அந்தோ! புலவர் வேட்ராயன் மறைந்தாரே! தமிழர் தலைவர் இரங்கல்

1 Min Read

அரசியல்

தருமபுரி மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவரும், கழகமே மூச்சு என்று பாடுபட்ட வரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான மானமிகு புலவர் வேட்ராயன் அவர்கள் சாலை விபத் தில் இன்று காலை  (17.9.2023) மரணமுற்றார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

தருமபுரி மாவட்டக் கழகத் திற்குப் பெருந் தூணாக விளங்கி யவர்; கட்டுப்பாடுமிக்க கழகப் போராளி!

அவர் பிரிவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல; கழகத் திற்கே பெரும் இழப்பாகும். அவர் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியுள்ள குடும்பத்தினருக்கும், கழகத் தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

அவர்தம் அரும்பெருந் தொண்டுக்கு வீரவணக்கம் செலுத்து கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை
17.9.2023

 குறிப்பு: தலைமைக் கழக அமைப்பாளர்  ஊமை செயராமன் தலைமையில் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்துவர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *