சென்னை,ஏப்.13– முதுகலை படிப்புக ளில் சேர ஏப்.15ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் நேற்று (12.4.2024) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பல்கலை. பதிவாளர் ஏழுமலை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை பல்கலைக்கழகம் பல் வேறு பாடப் பிரிவுகளில் முதுகலை பட்டப் படிப்புகள், முதுகலை டிப்ளமா, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்பு களை வழங்கி வருகிறது.
வரும் கல்வி ஆண்டில் (2024-2025) இப்படிப்புகளில் சேருவதற்கான இணைய வழியில் விண்ணப்பப் பதிவு ஏப். 15ஆம் தேதி தொடங்குகிறது.
படிப்புகளின் விவரம், அவற்றுக்கான கல்வித் தகுதி, கல்விக் கட்டணம், மாணவர் சேர்க்கை நடைமுறை உள் ளிட்ட இதர தகவல்களை பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.uஸீஷீனீ.ணீநீ.வீஸீ) விரிவாக அறிந்துகொள்ள லாம் என்று கூறியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பில் சேர ஏப்ரல் 15 முதல் விண்ணப்பம்
Leave a Comment