“சிலரை சில காலம் ஏமாற்றலாம் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது” – முதலமைச்சர் சமூகவலைதளப் பதிவு

viduthalai
1 Min Read

இன்று (12-04-2024), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர் களின் சமூக வலைத்தளப் பதிவு:
“புகழ்பெற்ற @Lokniti CSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக் கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.
அதில்,
27% பேர்#Unemployment-தான் முக்கி யப் பிரச்சினை என்றும்,
55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும்,
ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறி யுள்ளனர்.
இதில் இருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகி விட்டது.
அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டு களிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.
‘சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல் லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது!”

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *