நாடாளுமன்ற தேர்தல் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு உத்தரவு!

viduthalai
1 Min Read

சென்னை, ஏப்.12- நாடாளுமன்ற மக்களவை தேர் தல் வாக்குப்பதிவு தமிழ் நாட்டில் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கி றது. சொந்த ஊரில் இருந்து பலர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

இவர்கள் சொந்த ஊர் சென்று வாக்களிக் கவும், வாக்களித்த பின்னர் மீண் டும் வேலை செய்யும் இடத்திற்கு திரும்பவும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி சென்னை யில் இருந்து 17 மற்றும் 18ஆம் தேதிகளில் 2,970 சிறப்பு பேருந்துகள் என 2 நாட்களுக்கு மொத்தம் 7154 பேருந்துகள் இயக்கப் படுகிறது. பிற ஊர்களில் இருந்து பல்வேறு இடங் களுக்கு 2 நாட்களுக்கு 3,060 பேருந்துகள் இயக் கப்பட இருக்கிறது.
ஏப்ரல் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் பிற ஊர் களில் இருந்து சென் னைக்கு திரும்பும் வகை யில் 1,825 சிறப்புப் பேருந் துகள் என 2 நாட்களுக்கு மொத்தம் 6,009 பேருந் துகள் இயக்கப்படுகிறது.

அதேபோல் ஏப்ரல் 20 மற்றும் 21இல் பிற ஊர்க ளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு திரும்ப 2,295 பேருந்துகள் இயக்கப்படு கிறது. மொத்தம் 10,214 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *