திண்டிவனம், ஏப், 13- தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விழுப்புரம் நாடாளு மன்றத் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா கூட்டணி வேட்பாளர் துரை.ரவிக் குமார் அவர்களை ஆதரித்து பரப்புரை செய் தார்.
18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து மேற்கொண்டுள்ள சுற்றுப் பயணத்தின் 11 ஆம் நாளில் விழுப்புரம் தொகுதி திண்டிவனம் காந்தியார் திடலில் வி.சி.க. வேட்பாளர் துரை.ரவிக்குமார் அவர் களை ஆதரித்து உரையாற்றினார். இந்நிகழ் வில் மாவட்டத் தலைவர் அன்பரசன் தலை மையில், மாவட்டச் செயலாளர் பரந்தாமன் அனைவரையும் வரவேற்றுச் சிறப்பித்தார். தொடக்க உரையாக கழகப் பொதுச்செயலா ளர் முனைவர் துரை. சந்திரசேகரன் உரை யாற்றினார்.
28 கட்சிகளை ஒருங்கிணைத்தது திராவிடம் தான்!
இறுதியாக ஆசிரியர் பேசினார். ”ராக்கெட் ஏவும்போது கவுண்ட் டவுன் என்று சொல் வார்கள்” என்று தொடங்கி, ”இன்னும் 5 நாள்கள் தான் உள்ளன” என்று நினைவுபடுத் தினார். மேலும் அவர், மோடி மக்களின் ஒருமித்த செல்வாக்குடன் வெற்றி பெற்றுவிட வில்லை என்பதை, “அவர் பெற்றது 37% தான். மீதி 63% பேர் அவருக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். சிதறிக்கிடந்த அந்த எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைத் ததுதான் திராவிடம் செய்த சாதனை!” என்று பெருமிதத்தோடு சுட்டிக்காட்டி, “ஜூன் 5 ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு இந்தியா கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும்” என்று அறுதியிட்டுச் சொன்னார். அதைக்கேட்டு மக்கள் வெளிப் படுத்திய உற்சாகம் ஆசிரியரை பரவசப் படுத்தியது. அதற்கு இன்னமும் நியாயம் செய்ய, “இது சோதிடம் அல்ல; கருத்துக் கணிப்புகளை வைத்துச் சொல்லவில்லை. மக்கள் கணிப்பை வைத்துச் சொல்லுகிறோம்” என்றார் பலத்த கரவொலிகளுக்கிடையே! அதற்கு ஆதாரமாக மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டாக்டர் எஸ்.ஒய்.குரேசி தனது டிவிட்டரில் நையாண்டியாக போட்டி ருந்த ஒரு பதிவை சுட்டிக்காட்டினார். “அந்த ஊர் அண்ணாமலை” என்று ஆசிரியரால் வர்ணிக்கப்பட்ட ஒன்றிய அமைச்சர் ரூபாலா வின் வாய்த்துடுக்கையும், ராஜ்புத் சமூகம் இன்று பெரும் கொந்தளிப்புக்கு ஆட்பட்டி ருப்பதை எடுத்துரைத்தார்.
கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியாதீர்கள்!
தொடர்ந்து ஆசிரியர், தி.மு.க. தேர்தல் அறிக்கை, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இரண்டையும் ஒப்பிட்டுப் பேசி, “இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் விலக்கு நிச்சயம் கிடைக்கும்” என்று நம்பிக் கையுடன் தெரிவித்ததும் மக்கள் அதை வரவேற்கும் விதமாக ஆரவாரம் செய்தனர். பிறகு மோடி ஆட்சிக்கு ஜீரோ (0) மதிப்பெண் கொடுத்தவர் – இன்று 100 மதிப்பெண் கொடுத்தது போல் பேசுவதை நையாண்டி செய்தார். சமூகநீதி வரலாற்றில் அவர்கள் என்னென்ன கோளாறுகளை நடத்திக்காட்டி னர் என்பதை சுருக்கமாக விளக்கினார். தொடர்ந்து, ”திராவிடக் கற்கோட்டை மீது கண்ணாடி வீட்டிலிருது கல்லெறியாதீர்கள்!” என்று சம்பந்தப்பட்டவர்களை எச்சரித்தார். “அந்தக் கூட்டணி தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சேர்ந்துள்ளனர். இந்தக் கூட்டணி மக்களைக் காப்பதற்காக சேர்ந்து உள்ளது” என்று நாகரிகமாக விமர்சித்துப் பேசினார். மேலும் அவர், “இந்திய அரச மைப்புச் சட்டத்தை பா.ஜ.க. என்ற கறையான் அரித்துவிட்டது” என்று கடுமையாக விமர் சனம் செய்தார். தமிழ்நாட்டில் சென்னை, தென்மாவட்டங்களில் ஏற்பட்ட பெரு வெள்ளப் பேரிடர் காலத்திலும், மணிப்பூரிலும் மோடி அரசு நடந்துகொண்ட விதத்தையும் விமர்சனம் செய்த ஆசிரியர், “140 கோடி மக்களும் என் குடும்பம் என்று பேசுகின்றார் மோடி. அப்படிப்பட்ட ஒரு பிரதமர் உண்மை யாகவே தேவைதான்! அந்தப் பிரதமர் நிச்சயம் மோடி அல்ல. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று அப்படியொரு பிரதமர் நிச்சயம் வருவார்” என்று உத்தரவாதம் கொடுத்தவுடன் மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்தனர்.
தொடர்ந்து ஊழலை ஒழிக்க வந்த உத்த மர்கள் செய்த ஊழல்களை பட்டியலிட்டு, “மோடியை; பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்ப, பானை சின்னத்தில் வாக்களித்து துரை. ரவிக்குமார் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்து தனது உரையை நிறைவு செய்தார். முன்னதாக மேடையில் வெளியிட்ட நான்கு புத்தகங்கள் அடங்கிய ரூ.1000 மதிப்புள்ள 10 தொகுப்புகளை ரூ. 10,000/- கொடுத்து ஆசிரியரிடமிருந்து மாண்புமிகு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் பெற்றுக்கொண் டார். இந்தியா கூட்டணியின் பொறுப்பாளர் களும் ஆசிரியரிடம் புத்தகத் தொகுப்புகளை உரிய தொகை வழங்கி பெற்றுக்கொண்டனர்.
முன்னிலையேற்று சிறப்பித்தவர்கள்!
ஆசிரியர் பேசுவதற்கு முன்பாக தி.மு.க. விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் செஞ்சி மஸ்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் வன்னியரசு, தி.மு.க. நகரச் செயலாளர் கண்ணன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மணி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சிப் பொறுப்பாளர் முத்துக்குமார், ஆதித்தமிழர் கட்சி கொள்கைப் பரப்புச் செயலாளர் கலையரசு ஆகியோர் முன் னிலையேற்று உரையாற்றினர். தி.மு.க. திண்டிவனம் தொகுதிப் பொறுப்பாளர் ரமணன், வி.சி.க. மாவட்டச் செயலாளர் மலைச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சவுரிராஜன், தி.மு.க. மயிலம் ஒன்றியச் செயலாளர் சேதுநாதன், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் சீனி ராஜ், வி.சி.க. நகர செயலாளர் பூபால் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். திராவிடர் கழகம் சார்பில் விழுப்புரம் நகரச் செயலாளர் பழனிவேல், பொதுக்குழு உறுப் பினர் விஜயலட்சுமி தாஸ், திண்டிவனம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நவா ஏழுமலை, விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் கோபண்ணா, விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் திருநாவுக்கரசி, இந்தியா கூட்டணிக் கட்சி களின் பல்வேறு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தம்பி பிரபாகரன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
நீங்கள் உத்தமர் தானா?
கொஞ்சம் சொல்லுங்கள் மோடி அவர்களே!
இந்திய நாட்டை யார் ஆள வேண்டும்? யார் ஆளக்கூடாது? என்பதை தெளிந்து, அறிந்து ஒரு முடிவுக்கு வரவேண்டிய நாடாளுமன்றத் தேர்தல் இது. மூன்றாண்டு களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கினார்கள்.அதனால் அனைத்து மக் களின் இல்லங்களிலும் முத்துவேல் கருணா நிதி ஸ்டாலின் குரல் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. பல்வேறு நலத்திட்டங்கள் இன் றைக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருக் கின்றன. சொன்னதை செய்யும் திராவிட மாடல் அரசான தமிழ்நாடு இன்றைக்கு எல்லா துறைகளிலும் முன்னேற்றம் காண பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் சொன்னதை செய்யாத மோடி இன்றைக்கு ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக சொன்ன பொய்யை திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறார். பலரும் மோடியைக் கண்டு அச்சப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
மோடியும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் மோடியைக் கண்டு அஞ்சாத ஒருவராக முத்துவேல் கருணாநிதி ஸ்டா லின் இருப்பதால் மோடி அவரைக்கண்டு மிரளுகிறார்.
மோடி வெளிநாடுகளுக்கு அதிகமாக செல்லக்கூடியவர். ஏன் போனார்? எதற்காக போனார்? நான் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் சார்ந்த துறையில் இருப்பதால் அதிகாரபூர்வமாக ஒரு பட்டியலை உங்கள் மத்தியில் வெளியிடுகிறேன். ஆஸ்திரேலியா சென்றார்; நிலக்கரி ஒப்பந்தம் சம்பந்தமாக, பிரான்சுக்குச் சென்றார்; ரஃபேல் விமானம் பற்றி பேசுவதற்காக, ஸ்வீடன் நாட்டுக்குச் சென்றார்; கடற்படைக்கு ஆளில்லாத விமானம் உருவாக்குவதற்காக, மலேசியா சென்றார்; துறைமுகம் விரிவாக்கத்திற்காக, வங்கதேசம், பாகிஸ்தான் சென்றார், மின்சார ஒப்பந்தம் செய்வதற்காக, சீனா சென்றார்; 36 ஒப்பந்தங்கள் போடுவதற்காக, ஜப்பான் சென்றார்; கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதுவரையில் தகவல் கிடைக்கவில்லை. மொசாம்பி சென்றார்; பருப்பு வகை இறக்கு மதி செய்வதற்காக, இஸ்ரேல் சென்றார்; வான்வெளி ஏவுகணை ஏவுவதற்காக, ரஷ்யா சென்றார்; ராணுவ ஆயுத உற் பத்தியை பார்வையிடுவதற்காக, மியான்மர் சென்றார்; மின்சார விற்பனைக்காக, அமெ ரிக்கா சென்றார்; 7 ஆவது கடற்படையை பார்வையிடுவதற்காக, ஓமன் சென்றார்; அதற்கும் இதுவரையில் தகவல் பெறப்பட வில்லை. இந்த குறிப்புகள் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களின் உதவியோடு பெறப்பட்டிருக்கின்றது. மோடி சொல்கிறார், இமயம் முதல் குமரி வரை இருக்கின்ற மக் களுக்காக நான் உழைக்கின்றேன்; 140 கோடி மக்களும் என் குடும்பம் என்று சொல்கிறார். ஆனால் நீங்கள் சென்றதெல் லாம் அதானிக்காகத்தான் என்பது நாடறிந்த விசயம். எவ்வளவு தெரியுமா? ரூ.6,70,900 கோடி.அதானிக்காக-இதையெல்லாம் பெறு வதற்காகத்தான் மோடி வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். இதையெல்லாம் பார்த்த பிறகு மோடி உத்தமர் தான் என்பதை சொல்லுகின்ற தோழர்கள் என்ன பதில் சொல்வார்கள்?
ஒரு கிராமத்தில் பரப்புரைக்குச் சென் றிருந்த போது, ஒரு பெரியவர், “சிறிய திரு டர்கள் சட்டத்தைப் பார்த்து அஞ்சுவதும், பெரிய திருடர்களைப் பார்த்து சட்டமே அஞ்சுவதும் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஏராளமாக நடைபெறுகின்றது” என்று சொன்னார். ஆகவே இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று சொன்னால் இந் தியா கூட்டணி சார்பில் விழுப்புரத்தில் போட்டியிடும் வி.சி.க. வேட்பாளர் துரை ரவிக்குமார் அவர்களுக்கு பானை சின்னத் தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
(திண்டிவனத்தில் அமைச்சர்
செஞ்சி மஸ்தான்-12.04.2024)