அண்ணல் தங்கோ இன்று பிறந்த நாள் (12.4.1904-4.1.1974)

viduthalai
1 Min Read

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 12. 04. 1904இல் பிறந்தார்.
தந்தை : முருகப்பன்
தாயார் : மாணிக்கம்மாள்
1928இல் காங்கிரசில் சேர்ந்தார். 1923இல் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல், 1925 ல் வைக்கம் போராட்டம், 1927இல் சைமன் குழு எதிர்ப்பு போராட் டம், 1930இல் உப்பு சத்தியாகிரகப் போராட்டம், நீல் சிலை சத்தியாகிரகம் ஆகியவற்றில் பங்கேற்று 5 முறை சிறை சென்றார்.
1936இல் காங்கிரசில் இருந்து விலகி நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் இணைந்தார்.
1944 ஆம் ஆண்டில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டு, திராவிடர் கழகம் உருவானபோது அதற்குத் தமி ழர் கழகம் என பெயர் சூட்டுமாறு வலியுறுத்தானார்.
வேலூரில் 1937இல் தமிழ் மக்கள் தற்காப்பு பேரவையைத் தொடங்கினார். ஆண்டுதோறும் பொங்கல் விழாவை வேலூரில் கொண்டாடினார். அதில் பல தமிழறிஞர்களையும் சான்றோர்களை யும் கலந்துகொள்ள வைத்து தமிழ் உணர்வை வளர்த்தார். 1937 மற்றும் 1938இல் தமிழர் உரிமை மாநாடுகளை நடத்தினார்.
1927இல் ‘திருக்குறள்’ நெறி தமிழ்த் திருமணத்தை அறிமுகப்படுத்தி குடியாத்தம் சிவமணி அம்மையாரை மணந்தார்.
1942இல் ‘தமிழ் நிலம்’ என்ற பத்திரி கையை தொடங்கினார்.
தமிழ் மொழியின் சிறப்பை வளர்க் கும் வகையில் பல நூல்களை எழுதி யுள்ளார். அவற்றுள்
தமிழ்மக்கள் தந்த செய்தி அல்லது சிறையில் நான் கண்ட கனவு ( 1944 )
வாழ்நாள் முழுவதும் திருக்குறள் நெறியைப் பரப்பவும் தனித்தமிழை வளர்க்கவும் பாடுபட்ட கு.மு. அண்ணல் தங்கோ 04.01.1974இல் மறைவுற்றர்.
முக்கியத் தகவல்: காந்திமதி என்ற பெயரை அரசியல் மணி என்று அன்னை மணியம்மையாருககுப் பெயர் மாற்றியவர் இவரே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *