடியவில்லை. உடல்நலம் சரியில்லை என்று சொல்லி, தேர்தல் பரப் புரைக் கூட்டங்களில் பங்கேற்க முடியாது என்று சொல் லுவதற்கு நான் தயாராக இல்லை.
இந்த மக்கள் அறிவார்ந்த மக்கள்; அதிலும் குறிப்பாக அரியலூர் மாவட்டம் என்று சொன்னால், இந்த இயக் கத்திற்கே ஒரு பாசறை போன்ற பகுதியாகும்.
அதுபோலவே, இந்த மாவட்டத்தை உள்ளடக்கியது, நம்முடைய எழுச்சித் தமிழர் அவர்களுடைய சிதம்பரம் தொகுதியாகும்.
‘‘சிதம்பரம் போவேனா? தில்லையைக் காண்பேனா?” என்றெல்லாம் நந்தனார்கள் பாடியது உண்டு.
இதுதான் பெரியாரின் சாதனை; இதுதான் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கரின் சாதனை!
ஆனால், அந்த நந்தனார்களை சிதம்பரம் கோவி லுக்குள் விடவில்லை. ஆனால், திராவிடர் இயக்கம் அரும்பாடுபட்டு, எங்கள் திருமாவளவன்கள் டில்லி நாடாளுமன்றத்தில் அமர்ந்து குரலெழுப்புகிறார்கள். இதுதான் பெரியாரின் சாதனை; இதுதான் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கரின் சாதனை. இதுதான் பெரியார் மண்ணின் சாதனை.
தொண்டையா? தொண்டா?
அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தத் தேர்தலைப் பற்றி சில வார்த்தைகள். இன்றைக்கு இது முதல் கூட்டம்; இந்தக் கூட்டத்தை முடித்துவிட்டு, இரண்டு மணிநேரம் பயணம் செய்து பெரம்பலூரில் நடைபெறும் தேர்தல் பரப்புரையில் உரையாற்றவேண்டும்.
தொண்டை எந்த அளவிற்கு ஒத்துழைத்தாலும், ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினாலும், தொண் டையா? தொண்டா? என்பதுதான் இப்பொழுது மிக முக்கியமானது.
இப்பொழுது நடைபெறுகின்ற போராட்டம் என்பது ஜனநாயகமா? எதேச்சதிகாரமா? என்பதை முன்னிறுத்தி எப்படிப் போராடுகிறோமோ, அதேபோன்றதொரு போராட்டம்தான்.
நான்கு சிறிய புத்தகங்களை அச்சிட்டுக் கொண்டு வந்திருக்கின்றோம்
ஆகவே என்னுடைய உரை சுருக்கமாக அமைந் தாலும்கூட, எல்லாவற்றையும் விளக்குவதற்காகத்தான் தோழர்களே, இங்கே நண்பர் சுட்டிக்காட்டியதைப்போல, நான்கு சிறிய புத்தகங்களை அச்சிட்டுக் கொண்டு வந்திருக்கின்றோம்.
‘‘மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப்போம்!” என்ற தலைப்பில் ஒரு நூல்.
ஒன்றியத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாக இருக்கக் கூடிய பா.ஜ.க. ஆட்சியின் கொடுமைகளை, மோடியின் கொடுங்கோல் ஆட்சியின் கொடுமைகளைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான் இந்தப் புத்தகம். அதனை நீங்கள் வாங்கவேண்டும், படிக்கவேண்டும், பரப்பவேண்டும். இன்னும் சில நாள்களே உள்ளன தேர்தலுக்கு.
அதற்கடுத்து, ‘‘2024 இல் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை (தி.மு.க. அணியை) ஆதரிக்க வேண்டும் ஏன்?” புள்ளி விவரத்தோடு வெளியிடப் பட்டுள்ள புத்தகம். சாதனைகளைச் சொல்லிவிட்டுத்தான், தி.மு.க. கூட்டணி – இந்தியா கூட்டணி மக்களைச் சந்திக்கவேண்டும் என்றபடி இந்நூல் உள்ளது.
அய்ந்தாண்டுகளுக்கு முன்பு தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களை, ஏன், நம்முடைய எழுச்சித் தமிழர் உள்பட எல்லோரையும் வெற்றி பெற வைத்து, நாடா ளுமன்றத்திற்கு அனுப்பினீர்கள் என்று சொன்னால் நண்பர்களே, கடந்த 5 ஆண்டுகாலத்தில், நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொன்னதைச் செய்திருக் கிறார்கள், செய்வதையே சொல்லியிருக்கிறார்கள்; கூடுதலாக சிலவற்றையும் செய்திருக்கிறார்கள்.
அந்த விவரங்கள் முழுவதும் இந்தப் புத்தகத்தில் தெளிவாக விளக்கப்பட்டு இருக்கிறது.
அடுத்தபடியாக, ‘‘பிரதமர் மோடிக்கு கருஞ்சட்டைக்காரனின் திறந்த மடல்!” என்ற தலைப்பில் ஒரு புத்தகம்.
எல்லாவற்றையும்விட இப்பொழுது மோடி அவர்கள், புதிதாக ஒவ்வொரு இடத்திலும் பேசிக் கொண்டிருக் கின்றார். அவர் இந்தியாவில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், தமிழ்நாட்டிற்கு வந்தால் மட்டுமே அவருடைய குரல் ஓங்கி வருகிறது.
தமிழ்நாடோ, இந்தியாவோ
மீண்டும் மோடிக்குக் கிடைக்கப் போவதில்லை!
தமிழ்நாட்டிற்கு இதுவரை ஏழு முறை வந்திருக்கிறார். இன்னும் ஒரு மூன்று முறையாவது வருவார். கடந்த 10 ஆண்டுகாலத்தில், 10 அவதாரங்கள், 10 முறை படை யெடுப்பு- எது நடந்தாலும், தமிழ்நாடோ, இந்தியாவோ மீண்டும் மோடிக்குக் கிடைக்கப் போவதில்லை.
இது மேலோட்டமான செய்தியல்ல; வெளிப்படை யாகவே எல்லோரும், உலகமே பார்க்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது.
அவருக்கு அச்சம் அதிகமாக, அதிகமாக இப்படி அடிக்கடி வருகிறார் தமிழ்நாட்டிற்கு.
அதைப்பற்றிய புத்தகம்தான் நண்பர்களே, ‘‘பிரதமர் மோடிக்குக் கருஞ்சட்டைக்காரனின் திறந்த மடல்!’’ என்ற புத்தகம்.
ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்த ஊழல், உலகமே காணாத ஊழலாக இருக்கிறது என்று சொன்னால், அந்த ஊழல்தான் மெகா ஊழல், இமாலய ஊழல் என்பதைப்பற்றி புத்தகம் வெளியிட்டு இருக்கிறோம்.
‘‘பா.ஜ.க.வின் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ஊழல்கள் தேர்தல் பத்திர முறைகேடுகள்” என்ற தலைப்பில் வெளி வந்திருக்கிறது.
தேர்தல் பத்திரத் திட்டத்தைப்பற்றி வெளிவந்திருக் கின்ற புத்தகம். அந்தப் புத்தகத்தில் ஆதாரப்பூர்வமான பல செய்திகளைப்பற்றி விளக்கியிருக்கின்றோம்.
இதுவரை, ரகசியமாக அந்த ஊழலை எப்படிச் செய்தார்கள் என்றால், நன்கொடை என்ற பெயராலே தேர்தல் பத்திரத் திட்டத்தின்மூலம் பா.ஜ.க.விற்கு மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் கிடைத்திருக்கிறது.
மேற்சொன்ன நான்கு புத்தகங்களை வாங்கி, பரப்புங் கள். மற்ற அணியினர் உங்களிடம் வந்து வாக்குக் கேட் டால், இதைக் காட்டி, இதற்கு என்ன பதில்? என்று கேளுங்கள்.
உச்சநீதிமன்றம்தான் பா.ஜ.க.வின் ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது!
தேர்தல் பத்திரத் திட்டத்தில் நடைபெற்ற ஊழலைப் பற்றி நாங்கள் சொல்லவில்லை; இந்தியா கூட்டணித் தலைவர்களான ஸ்டாலின் அவர்களோ, ராகுல் காந்தி அவர்களோ சொல்லவில்லை. மாறாக, உச்சநீதிமன்றம் அந்த ஊழலைச் சுட்டிக்காட்டி, ஆட்சியினுடைய காதைப் பிடித்துத் திருகித்தான் இந்த ஊழல்கள் வெளிச் சத்திற்கு வந்திருக்கின்றன.
எனவே, இந்தப் புத்தகங்களை நீங்கள் வாங்குவது மட்டுமல்ல, பரப்புவது மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் நீங்கள் கொடுத்து, அந்தப் புத்தகங்களின் சிறப்பைப்பற்றி எடுத்துச் சொல்லவேண்டும்.
ஊழலைப்பற்றி சொல்லுகின்ற நேரத்தில், ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கின்றது ஒன்றிய பா.ஜ.க. அரசு என்று நாம் சொல்லவில்லை; சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கை சொல்லுகிறது.
தணிக்கையாளரே பின்னாளில்
உண்மையை ஒப்புக்கொண்டார்!
நம்முடைய ஆ.இராசா அவர்கள்மீது 2ஜி ஊழல் என்று சொல்லி ஏமாற்றினார்கள் அல்லவா. அதற்காக அரசாங்கம் ஒரு தணிக்கையாளரை நியமித்தது. அவர் பதவி ஓய்வு பெற்ற பிறகு என்ன சொன்னார், ‘‘நான் சும்மாதான் எழுதினேன்; அது உண்மையல்ல” என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் தெளிவாக எழுதியிருக்கிறார்.
அது கற்பனை. ஆனால், இப்பொழுதுள்ள ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு செய்திருப்பது உண்மை. இவற்றையெல்லாம் விளக்கக்கூடிய கூட்டத்திற்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய மாவட்டத் தலைவர் மானமிகு செயல்வீரர் விடுதலை நீலமேகம் அவர்களே, வரவேற்புரையாற்றிய பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் அவர்களே, தலைமைக் கழக அமைப்பாளர் சிந்தனைச்செல்வன் அவர்களே, மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் அவர்களே,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில சட்ட திட்ட திருத்தக் குழு செயலாளர் சுபா.சந்திரசேகர் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழக வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழக தெற்கு ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் அவர்களே,
காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர் சாமிநாதன் அவர்களே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராசாப்பிள்ளை அவர்களே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் தேவேந் திரன் அவர்களே,
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய லாளர் பரமசிவம் அவர்களே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் அருமைத் தோழர் அவர்களே,
மற்றும் சிறப்பாக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கக்கூடிய அருமை வாக்காளப் பெருங்குடி மக்களே, கழகத் தோழர்களே, கூட்டணிக் கட்சியைச் சார்ந்து அப்பாற்பட்டு இருக்கக்கூடிய விவசாயப் பெருங் குடி மக்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுருக்கமாக சொல்கிறேன், பா.ஜ.க. அரசின் ஊழல்களைப்பற்றி.
10 ஆண்டுகாலத்திற்குப் பிறகு மோடி தலைமையில் இருக்கின்ற ஒன்றிய ஆட்சி நீடிக்கவேண்டும் என்று சில பேர் சொல்கிறார்கள். அப்படிச் சொல்ல அவர் களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அழைத்துக் கொண்டுவந்த கூட்டம் எல்லாம், மோடி அவர்களுக்கு முன் வரும்பொழுது, ‘‘வேண்டும் மோடி; மீண்டும் மோடி” என்று சொன்னார்கள்.
‘‘வேண்டாம் மோடி’’ என்றார்
நம்முடைய முதலமைச்சர்!
ஆனால், நம்முடைய முதலமைச்சர், இந்தியா கூட்டணி உருவாவதற்கு வித்திட்ட, திராவிட முன் னேற்றக் கழகத்தினுடைய தலைவரும், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டின் ஒப்பற்ற முதலமைச்சர் அவர்கள் நேற்று கூட முழக்கம் செய்திருக்கிறார், ‘‘வேண்டாம் மோடி” என்று.
தனிப்பட்ட முறையில் மோடிக்கும், நமக்கும் வெறுப்பே, விருப்போ, சண்டையோ கிடையாது.
இப்பொழுது நடைபெறக்கூடிய தேர்தல் இரண்டு நபர்களுக்கிடையே நடக்கக் கூடிய தேர்தல் அல்ல.
மற்ற தேர்தல்கள் எல்லாம் வேட்பாளர்களில் யார் வெற்றி பெறுவது? யார் தோல்வியடைவது? என்பது தான்.
ஓர் அறப்போர்; லட்சியப் போர்;
கொள்கைப் போர்!
ஆனால், இந்தத் தேர்தல் என்பது இரண்டு தத்துவங் களுக்கு இடையே நடைபெறப் போகின்ற தேர்தல். நேற்றுகூட ராகுல் காந்தி அவர்கள் நெல்லையிலும், கோவையிலும் நம்முடைய முதலமைச்சரை வைத்துக் கொண்டு மிக அழகாகச் சொன்னார்.
இரண்டு தத்துவங்களுக்கிடையில் நடைபெறுகின்ற ஓர் அறப்போர்; லட்சியப் போர்; கொள்கைப் போர்.
அது என்ன இரண்டு தத்துவம்?
அவரே அதையும் சொன்னார், ‘‘பெரியார் என்ற தத்துவம்தான்; அதற்கு நேர் எதிரான தத்துவம் ஆர்.எஸ்.எஸ். – அதற்கு நேர் எதிரானது மதவெறிக் கூட்டம்; அதற்கு நேர் எதிரானது ஜாதி வெறிக் கூட்டம்.
பெரியார் என்பது சமூகநீதி, சமத்துவம்.
எதிரே நிற்கக்கூடிய பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் தத்துவம் என்னவென்றால், மக்களி டையே பேதத்தைக் கற்பிப்பது. மக்களிடையே சமத் துவம் வரக்கூடாது என்று சொல்வது.
இதுதான் கடைசி தேர்தல் -இனிமேல் வாக்கு அளிக்கும் தேர்தலே இருக்காது!
மூன்றாவது முறையாக தப்பித்தவறி, மக்கள் ஆதரவு இல்லாவிட்டாலும், வேறு ஏதாவது வித்தைகள் செய்தோ, வாக்குப் பெட்டிகள் திடீரென்று கருவுற்றோ, திடீரென்று கர்ப்பம் தரித்தோ வந்தால் என்னாகும் தெரியுமா தோழர் களே, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஒழித்துவிட்டு, இதுதான் கடைசி தேர்தல். இனிமேல் வாக்கு அளிக்கும் தேர்தலே இருக்காது.
ஜனநாயகம் என்றால் என்ன அர்த்தம்?
அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும். அதில் மக்களாகிய நீங்கள் சுதந்திரமாக யாரைத் தேர்ந்தெடுக்கவேண்டும்? யாரைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதற்காக வாக்களிக்கும் முறைதான்.
‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளைச் சொல்லித்தானே வாக்குக் கேட்கிறார்கள்!
கடந்த 5 ஆண்டுகளில், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வேட்பாளர்கள், அதனைச் சார்ந்த நம்முடைய திருமாவளவன் போன்ற வேட்பாளர்கள் வரும்பொழுது, என்ன சொல்லி ஒட்டு கேட்கிறார்கள்?
வி.சி.க. சார்பில் தனியே ஒரு தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளைச் சொல்லித் தானே வாக்குக் கேட்கிறார்கள்.
சொன்னதைச் செய்தது மட்டுமல்லாமல், அதையும் தாண்டி செய்திருக்கிறார்கள் என்கின்ற பெருமையோடு கேட்கிறேன்.
சாதனை 1, சாதனை 2, சாதனை 3
மகளிருக்கு, தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுக்கு என்னென்ன நன்மைகளை ‘திராவிட மாடல்’ ஆட்சி செய்ததை என்பதைப்பற்றி இங்கே சொன்னார்களே! அதுபற்றி மணிக்கணக்காகப் பேசிக்கொண்டே இருக் கலாம். நேரமின்மையால் சுருக்கமாக சொன்னார்கள்.
அதுபோன்று, பா.ஜ.க.வில், ஒரே ஒருவர்தான் பிரச்சாரம் செய்கிறார், இந்தியா முழுவதும். நான்தான், நான்தான், நானே ராஜா, நானே மந்திரி என்று சொல்வதுபோன்று. ‘நமோ’, ‘நமோ’ நரேந்திர மோடி. அந்த நரேந்திர மோடி அவர்கள், ஒன்றியத்தில் இரண்டு முறை ஆட்சிக்கு வந்தார். அதிலும், ஏராளமான மெஜா ரிட்டியை மக்கள் கொடுத்த நேரத்தில், மக்களுக்காக, எளிய மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, விவசாயிகளுக்காக, மகளிருக்காக என்ன செய்திருக்கிறார்?
