விருது வழங்கும் விழா

Viduthalai
1 Min Read

அரசு, தமிழ்நாடு

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் 17.9.2023 அன்று வேலூர் மாநகர், பள்ளிகொண்டாவில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், பெரியார் விருதினை கி.சத்தியசீலன் அவர்களுக்கும், அண்ணா விருதினை க.சுந்தரம் அவர்களுக்கும், கலைஞர் விருதினை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்களுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதினை மலிகா கதிரவன் அவர்களுக்கும், பேராசிரியர் விருதினை ந.இராமசாமி அவர்களுக்கும் வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவில், தி.மு.க. பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, துணை பொதுச் செயலாளர்கள் – உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ஏ.பி.நந்தகுமார், வேலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ப.கார்த்திகேயன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *