10.4.2024 அன்று மாலை 4 மணியளவில் 2024 ஆண்டு 18 ஆவது இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அதன் அதிகாரிகள் என்னுடைய இல்லத்திற்கு நேரடியாக வருகை தந்து வயது மூத்தவர் களிடம் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தனர். அந்த ஜனநாயகக் கடமையை என்னுடைய தாயார் ப.குஞ்சம்மாள் (வயது 101) அவர்கள் இந்திய நாட்டின் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் வாக்களித்தார்கள்.
-ப.முத்தையன், மாவட்டத் தலைவர், தாம்பரம்