சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை!

Viduthalai
2 Min Read

தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

சென்னை, ஏப்.13– சென்னை மெட்ரோ ரெயில் 2ஆம் கட்ட திட்டத் துக்கு ஒன்றிய அரசு ஒரு ரூபாய்கூட நிதி வழங்கவில்லை என்று தயாநிதி மாறன் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்ற தேர்தல் வரு கிற 19ஆம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரசாரங்கள் வருகிற 17ஆம் தேதியுடன் நிறை வடைகிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 6 நாட்களே இருப்ப தால், அரசியல் கட்சிகள் சுட் டெரிக்கும் வெயிலிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன், துறைமுகம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 59ஆவது வார்டு எஸ்.எம். நகர், காந்தி நகர் ஆகிய பகுதியில் நேற்று (12.4.2024) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
அவரு டன்,தி.மு.க.சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆகியோரும் இணைந்து பிரசாரம் மேற் கொண்டார்கள்.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் வசிக்கும் எஸ்.எம்.நகர் பகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை. பூசணி சுற்றியும், ஆரத்தி எடுத் தும் உற்சாகமாக வரவேற்றார்கள்.

40 தொகுதிகளிலும் வெற்றி
இதையடுத்து, மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறன் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:-
மத்திய சென்னையில் எங்கு சென்றாலும் மக்கள் உற்சாக மாக தங்கள் ஆதரவை வழங்குகிறார் கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மகளிர் உரிமைத் தொகை, அனைத்து பெண்களுக்கும் சென்றடைந்துள் ளது. தி.மு.க. அரசு கடந்த 3 ஆண்டு களில் தேர்தல் அறிக்கை யில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது.
இதன் காரணமாக எங்கள் மீது மதிப்பு காட்டுகிறார்கள். இதன் காரணமாக, கடந்த தேர் தலைவிட, இந்த தேர்தலில் அதி களவிலான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தி.மு.க. கூட் டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளி லும் நிச்சயம் வெற்றி பெறும்.

எய்ம்ஸ் மருத்துவமனை?
தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தன்னுடைய அலைபேசியை உளவுத்துறை ஒட்டு கேட்பதாக கூறுகிறார். அவர் ஒரு காமெடியன். செய்தியில் வர வேண்டும் என்பதற்காக பேசு கிறார்.
வெள்ள பாதிப்புக்கான நிவா ரண தொகையை பிரதமர் மோடி யிடம் முதல்- அமைச்சர் பல முறை கேட்டுள்ளார். அப்போது, பிரதம ருக்கு காது கேட்கவில்லை. ஆனால், அண்ணா மலை குறித்து விமர்சித்தது மட்டும் பிரதமரின் காதில் கேட் டுள்ளது.
தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி 8 முறை தமிழ்நாட்டிற்கு வெறும் கையுடன் வருகை தந்துள் ளார். ஒன்றிய அரசின் மூலம் தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் வந் ததா?
எய்ம்ஸ் மருத்துவமனை, பறக் கும் சாலை திட்டம் ஆகியவை என்ன ஆனது? அதேபோல், சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்துக்கு ஒரு ரூபாய் கூட இதுவரை ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை. ஒன்றுமே கொடுக் காமல் வெறும் வாயில் வடை சுடுகிறார்கள்.
-இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *