தேர்தல் நேரமல்லவா? பிரதமர் மோடி தென்னாட்டிற்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து வருகை தந்து கொண்டிருக்கிறார்.
இந்தியாவில் இம்மாதம் நடக்கும் மாரத்தான் தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெறுவாரா? என்பதில் சந்தேகங்கள் உள்ளன. சிறந்த கல்வியறிவு பெற்ற, பொருளாதாரத்தில் ஏனைய மாநிலங்களை காட்டிலும் சற்று முன்னேறியுள்ள தெற்கில் உள்ள மக்களைக் கவர்வதில் பிரதமர் எவ்வளவு தூரம் வெற்றி பெறுவார் என்பதே கேள்வி.
அவரது இந்த விஜயம் ஏதாவது பலனைத் தருமா? இது குறித்த கேள்வி எழுப்பியுள்ளது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 12.4.2024 தேதியிட்ட பத்திரிகையின் கட்டுரை. (இணையத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை).
தலைப்பே சிறப்பாக அமைந்துள்ளது.
மோடியின் தென்னிந்திய இலக்கு: வலுவான தலைவர், அசைக்க முடியாத கட்டிடத்தின் மீது மோதுவதற்கு ஒப்பானது என்கிற ரீதியில் தலைப் பிடப்பட்டுள்ளது.
நடப்பு நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு 55 சதவீத உறுப்பினர்கள் உள்ளனர். பத்தாண்டு ஆட்சிக்குப் பிறகு, தற்போதைய 2024 தேர்தலில் அதை மேலும் அதிகரிக்க மோடி விரும்புகிறார். அந்த எண் ணிக்கையை அடைய தென் மாநிலங்களில் பாஜக வெற்றி பெற வேண்டிய தேவை உள்ளது.
மோடியின் இந்து-தேசியவாத பாஜக, 2019இல் நாடாளுமன்றத்தின் மக்களவையில் 543 இடங்களில் 303 இடங்களை வென்றது, முக்கியமாக இந்த இடங்கள், அதிக மக்கள்தொகை கொண்ட, ஏழைகள் நிறைந்த, ஹிந்தி பேசும் வட நாட்டில் இருந்து கிடைத்தது.
2019 இல் தெற்கில் மீண்டும் மீண்டும் பேரணிகளை நடத்தி, புதிய வாக்காளர்களை வெல்ல மோடி முயன்றார், தெற்கின் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு தனது “உயர்ந்த மரியாதை” அளிப்பதாக சொன்னார். தென்னாட்டின் பாரம்பரிய வெள்ளை வேட்டியை அணிவது மற்றும் மலர்கள் நிறைந்த திறந்த காரின் மேல் நின்று சாலையில் அணி வகுப்புகளில் இருந்து கை அசைப்பது உட்பட அனைத்தையும் செய்தார்.
வடமாநில ஹிந்தி பேசுபவர்களின் ஆதிக்கத்தில் பா.ஜ.க.வைப் பார்ப்பவர்களை கவரும் வகையில் தமிழில் சமூக ஊடக மென்பொருளையும் மோடி தொடங்கியுள்ளார்.
ஆனால் தெற்கில் பாஜகவின் முன்னெடுப்பு கடுமையான எதிர் நிலையை எதிர்கொள்கிறது, அங்கு வாக்காளர்கள் பொதுவாக சமூக நீதிக்கான முறையீடுகளில் வலுவாக வேரூன்றிய பிராந்தியக் கட்சிகளை ஆதரிக்கின்றனர், மேலும் மோடியின் ஹிந்துத்துவ தேசியவாதத்திற்கு சிறிய ஈர்ப்பு கூட இல்லை.
“நாங்கள் மக்களுக்கு மரியாதை கொடுக்கிறோம், மதம் அல்லது ஜாதி சார்ந்து அல்ல,” என 38 வயதான அபு பாக்கர், தமிழ்நாட்டின் எஃகு வணிக உரிமையாளர், பெருமையுடன் கூறினார்.
தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், பிடிஆர் என அழைக்கப்படும் பழனி வேல் தியாகராஜன், அரசியலில் “ஒரு முனைப் படுத்துதலை’ வெறுக்கிறேன் என்று கூறுகிறார்.
2019 இல் 23 நாடாளுமன்ற இடங்களை வென்ற தமிழ்நாட்டின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) கட்சியை சேர்ந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அனைத்து மத, சமூகங் களின் இணக்கமான தன்மையை தென்னாட்டின் நீண்ட வரலாற்றைப் பற்றி பெருமைப்படுவதாக கூறினார்.
இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள பலர், அவர்களின் கலாச்சார மற்றும் மொழியியல் அடையாளத்தில் வேரூன்றிய ஜனரஞ்சகக் கட்சிகளை ஆதரித்துள்ளனர், இந்தியாவின் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ஜாதிய படிநிலையை சமாளிக்கும் நோக்கில் சமூக சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
“தங்கள் கலாச்சார அடையாளம், மொழி அடை யாளம், பழக்கவழக்கங்கள், வரலாறு ஆகியவற்றைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்த மாநிலங்கள், மக்கள் வளர வாய்ப்புள்ள மாநிலங்கள், ஆகிய மாநிலங்களில் பாஜக மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது” என் கிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். ஹிந்து மதத்தை “அரசியல் கருவியாக” பயன்படுத்துப வர்களை அவர் கடுமையாக விமர்சித்தார்.
கடந்த 2019 பொதுத் தேர்தலில், ஆந்திரப் பிரதேசம், கருநாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய அய்ந்து தென் மாநிலங்களில் உள்ள 129-ல் 29-ல் அய்ந்தில் ஒரு பங்கு இடங்களை மட்டுமே பாஜக வென்றது.
தெற்கைக் கவர்வதில், பாஜக தன்னை ஒரு அகில இந்திய கட்சியாக, காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஆக்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது.
ஆனால், தேசிய சராசரியை விட எழுத்தறிவு விகிதம் அதிகம் உள்ள தெற்கில் மோடியின் திட்டம் எடுபடவில்லை என்கிறார் தமிழ்நாட்டின் சமூக ஆர்வலர் ராமு மணிவண்ணன். “பா.ஜ.க.வுக்கு தெற்கில் வளர்வது மிகப் பெரிய சவாலாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.. சமூக மாற்றத்திற்கான தீவிர செயல்பாடுகள்தான்” என்கிறார் மணிவண்ணன்.
“மோடி வடக்கில் பேசும் போது, மதம் குறித்து பேசுகிறார். அவருடைய செயல்பாடுகள் என்ன என்பதை அங்குள்ள மக்கள் சரி பார்ப்பதில்லை. ஆனால், தமிழ்நாட்டின் வளர்ச்சியின்மை பற்றி மோடி பேசினால், அவருக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை பதிலாக மக்கள் திருப்பிக் கொடுக்கிறார்கள்.” என விளக்குகிறார் மணிவண்ணன்.
இந்தியாவின் 140 கோடி மக்களில் அய்ந்தில் ஒருவர், தென் மாநிலங்களில் வாழ்கின்றனர், மோடி வெற்றி பெற்றால், மக்கள் தொகை அடிப்படையில் தேர்தல் எல்லைகளை மோடி மாற்றியமைத்து விடுவார் என்று சிலர் அஞ்சுகின்றனர்.
இது சிலருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இது வட மாநிலங்களில் கணிசமான இடங்களை விரிவுபடுத்தும், இதன் மூலம் தெற்கின் ஒட்டுமொத்த நாடாளுமன்ற அழுத்தம் இன்னும் குறையும்.
ஒவ்வொரு முறையும் மோடி தமிழ்நாட்டிற்கு வரும்போது, இந்த ஆண்டு குறைந்தபட்சம் ஏழு பயணங்களை மேற்கொண்டு இருந்தாலும், சமூக ஊடகங்களில் “வெல்கம் மோடி” மற்றும் “கோ பேக் மோடி” என்ற ஹேஷ்டேக் போரினால் வெடிக்கிறது. தெற்கின் மீதான வரிச்சுமை, நியாயமற்றதாக கருதுவதால், மக்களின் கோபத்தை அதிகரிக்கிறது.
கடந்த ஆண்டு ஜி-20 தலைவர் பதவியில் இருந்த மோடியின் பிம்பம், உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக நாட்டை வழி நடத்தும் என்ற நம்பிக்கை அவரது கூற்றுகளில் பரவலாக தங்கியுள்ளது.
ஆனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31 சதவீத பங்களிப்புடன், இந்தியாவின் பொருளாதார வெற்றி தென் மாநிலங்களால் உந்தப்பட்டு வருகிறது.
சீனாவில் இருந்து மாறிய ஆப்பிள் போன்ற உலகளாவிய விநியோகச் சங்கிலிகள், மாநில வாரியாக நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளன.
ஆனால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பதட்டத்தை அதிகரித்துள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாதிடுகிறார், மக்கள் அதிக வரி விதிப்புகளால் “அழுத்தப்பட்டதாக” உணர்கிறார்கள்
“வளர்ச்சி மற்றும் வருவாயின் முன்னெடுப்புகளை அவர்கள் எவ்வளவு அதிகமாக கட்டுப்படுத்து கிறார்களோ, அவ்வளவு அதிகமாக ஒட்டு மொத்த வருமானமும் குறைகிறது.” என்று அமைச்சர் பழனிவேல் தியாகராசன் கூறினார்.
ஆனால், தெற்கில் பாஜக வெற்றி பெறும் என சிலர் கருதுவதாக கட்டுரையில் குறிப்பிட்டாலும், சித்தாந்த ரீதியாக, பாஜகவின் ஹிந்துத்வா அரசியல், தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டின் சமூக நீதி அரசியலை வெல்வது கடினம் என்பதே கட்டுரையின் சாரம் மட்டுமல்ல; அதுவே உண்மை நிலையும் கூட.
(நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தனது இணையத்தில் 12.4.2024 அன்று வெளியிட்ட கட்டுரையின் தொகுப்பு )