மோடி தலைமையிலான பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அரசின்
10 ஆண்டு ஆட்சியின் நிறைவேறாத ‘கியாரண்டீ’கள்
வாக்காளப் பெருமக்களே! விழித்துக்கொண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்
நேற்றைய (12.4.2024) தொடர்ச்சி…
துரோகம் – 3
பா.ஜ.க. ஒன்றிய அரசின் தொடரும் துரோகச் செயல்கள்
வேலையின்மை – இன்றைய மிகக்கடுமையான பிரச்சினை
மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் கடந்த பத்து ஆண்டு கால ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் உச்சத்தை அடைந்து விட்டது. இளைஞர்களின் கனவுகள் நனவாகாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த துரோகத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போமா?
இவர்கள் வாக்களித்தது என்ன?
1) ஒவ்வொரு ஆண்டும் 2 கோடிப் பேருக்கு வேலையை உருவாக்குவோம். (இதன்படி கடந்த 10 ஆண்டுகளில் இவர்கள் 20 கோடிப் பேருக்கு வேலை அளித்திருக்க வேண்டும்).
2) 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் 40 கோடி மக் களுக்கு செயல்திறன் அதிகரிக்கப் பயிற்சியளிப்போம். ‘செயல்திறன் இந்தியா’ (Skill India) திட்டத்தின் கீழ் இது நிறைவேற்றப்படும்.
3) பெண்களுக்கு அதிகமான வேலை வாய்ப்பு களை உருவாக்குவோம்.
உண்மையில் நடப்பது என்ன?
1) கல்வி உலகமே லாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளது. கல்வி வளர்ச்சிக்கான நிதி உதவி எதுவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஒன்றிய அரசின் பட் ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. சிறப்புச் சலுகைகளோ வேறுவிதமான உதவிகளோ மாணவச் சமூகத்திற்கு இதுவரை செய்யப்படவில்லை. இதனால் தனியார் கல்வி நிறுவனங்கள், பயிற்சிக் கல்வி நிலையங்கள் போன்றவை மேலும் வளம்கொழிக்க மக்களைச் சுரண்ட இந்த அரசு வழியமைத்துக் கொடுத்துள்ளது.
2) இலட்சக்கணக்கான இளைஞர்கள் பி.ஏ; பி.எஸ்.ஸி; பி.எட் போன்ற இளநிலைப் பட்டங்களையும், எம்.ஏ., எம்.எஸ்.ஸி போன்ற முதுநிலைப் பட்டங்க ளையும், அய்.டி.அய். டிப்ளமாக்களையும், பொறியியல் சார்ந்த கல்வியில் பட்டங்களையும் பெற்ற பிறகும் கூட வேலையைத் தேடி அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களை கடுமையான கடன் சுமைக்கு ஆளாக்கி, விவரிக்க இயலாத பல துயரங்களை அனுப வித்த பின்னும் இளைஞர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள்.
3) பல வேலைவாய்ப்பு விளம்பரங்களில் சில பணி களுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று குறிப்பிட்டாலும் பி.ஏ; எம்.ஏ. பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களும் அந்த காலி இடங்களுக்காக விண்ணப்பித்து வருகின்றனர். பி.எச்.டி. என்னும் முனைவர் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பித்து வருவது பெரிய கொடுமை.
4) 2023 இல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 16 ஆயிரம் பணியிடங்களுக்கு 50 இலட்சம் விண்ணப் பங்கள் வந்தனவாம். வேலையின்மை பிரச்சினை எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதை இதிலிருந்தே நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.
5) இளநிலைக் கல்வியிலும், முதுநிலைக் கல்வி யிலும் பட்டம் பெற்றுள்ள லட்சக்கணக்கான இளைஞர் களும் ஒன்றுக்கு மேற்பட்ட பட்டங்களைப் பெற்றுள்ள வர்களும், தற்காலிக விரிவுரையாளர் பணியிடங்கள் கூட கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒப்பந்த அடிப்படையில், தற்காலிகமாக ரூபாய் 6,000 முதல் ரூபாய் 12,000 மாத ஊதியத்தை சில மாதங்களுக்கு மட்டுமே தர முன்வரும் கல்வி நிறுவனங்களுக்கும் விண்ணப்பங்கள் வந்துக் குவிகின்றன.
6) நாட்டில் பத்து ஆண்டுகளுக்கு முன் வேலையின்மை 2.1 சதவிகிதமாக இருந்தது. அது இன்று 8.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
7) முக்கியமாக உத்தரப் பிரதேசம், பீகார், ஜார் கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங் களில் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள இளை ஞர்கள் வேலை வாய்ப்புகளைத் தேடி தென்னிந்தியா வுக்கு வந்துக் கொண்டிருக்கிறார்கள்.
8) விரும்பிய வேலை கிடைக்காவிட்டாலும் கிடைத்த வேலையை விரும்பியே ஆகவேண்டிய நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டுவிட்டனர். கனவு களையெல்லாம் தொலைத்துவிட்டு, வீட்டையும், சொந்த பந்தங்களையும் பிரிந்து இன்றைய தலைமுறை இளைஞர்கள் துயரக்கடலில் மூழ்கிக் கொண்டிருக் கிறார்கள்.
இந்த அவலநிலைக்கான காரணங்கள்?
1) வேளாண்மைத் தொழில் நசிந்துள்ளதால், ஊரகப் பகுதியில் வாழும் இளைஞர்கள் வாழ்வாதாரம் இழந்து நகரங்களை நோக்கி எண்ணிலடங்கா கூட்ட மாக வந்துக் கொண்டிருக்கிறார்கள். தொலைத்து விட்ட வாழ்க்கையின் தேடலில் லட்சக்கணக்கான இளைஞர் கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
2) நகரங்களிலும் வேலைவாய்ப்புகள் வேகமாகக் குறைந்து வருகின்றன. காலிப் பணியிடங்கள் பற்றிய தகவல்களை ஒன்றிய அரசு தெரிவிப்பதில்லை. ஆட் குறைப்பால் பலருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பல நிறுவனங்கள் தற்காலிகப் பணியாளர்களை நியமித்துக் கொள்கின்றன. மெல்ல மெல்ல பல துறைகளுக்கு மூடுவிழா நடத்தி தனியார் மயமாக்கிவிட ஒன்றிய அரசு சாதுரியமாக திட்டம் தீட்டிவருவதே இதற்கெல்லாம் மூல காரணம்.
3) ஒவ்வொரு ஆண்டும் 50,000 பேர் இராணுவப் பணிகளில் நியமிக்கப்பட்டு வந்தனர். பா.ஜ.க. அரசின் அக்னிபாத் என்னும் திட்டத்தால் இதுவும் நின்று விட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள இளைஞர்களுள் 75 சதவிகிதத்தினர் இன்னும் நான்கே ஆண்டுகளில் வேலை இழந்து நிற்கப்போவது உறுதி.
4) சிறு நிறுவனங்களும், மத்தியத்தர நிறுவனங் களும், குடிசைத் தொழில்களும் கடுமையாக வீழ்ச்சிய டைந்துள்ளன. ஒன்றிய அரசின் ஆதரவு அவற்றுக்கு இல்லை. ஜி.எஸ்.டி. வரியும், பணமதிப்பிழப்பு நடவடிக் கையும் கூட முக்கியமான காரணங்கள். கரோனா பேரிடர் காலத்தில் இந்த அரசு எவருக்கும் போதுமான உதவிகளைச் செய்யவில்லை. பெரிய குழும நிறுவனங் களுடன் போட்டியிட சிறு தொழில் நிறுவனங்களால் இயலவில்லை. பல நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டங்களுக்கு பா.ஜ.க. அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஒன்றிய அரசின் அலட்சியப் போக் கால் 25 முதல் 33 சதவிகிதம் வரையிலான மத்தியத்தர நிறுவனங்கள் முற்றிலுமாக நொடித்துப் போய் விட்டன. 40 சதவிகித சிறுதொழில் நிறுவனங்கள் நலிந்துப் போய்விட்டன. இவற்றின் விளைவாக லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோய்விட்டன.
5) அதானி, அம்பானி போன்ற மிகப்பெரிய தொழிலதிபர்களின் நிறுவனங்கள் மீதே பா.ஜ.க. அரசு அக்கறை செலுத்திவருகிறது. இதனால் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டது. சிறு, குறு மற்றும் மத்தியத் தர நிறுவனங் களில் கூட வேலைவாய்ப்புகளை இந்த அரசு உருவாக் கத் தவறிவிட்டது. பா.ஜ.க. அரசின் எதேச்சதிகாரப் போக்காலும், அலட்சிய மனப்பான்மையாலும் ஏற் பட்டுள்ள விளைவால் – இளைய தலைமுறையினரின் எதிர்காலம் இருள் சூழ்ந்து வருகிறது; மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.
தமிழில் : எம்.ஆர். மனோகர்
துரோகம் – 4
குறைந்து வரும் கூலித்தொகை
(நவீனமய அடிமைத்தனத்தில் பாடுபடும் உழைக்கும் வகுப்பினர்)
என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டது?
· தொழிலாளர் நலன், உழைப்பிற்கு உரிய மரியாதை
· நகரசுத்தித் தொழிலாளர்களின் மரணத்திற்கு உரிய இரங்கலும் மரியாதையும்
நடைமுறையில் என்ன நிகழ்ந்தது?
· தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமை யும், சலுகைகளும் திரும்பப் பெறப்பட்டன.
· அமைப்பு சாராத / தினசரிக் கூலி / ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. செய் திடும் வேலைக்கான எந்தவித பாதுகாப்புமில்லாமல், தொழிலாளரின் நிலை சிக்கலாகியது. ஒப்பந்தத் தொழி லாளி என்பது நவீன உலகின் அடிமை உழைப்பாளர் என்பதாகியது. இந்தத் தொழிலாளர்களுக்கு எந்தவித பணிப்பயனும் கொடுக்கப்படவில்லை. விருப்பம் போல வேலைக்குச் சேர்ப்பதும், வேலையிலிருந்து நிறுத்துவதும் வழக்கமாகி விட்டது.
· பணிப்பாதுகாப்பின்மை, பிராவிடெண்ட் நிதி உதவி இன்மை, தொழிலாளர் காப்பீட்டு உதவி இன்மை, ஓய்வூதியம் மறுப்பு; போனஸ் மறுப்பு – இவைகளே இயல்புகளாகி விட்டன.
· ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதிய அளவு இழிந்த நிலையில் உள்ளது. கல்வித் தகுதியில் இரண்டு பட்டங்களுடன் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளரின் மாத ஊதியம் சராசரியாக ரூ.8,000/- என்ற அளவில்தான் நீடிக்கிறது.
· இன்னல் நிறைந்த இழிவுநிலையில் பணிபுரியும் நகரசுத்தித் தொழிலாளர்கள், குடிசையில் வாழ்ந்து கொண்டு குறைந்த கூலித் தொகையைப் பெற்றுக் கொண்டு நகரச் சூழலை தூய்மையாக வைத்துள்ளார் கள்.
· பிரதமர் மோடி அவர்கள் நகரசுத்தித் தொழிலா ளரின் கால்களைத் தொட்டு சடங்குமுறையில் வணங் கிடுவது ஒரு மலிவான நாடகமே. தெருக்களையும், சாக்கடைகளையும் தூய்மைப்படுத்திடும் நகரசுத்தித் தொழிலாளர்கள் பரிதாபத்திற்குரிய வகையில் மாதத் திற்கு ரூ,5,000/- என்ற அளவில் மட்டுமே சம்பாதிக்க முடிகிறது.
· துப்புரவாளர், அங்கன்வாடி பணியாளர், நண்பகல் உணவு ஊழியர் என பணிபுரியும் ஊரக, நகர்ப்புறத்து பெண் தொழிலாளர்கள் மாதத்திற்கு ரூ,5,000/- என்று குறைந்த அளவு ஊதியம் ஈட்டிடும் நிலையில் தான் உள்ளனர்.
· தங்களது வீட்டையும், தன்னம்பிக்கையையும் துறந்து, நகர் முழுவதும் தெருக்களில் திரிந்து வேலை செய்திடும் ஓலா, ஊபர், ஸ்விக்கி, சொமாட்டோ தொழிலாளர்கள் சராசரியாக மாதத்திற்கு ரூ.10,000/- மட்டுமே சம்பாதிக்கின்றனர்.
· ஆட்டோ / டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வா தாரம் உறுதியற்ற நிலையில்தான் உள்ளது. லாட்டரி சீட்டில் கிடைக்கும் பரிசு போல அவர்களது சம்பாத்திய மும் உறுதியானது அல்ல; காரணம் – அது செல்பேசியில் பயன்படுத்தப்படும் செயலியைக் கொண்டுள்ள ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் சம்பாத்தியமாகும்.
· நிரந்தரமில்லாத, சொற்ப வருமானத்தைக் கொண்டு தொழிலாளர்கள் எவ்வாறு வாழ்க்கை நடத்துகிறார்கள்? விலைவாசி ஏற்றத்தினால் ஏற்படும் சுமைகளுடன் அவர்களால் எப்படி குடும்பத்தை நிலை யாகக் கொண்டு செல்லமுடிகிறது? எப்படி அவர்களது குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தைக் கட்ட முடிகிறது? உடல்நிலை குன்றி நோய்வாய்ப்படும்பொழுது அவர்கள் கடன் வாங்க நேரிடுகிறது. இவை எல்லா வற்றுக்கும் மேலாக, கிராமத்தில் வாழ்ந்து வரும் வய தான பெற்றோர்களுக்கு பணமும் அனுப்பிட வேண்டி யுள்ளது. சொந்த வீடு கட்டுவதை கனவிலும் அவர் களால் காணமுடியுமா?
· இவை போதாதென்று, இந்த வஞ்சகமான அரசானது தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தியுள்ளது. பன்னாட்டளவில் 8 மணி நேர வேலையென்பது 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிப் பெற்றதாகும். பன்னாட்டு அளவில் நிலவிடும் தொழிலாளர் நலச் சட்டங்களை சற்றும் மதிக்காமல், வேலைநேரத்தை 4 மணி நேரம் கூடுதலாக்கி இருப்பது தொழிலாளர்களை மேலும் பலவித சுரண்டலுக்கு ஆளாக்கிடும் நிலையினையே உருவாக்கும்.
இவற்றிற்கான காரணங்கள் எவை?
· அரசாங்கத்தின் செலவினத்தைக் குறைத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை அதிகப்படுத் திடும் திட்டம்.
· தொழிலாளர்களின் அடிப்படை உரிமைக ளைப் பறித்து, விரும்பிடும் வேலையினை செய்திடும் வாய்ப்பினைக் குறைத்து, கல்வித் தகுதியுடன் செயல் திறன் மிக்கவர்களை வேலையின்மையால் விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளி, குறைந்த ஊதியத்திற்கு 12 மணி நேரம் வேலை செய்திட அடிமைகளை உருவாக்கும் சதி. உழைப்புக்கேற்ற ஊதியம் தரமறுக்கும் கொடுமை! இவைகளுடன், ஒரு சிலருக்கு உபயோகமற்ற பயிற்சி களை ‘திறன்மிக்க இந்தியா’ போன்ற திட்டங்களின் மூலம் அளித்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க வழி வகுக்கும் எண்ணம். அடிமைத் தொழிலாளர்களை உருவாக்கிடும் வழிமுறைகளால் அனுபவமிக்க, திறன்மிக்க பயிற்சிபெற்ற தொழிலாளர் களைக் கொண்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்ந்து, அவர்களை மலிவான உழைப்பாளர் மூலம் பலன்பெறச் செய்யும் திட்டம் – ஊழல் மலிந்த பா.ஜ.க. அரசின் இத்தகைய மறைமுக திட்டங்களே முக்கியமான காரணம்.
· சுருக்கமாக, எளிமையாகச் சொல்ல வேண்டு மென்றால் – “உழைக்கும் தொழிலாளர்களை வஞ்சித்து, கார்ப்பரேட் நிறுவனங்களை கொழுக்க வைத்திட” மோடி அரசாங்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழில்: வீ.குமரேசன்