1) ‘2024இல் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை (தி.மு.க. அணியை) ஆதரிக்க வேண்டும் ஏன்?’ ‘மக்கள் விரோத பாஜக அரசை விரட்டியடிப்போம்’, ‘பாஜகவின் ப்ரீபெய்டு, போஸ்ட் பெய்டு ஊழல்கள் – தேர்தல் பத்திர முறைகேடுகள்’, ‘பிரதமர் மோடிக்கு கருஞ்சட்டைக்காரனின் திறந்த மடல்’ ஆகிய 4 நூல்களை திராவிடர் கழகம் (இயக்கம்) வெளியிட்டுள்ளது.
2) வட மாநிலங்களில் தேர்தல் நிலவரங்கள் குறித்தும், பாஜகவுக்கு எதிரான மக்களின் மனநிலை குறித்தும் கழக வெளியுறவுத் துறைப் பொறுப்பாளர்கள் தகவல்கள் சேகரித்துக் கொடுத்த வண்ணம் உள்ளனர்!
3) ஏப்ரல் 2 தொடங்கி 12 வரையிலும் மிகச் சிறப்பான பிரச்சாரக் கூட்டங் களைச் சுற்றுப் பயண ஒருங்கிணைப்பாளர்கள் செய்து முடித்திருக்கிறார்கள்!
4) அந்தந்த ஊரின் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மும்முரமாய் பணியாற்றி இருக்கிறார்கள்!
5) தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பயணத்தில் ஓட்டுநர்களாக, நூல் விற்பனை செய்பவர்களாக, ஒளிப்படம் எடுப்பவராக, செய்திகளைத் தொகுப்ப வராக, இன்னும் சிலர் பல்துறை பணி செய்பவர்களாக சுற்றிச் சுழன்று வருகின்றனர்!
6) ஆசிரியர் அவர்களின் உழைப்புக் குறித்து முதலமைச்சர் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலை வர்கள் வியப்பின் உச்சியில் இருக்கிறார்கள்! ஆம்! கவிஞர் கலி.பூங்குன்றன் ஒரு செய்தியைக் கூறியிருந்தார்.
“1947 முதல் 2024 வரை 76 ஆண்டுகளாக, அதாவது 15 வயது முதல் 91 வயதாகும் இன்று வரை அனைத்துத் தேர்தல்களிலும் பிரச்சாரம் செய்யும் ஒரே தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மட்டுமே” என்பது தான் அது!
ஆக துறை வாரியாக, அவரவர் வேலைகளை, அவசரப் பிரகடனம் போல நினைத்து, கடுமையாய் செய்து வருகிறார்கள்! இந்நிலையில் நம் பங்களிப்பு என்ன?
1) விடுமுறை இல்லை. 2) தொழில் இருக்கிறது. 3) வயதாகிவிட்டது.
4) வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. 5) வெயில் தாங்க முடியவில்லை.
எனப் பல காரணங்கள் இருக்கலாம். பரவாயில்லை! இருந்த இடத்தில் இருந்தே பிரச்சாரம் செய்வதற்குத் தான் நம் கையில் “கைப்பேசி” இருக்கிறது!
இதையே ஆயுதமாகப் பயன்படுத்தி உறவினர்கள், நண்பர்கள் என ஒருவரையும் விடாமல், நாள்தோறும் செய்திகளைக் கொண்டு போய் சேர்ப்போம்!
இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது! பாசிஜ பாஜகவை ஓட, ஓட விரட்டிடும் ஒப்பற்றப் பணியில் நம் ஒவ்வொருவரின் பங்கும் இருக்கட்டும்!
தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, பஞ்சாபி போன்ற மொழிகளிலும் தகவல் தொழில் நுட்பக் குழுவின் சார்பில் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்!
ஓங்கி அடிப்போம்! வச்சு செய்வோம்!!
தொடர்ந்து களத்தில் நிற்போம்!!!