கண்ணை மூடிக்கொண்டு மோடி மீண்டும் வரக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை!
தமிழ்நாட்டிற்கு வந்து என்ன சொல்லுகிறார் பிரதமர் மோடி? ‘‘தி.மு.க.வை நான் ஒழித்தே தீருவேன்” என்று சொல்லுகிறாரே தவிர, அவர் என்ன செய்தார் என்று சொல்லவில்லை.
கண்ணை மூடிக்கொண்டு மோடி மீண்டும் வரக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை; எங்கள் கனவில் அப்படி வந்தது; அதனால், மோடி வரக்கூடாது என்று சொல்லவில்லை.
மோடியை, மக்கள் 2014 இல் நம்பினார்கள். அவரை நம்பி, இளைஞர்கள், நாங்கள் சொன்னதையும் கேட்காமல், மீறி வாக்களித்தார்கள்.
அதற்குக் காரணம், வளர்ச்சி, வளர்ச்சி, ‘குஜராத் மாடல்’ என்று சொன்னார்கள்; மாற்றம் வேண்டும் மாற்ற வேண்டும் என்று சொல்லி இளைஞர்களும் வாக்களித்தார்கள்.
20 கோடி பேருக்கு வேலை கிடைத்திருந்தால்….
அதற்காக அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள்! ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று சொன்னார்கள். அப்படி என்றால், கடந்த 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்கவேண்டும். அப்படி 20 கோடி பேருக்கு வேலை கிடைத்திருந்தால், வேலை வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்கள் அபின் பக்கம், கஞ்சா பக்கம் திரும்பியிருப்பார்களா? என்பதை தயவு செய்து நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
விரக்தி, வேதனை, தற்கொலை இன்னுங்கேட்டால், பல இடங்களில் கொலை, கொள்ளைகள் நடைபெறு கின்றன. இவ்வளவுக்கும் காரணம் என்ன?
வேலையற்ற இளைஞர்கள்.
அதைச் சொல்லும்பொழுது அண்ணா அவர்கள் ஒரு வசனம் எழுதினார்.
வேலையற்றவர்கள் என்றால், அவர்களை வேலை யற்றவர்களாக மட்டும் பார்க்கக் கூடாது. வேலையற்ற வர்கள், அவர்களுடைய நெஞ்சங்களில் விபரீத எண்ணங்கள்.
வேலையில்லாத இளைஞர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதைப் போக்கவேண்டும் என்றால், அது வெறும் சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை யல்ல. ஒரு சமூகப் பிரச்சினையாகும்.
அதனை செய்வதற்காக இத்தனை திட்டங்கள் கொடுத்து – இன்றைக்குத் தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற திராவிட மாடல் ஆட்சியில், வெளிநாடுகளுக்குச் சென்று வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும். எல்லா வகைகளிலும் வேலை வாய்ப்புகளை உரு வாக்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால், ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்று சொன்ன ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு, இந்த 10 ஆண்டுகாலத்தில் 20 கோடி பேருக்கு வேலை கொடுத்ததா என்பதை நினைத்துப் பாருங்கள்.
அதுமட்டுமல்ல, தாய்மார்களைப் பார்த்தும், மற்றவர் களைப் பார்த்தும் சொன்னார்.
இவ்வளவையும் செய்துவிட்டு, நான் ஏழைகளுக் காகத்தான் ஆட்சி நடத்துகின்றேன் என்று சொல்கிறார். இவ்வளவு பேசுகின்ற பிரதமர் மோடி அவர்கள், விவசாயிகளுக்காக என்ன செய்திருக்கிறார்?
ஏற்கெனவே ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைக் கண்டித்து ஓராண்டிற்கு மேல் விவசாயிகள் டில்லியில் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அந்தப் போராட்டத்தை நிறுத்துவதற்காக, வாக்குறுதிகளைக் கொடுத்தார். அந்த வாக்குறுதிகள் என்னவென்றால், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுகிறோம் என்றும், விவசாயிகள்மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுகிறோம்; குறைந்தபட்ச ஆதார விலையை விவசாயப் பொருள் களுக்குத் தருகிறோம் என்பனதான் அவை.
அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதற்காகத்தான் ‘‘டில்லி சலோ” என்று விவசாயிகள் டில்லியை நோக்கி மீண்டும் வந்தனர்.
டில்லி நோக்கி வருகின்ற விவசாயிகளை முள்வேலி, இரும்பு வேலி அமைத்துத் தடுத்தனர். அதையும் மீறி வந்தால்,கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். அதையும் மீறி வந்தவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
திராவிடர் கழகம்
தேர்தல் முடிந்ததும் செய்யும் பணி!
உடையார்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத் தில்கூட நான் சொன்னேன்; ‘‘முந்திரி விவசாயத்திற்கு போதுமான அளவிற்கு ஆதார விலை இல்லை. கோது மைக்கு, கரும்புக்கு, நெல்லுக்கு ஆதார விலை கொடுக் கிறார்கள். ஆனால், முந்திரி விவசாயிகள் பெரிய அள விற்குப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். திராவிடர் கழகம் அவர்களுக்குரிய பணியை தேர்தல் முடிந்ததும் செய்யும்” என்றோம்.
அப்படி விவசாயிகளுக்காக நாம் போராடுகிறோம். ஒன்றிய ஆட்சியினர் விவசாயிகளுக்கு எதிராக நடக்கிறார்கள்.
உலகமகா பொய்யர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இந்தியாவினுடைய நீண்ட வரலாற்றில், இப்படி ஒரு பிரதமர் நாள்தோறும் ஒரு பொய்யை சொல்லக்கூடிய ஒரு பொய் உற்பத்தித் தொழிற்சாலையை நடத்திக் கொண்டிருக்கின்றார்.
பிரதமர் மோடி சொல்கிறார், ‘‘140 கோடி மக்களும் என் குடும்பம்” என்று சொல்கிறார். அப்படி சொல்வது எங்களுக்கும் மகிழ்ச்சிதான். 140 கோடி மக்களும் என் குடும்பம் என்று சொல்லுகின்ற பிரதமர்தான் நமக்கும் வேண்டும்.
சிறுபான்மை சமூகத்தினரை பழிவாங்கக் கூடிய அளவிற்கு ஒன்றிய ஆட்சியை நடத்துகின்றனர்!
ஆனால், கடந்த 10 ஆண்டுகாலத்தில், வடக்கே இருப்பவர்களுக்குத்தான் பிரதமர், குஜராத்தில் இருப்பவர்களுக்குத்தான் பிரதமர். என்னுடைய மதத் தைச் சார்ந்தவர்கள்தான் என்னுடைய குடும்பம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மட்டுமல்ல, அதுபோல் நடந்துகாட்டி, சிறுபான்மை சமூகத்தினரை பழிவாங்கக் கூடிய அளவிற்கு, அவர்களுடைய குடியுரிமைக்குக் கூட ஆபத்தான நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
மணிப்பூர் பழங்குடியின மக்கள்,
பிரதமரின் குடும்பம் இல்லையா?
140 கோடி மக்களும் என் மக்கள் என்று சொல்கிறாரே, பிரதமர் மோடி. வடகிழக்கு மாநிலத்தில், மணிப்பூரில் வாழுகின்ற பழங்குடியின மக்களுக்கு எதிராக அங்கே ஆட்சியாளர்களே கலவரத்தைத் தூண்டி, பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி, தெருத் தெருவாக ஓட விட்டு அவமானப்படுத்தப்பட்டனர். மணிப்பூர் பழங்குடி யின மக்கள், பிரதமரின் குடும்பம் இல்லையா?
அங்கே கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்திய நாட்டின் பிரதமர் ஒருமுறையாவது அங்கே சென்றாரா?
தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகிறார்; உலக நாடு களுக்குச் செல்கிறார். ஆனால், மணிப்பூர் பக்கமே அவர் கால் வைக்கவில்லை என்றால், அங்கே இருக்கின்ற மக்கள் அவருடைய குடும்பம் இல்லையா?
அங்கே பாதிக்கப்பட்டவர்களை நேரிடையாகச் சென்று சந்தித்தவர்கள் யார் தெரியுமா?
பாதிக்கப்பட்ட மக்களுக்கு
ஆறுதல் கூறியவர்கள் யார்?
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியைச் சேர்ந்த, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூருக்குச் சென்றார்கள். கனிமொழி, திருமாவள வன் உள்ளிட்டோர் சென்று, அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். இளந்தலைவர் ராகுல்காந்தி அவர்கள் நேரிடையாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் சொல்லாததால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா?
நாகாலந்து, மேகாலயா மாநிலங்களில் பா.ஜ.க. தேர்த லில் நிற்காது. நிற்பதற்கு அவர்களுக்குத் தைரியம் கிடையாது.
இந்தியா கூட்டணிக்குப் பயந்து முதல் தோல்வியை அந்த மாநிலங்களில்தான் மோடி அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றார்.
தமிழ்நாட்டில், பா.ஜ.க.வினர் கூட்டணிக்காகக் கதவைத் திறந்து வைத்திருக்கின்றோம் என்றார்கள். பிறகு கதவையே கழற்றி வைத்துவிட்டோம் என்றார்கள்.
பா.ஜ.க.விற்கு முன்பு ஜீரோ மதிப்பெண் போட்டவர் பா.ஜ.க. கூட்டணிக்குச் சென்றிருக்கிறார்!
கதவைத் திறந்தாலும், ஜன்னலைத் திறந்தாலும் ஒருவரும் அங்கே செல்லவில்லை. ஆனால், அதற்குப் பிறகு இங்கே ஒருவர் உள்ளே போனார். அவர் யாரென்றால், பா.ஜ.க.விற்கு முன்பு ஜீரோ மதிப்பெண் போட்டவர். இப்பொழுது அவர் நூறு மதிப்பெண் போடுகிறார். ‘நாங்கள் புதிதாய் கட்டிக்கொண்ட ஜோடிதானுங்க’’ என்று சொல்கிறார்கள். நூறு மதிப்பெண் போட்டதற்குக் காரணம் என்னவென்றால், பேப்பர் திருத்தும்பொழுது என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும்.
நீண்ட நாள்களாக இருக்கின்ற வழக்கு திரிசூலத்தில் மாட்டியிருக்கிறது. அதனால்தான் நூறு மார்க் போட்டிருக்கிறார் அவர்.
மணிப்பூரில் நடந்த கொடுமைகளை உலகமே கண்டிக்கிறது. ஆனால், இன்னமும்கூட அங்கே போவதற்குப் பிரதமர் மோடி தயாராக இல்லை.
அதேபோல், தமிழ்நாட்டில், வரலாறு காணாத மழை யால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற வரவில்லை பிரதமர் மோடி.
ஆனால், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் வருகிறார், ஒன்றிய நிதியமைச்சர் வருகிறார்; நிவாரணக் குழு இரண்டு வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார் வையிட்டு, அறிக்கையை ஒன்றிய அரசிடம் கொடுக் கிறது.
தேசியப் பேரிடராக அதனை அறிவிக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டு, நிவாரண நிதியை அளிக்கவேண்டும் என்று கேட்டது.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து, தமிழ்நாட்டின் கோரிக்கையை வலியுறுத்தினர்.
அதற்குப் பிறகு, நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள், பிரதமர் மோடியை நேரிடையாகச் சந்தித்து நிவாரண நிதி கேட்டார்.
ஒன்றிய அரசு திரும்பக் கொடுப்பது
வெறும் 29 பைசாதான்!
ஒரு பைசாவைக்கூட நிவாரண நிதியாக தமிழ் நாட்டிற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு கொடுக்கவில்லை.
அதேநேரத்தில், ஜி.எஸ்.டி. வரியாக தமிழ்நாட்டி லிருந்து ஒரு ரூபாய் வாங்கினால், ஒன்றிய அரசு திரும்பக் கொடுப்பது வெறும் 29 பைசாதான்.
உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது!
உத்தரப்பிரதேசத்திற்கு அவர்கள் கொடுப்பது போன்று, மூன்று மடங்கு திரும்பக் கொடுக்கிறது ஒன்றிய அரசு. உச்சநீதிமன்றம் அதனைக் கடுமையாகக் கண் டித்தது.
ஆகவே, 140 கோடி மக்களும் உங்கள் குடும்பம் என்று நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால், நிவாரண நிதியைத் தரவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல்கூடச் சொல்லவில்லையே!
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய நாள்தான் வருகின்ற 19 ஆம் தேதி என்பதை மறந்து விடாதீர்கள்.
பத்திரிகைகளில் முன்பு கருத்துக் கணிப்பு வெளியிட்டார்கள். 400 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று. மீண்டும் மோடிதான் பிரதமராக வருவார் என்று. இப்பொழுது அந்த சுரம் இறங்கிப் போய், 170 இடங்களில்தான் வெற்றி பெறும் பா.ஜ.க. என்று சொல்கிறார்கள்.
கருத்துக் கணிப்புகளை நாங்கள் எப்பொழுதும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. எங்களுக்குச் சாதக மாக இருந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. காரணம், அது கருத்துத் திணிப்பு.
ஒன்றிய பா.ஜ.க. அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டார்கள்
ஆனால், நாங்கள் சொல்வது என்பது காரண காரியங் களை வைத்துத்தான் சொல்வோம். மக்களின் நாடியை நாள்தோறும் பிடித்துப் பார்ப்பவர்கள் நாங்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசை
வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டார்கள்.
தாய்மார்களுக்கு நன்றாகத் தெரியுமே, விலைவாசி உயர்வால் அவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
2011 ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை என்ன?
இப்பொழு அவற்றின் விலை என்ன?
சமையல் எரிவாயு உருளையின் விலை அப்பொழுது என்ன? இன்றைக்கு என்ன விலை?
தேர்தல் வருகின்ற காரணத்தினால், விலையைக் குறைத்திருக்கிறார்கள்.
பன்னாட்டு சந்தையில் கச்சாப் பொருள் ஒரு பீப்பாயின் விலை 111 டாலராக இருந்தது. கச்சாப் பொருள் விலை ஏறும்பொழுது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை ஏற்றினார்கள். சரி, இப்பொழுது கச்சாப் பொருள் ஒரு பீப்பாயின் விலை 77 டாலராகக் குறைந்திருக்கிறது.
அப்படியென்றால், கச்சாப் பொருள் விலையேற் றத்தின்போது, விலையை ஏற்றியவர்கள், அதன் விலை குறையும்போது, பெட்ரோலியப் பொருள்களின் விலையைக் குறைத்திருக்க வேண்டும் அல்லவா? குறைக்கவில்லை.
அந்தப் பணம் எல்லாம் எங்கே போயிற்று?
பிஎம்.கேர்ஸ் என்று சொல்லக்கூடியதில்தான் போயிற்று. அதற்கு என்ன கணக்கு என்று நாடாளு மன்றத்தில் உறுப்பினர்கள் கேட்டால், அதெல்லாம் கேட்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் பா.ஜ.க.விற்கு நன்கொடை கொடுத்திருக்கின்றன!
அதேபோன்றுதான் தேர்தல் பத்திரத் திட்டம். லாபத் தில் வருகின்ற நிறுவனங்கள்தான் நன்கொடை கொடுக் கும். ஆனால், நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் பா.ஜ.க.விற்கு நன்கொடை கொடுத்திருக்கின்றன.
ஆகவே, அதற்குப் பெயர் நன்கொடையா? வன்கொடையா?
நன்கொடை கொடுக்கவில்லை என்றால், மோடி அவர்கள் திரிசூலத்தைக் காட்டுவார்.
அந்தத் திரிசூலத்தின் ஒருமுனை சி.பி.அய்.
இரண்டாவது முனை வருமான வரித் துறை
மூன்றாவது முனை அமலாக்கத் துறை.
இவற்றைக் காட்டி மிரட்டித்தான் நன்கொடைகளைப் பெற்றிருக்கிறது பா.ஜ.க.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமலாக்கத் துறையின் காரணமாக, இரண்டு மாநில முதலமைச்சர்கள் சிறைச் சாலையில் இருக்கிறார்கள்.
ஒருவர் ஜார்க்கண்ட் முதலமைச்சர் அவர்கள். இரண் டாவது டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்கள்.
வெயிலின் வெப்பத்தைவிட
மோடி ஆட்சியின் கொடுமை கடுமையானது!
நேற்றுகூட நம்முடைய தோழர்கள் என்னிடம் சொன்னார்கள், ‘‘என்னங்க, வெயில் இவ்வளவு கடுமை யாக இருக்கிறதே, 106 டிகிரிக்கு வெயில் அடிக்கிறதே, நீங்கள் தேர்தல் பரப்புரைக்குச் செல்லவேண்டுமா?” என்று.
வெப்பம் கடுமையாகத்தான் இருக்கிறது, அதிலொன் றும் சந்தேகமேயில்லை. ஆனால், மோடி ஆட்சி, அதைவிடக் கடுமையானதாயிற்றே. கடுமையைக்கூட புரிந்துகொள்ளலாம்.
கடுமையான வெப்பம், கடுமையான சோதனை, கடுமையான விளைவுகளை ஏற்றுக்கொள்ளலாம். கொடுமையை ஏற்றுக்கொள்ள முடியுமா?
ஆகவே, ஒன்றிய ஆட்சியின் கொடுமைகளை நாம் மக்களிடையே எடுத்துச் சொல்லவேண்டும் என்பதற் காகத்தான் தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறோம் நாங்கள்.
ஒன்றிய ஆட்சியின் கொடுமைகளை உலக நாடு களும் தெரிந்துகொண்டன. இந்தியா முழுவதும் தெரிந்து விட்டது.
தமிழ்நாட்டிற்கு மோடி அடிக்கடி வந்தார் என்றாலும், தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய அளவிற்கு வாக்குகளைப் பெறும்.
பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ நடத்திய இடமே, தியாகராயர் நகர் – நீதிக்கட்சி – திராவிட இயக்கம் சார்ந்தது
சென்னை தியாகராயர் நகரில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். அவர் ரோடு ஷோ நடத்திய இடமே, தியாகராயர் நகர் – நீதிக்கட்சி – திராவிட இயக்கம் சார்ந்தது. கூடுதல் செய்தி என்னவென்றால், அவர் ‘ரோடு ஷோ’ தொடங்கிய இடம், ‘பனகல் பூங்கா’ – பனகல் அரசர்தான், பெண்களுக்கு வாக்குரிமை கொடுத் தார் முதன்முதலில்.
நம்முடைய தலைவர்கள் யாரும் ‘ஷோ’ காட்டுபவர்கள் கிடையாது
இரண்டு கிலோ மீட்டர் ‘ரோடு ஷோ’ நடத்தினார். ஷோ என்றாலே என்னவென்று உங்களுக்கெல்லாம் தெரியும். நம்முடைய தலைவர்கள் யாரும் ‘ஷோ’ காட்டுபவர்கள் கிடையாது.
நேற்றுகூட நம்முடைய இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்கள், கோவை விமான நிலையத்தில் இறங்கி, சாலை வழியாக கூட்டம் நடைபெறும் இடம் நோக்கி கார்மூலம் செல்கிறார்.
ஓரிடத்தில் காரை நிறுத்தச் சொல்லி, இனிப்புக் கடைக்குச் சென்று, இனிப்பை வாங்கிக்கொண்டு வந்து, நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கொடுத்தார்.
காரணம், வெற்றி நிச்சயம் என்பதினால்.
மக்கள் சூழ்ந்திருக்கின்ற இடங்களுக்குச் சென்று
வாக்கு சேகரிக்கிறார் நம்முடைய முதலமைச்சர்!
நம்முடைய முதலமைச்சர் என்ன செய்தார் தெரியுமா? அவருக்கு ‘ஷோ’ காட்டுவதெல்லாம் தெரி யாது. எங்கே தங்குகிறாரோ, அன்று காலையில், மக்க ளோடு மக்களாக சென்று டீ சாப்பிடுகிறார். மக்கள் சூழ்ந் திருக்கின்ற இடங்களுக்குச் சென்று வாக்கு சேகரிக்கிறார்.
ஆனால், மோடியின் ‘ரோடு ஷோ’ நடக்கும்பொழுது ஒரு கடைகள்கூட திறந்திருக்காது. ஒரு டீக்கடை கூட இருக்கக் கூடாது என்பது உத்தரவு. புதிய ஆள் யாராவது இருந்தால், யார் அது? யார் அது? என்று விசாரணை நடக்கும். பா.ஜ.க. அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும்தான் இருக்கவேண்டும் என்றால், அது ரோடு ஷோவா?
அடிக்கடி நீங்கள் ரோடு ஷோ நடத்தினால், அது மக்களுக்கு நன்றாகப் புரிந்துவிடும்.
இந்தியா கூட்டணித் தலைவர்கள் ‘ரோடு ஷோ’ நடத்துவதில்லை; ஏனென்றால், எப்பொழுதும் மக்க ளோடு மக்களாக இருக்கக்கூடியவர்கள் அவர்கள். அந்த ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. ஒப்பற்ற முதலமைச்சர்தான் இங்கே இருக்கிறார் என்பதை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்.
மோடி ஆட்சிக்குக்
கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது!
விண்வெளியில் ராக்கெட் விடுவதற்காக கவுண்ட் டவுன் சொல்வார்கள், 10, 9, 8, 7, என்று. அதுபோன்று மோடி ஆட்சிக்குக் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது.
இது ஒரே நாளில் தொடங்கியது அல்ல. நம்முடைய தமிழ் வைத்தியர்கள் சொல்வார்கள்; ஒரு மண்டலம் மருந்து சாப்பிடுங்கள் என்று. அதுபோன்று, மோடி ஆட்சிக்கு இன்னும் 40 நாள்கள்தான்.
நன்றாக நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 40 நாள்கள் ஆனாலும் சரி, இன்னும் 400 நாள்கள் ஆனாலும் சரி, மீண்டும் மோடி என்பது கிடையாது. இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு…
ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றியத்தில் அமையப் போகும் ஆட்சி இந்தியா கூட்டணி ஆட்சி தான் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்ட ஒன்று.
குஜராத்திலே அவர்கள் பழைய எண்ணிக்கையில் வெற்றி பெற முடியாது. உத்தரப்பிரதேசத்திலும் அப்படித் தான்.
குஜராத்தில், ஜாதிப் பிரச்சினையை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.
பானை சின்னம் – எளியோரின் சின்னம்!
ஆகவே, உங்களைப் பார்த்து அன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன். ஏப்ரல் 19 தேதியன்று, தாய்மார் களே, பெரியோர்களே, விவசாயிகளே நீங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று, அங்கே நம்முடைய அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பானை சின்னத்தில் நிற்கிறார்.
பானை சின்னம் என்பது சாதாரண, எளிமையான சின்னம். பொங்கல் பானையில் வைப்பார்கள். அந்தப் பானைச் சின்னத்தைக் கொடுப்பதற்கு எவ்வளவோ சங்கடங்களை உண்டாக்கினார்கள்.
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டாமா?
பா.ஜ.க.வின் கூட்டணியில் சேருபவர்களுக்கு, அவர்களுடைய சின்னத்தைக் கேட்பதற்கு முன்னரே, தேர்தல் ஆணையம் ஒதுக்கும். ஆனால், எதிர்க்கட்சி களை இழுத்தடிக்கும்.
ஆகவே, இதுபோன்ற கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டாமா?
ஆகவே, 19 ஆம் தேதி வாக்குச் சாவடிக்குச் செல் லுங்கள் – அங்கே திருமாவளவன் பெயருக்கு நேரே, பானை சின்னம் இருக்கும்.
இன்னொரு தகவலைச் சொல்கிறேன்; பெரிய பெரிய ஓட்டலுக்குச் சென்றால், பானை சாப்பாட்டைத்தான் விரும்பி சாப்பிடுகிறார்கள், மக்கள்.
முன்பு, பழைய சோற்றை பானையில் வைத்து, மறுநாள் சாப்பிடுவோம். இதுதான் ஏழையினுடைய மிக முக்கியமான சின்னம்.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும்!
பானைச் சின்னம் எங்கே இருக்கிறது என்று பார்த்து, அதற்கு நேரே இருக்கின்ற பொத்தானை அழுத்துங்கள். பச்சை விளக்கு எரியும். அங்கே பச்சை விளக்கு எரிந்தால், உங்கள் வீட்டில் விளக்கு எரியும், நாட்டில் விளக்கு எரியும்; இருட்டுப் போகும்; வெளிச்சம் பரவும்.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும். சமநீதி, ஜாதி ஒழிப்பு அத்தனையும் நமக்குக் கிடைக்கும்.
மீண்டும் வெற்றி விழாக்
கூட்டத்திற்கு வருவோம்!
மீண்டும் ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு நாம் சந்திக்கப் போவது ஒரு புதிய ஆட்சி – இந்தியா கூட்டணியின் ஆட்சி!
மறவாதீர், பானைச் சின்னம்!
வெற்றி! வெற்றி! வெற்றி!
மீண்டும் வெற்றி விழாக் கூட்டத்திற்கு வருவோம் என்று சொல்லி, என்னுரையை முடிக்கின்றேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
பொருளாதாரத்தில் பிரதமர் மோடி செய்த கோமாளித்தனம்!
‘‘தாய்மார்களே, 15 லட்சம் ரூபாய் உங்கள் வங்கிக் கணக்கில் போடப் போகிறேன்; உங்களுக்கு வங்கிக் கணக்கு இருக்கிறதா?” என்று கேட்டார் மோடி.
தாய்மார்களுக்குக், குறிப்பாக கிராமப்புற தாய்மார் களுக்கு வங்கிக் கணக்கு என்றால், என்னவென்று தெரியாது. உடனே அவர்கள் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தையெல்லாம் கொண்டு போய் வங்கிக் கணக்கைத் தொடங்கினார்கள்.
என்னாயிற்று?
10 ஆண்டுகாலமாயிற்று, அவர்களுடைய கணக் குக்கு 15 லட்சம் ரூபாய் விழவில்லை.
அதற்குப் பதில், ஏற்கெனவே பணம் வைத்திருந் தார்களே நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் – அவர்கள் வைத்திருந்த ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டு செல்லாது என்றார் – பணமதிப்பிழப்பைக் கொண்டு வந்தார்.
யாரையும் கேட்கவில்லை; ஒன்றிய நிதியமைச்சராக இருந்த அருண்ஜெட்லியைக் கேட்கவில்லை; ஒன்றிய அமைச்சர்களுக்கே இது தெரியாது.
இரவு நேரத்தில் மோடி பேசினார், ‘‘2000 ரூபாய் நோட்டுகள் புதிதாக வரப் போகிறது. இருக்கின்ற 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது” என்றார்.
அதனால், எத்தனை உயிர்கள் பலியாயின! எத்தனை ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன!! என்பதுபற்றிய விவரங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும்.
ஆனால், 2000 ரூபாய் நோட்டுகளை எங்கே அச் சடித்தார்கள் என்றால், சீனாவில்தான். அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை இவர்தான் கொண்டு வந்தார்.
பிறகு சில ஆண்டுகளில், கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தப் போகிறோம் என்று சொல்லி, இவர் புதிதாகக் கொண்டு வந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை செல்லாது என்று அவரே சொன்னார்.
இதுபோன்ற அரசியல் இயலாமை, கோமாளித்தனம் உலகத்தில் வேறு எந்த நாட்டிலாவது உண்டா?