சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பில் சேர ஏப்ரல் 15 முதல் விண்ணப்பம்

1 Min Read

சென்னை,ஏப்.13– முதுகலை படிப்புக ளில் சேர ஏப்.15ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் நேற்று (12.4.2024) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பல்கலை. பதிவாளர் ஏழுமலை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை பல்கலைக்கழகம் பல் வேறு பாடப் பிரிவுகளில் முதுகலை பட்டப் படிப்புகள், முதுகலை டிப்ளமா, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்பு களை வழங்கி வருகிறது.
வரும் கல்வி ஆண்டில் (2024-2025) இப்படிப்புகளில் சேருவதற்கான இணைய வழியில் விண்ணப்பப் பதிவு ஏப். 15ஆம் தேதி தொடங்குகிறது.
படிப்புகளின் விவரம், அவற்றுக்கான கல்வித் தகுதி, கல்விக் கட்டணம், மாணவர் சேர்க்கை நடைமுறை உள் ளிட்ட இதர தகவல்களை பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.uஸீஷீனீ.ணீநீ.வீஸீ) விரிவாக அறிந்துகொள்ள லாம் என்று கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *