செய்தியும், சிந்தனையும்….!

1 Min Read

கழற்றி எறிந்துவிடுவார்களோ?
* நவராத்திரியில் மீன் சாப்பிடுவதா?
– பீகார் மேனாள் துணை முதலமைச்சர் தேஜஸ்விக்கு, பி.ஜே.பி. கண்டனம்
>> நவராத்திரியின்போது கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என்று கூட சொல்லுவார்களோ! அடப் பைத்தியங்களே, மனித உடலே ஒரு மாமிசம் தானே – நவராத்திரியின்போது கழற்றி எறிந்து விடுவார்களோ!
மறுக்க முடியவில்லை!
* இந்தியா வல்லரசாக உருவாக தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது.
– பிரதமர் மோடி
>> தமிழ்நாட்டின் வளர்ச்சியை பிரதமராலேயே மறுக்க முடியவில்லை!
சமஸ்கிருத பெயர்கள்தானா?
* சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு விஸ்வகர்மா விருது!
>> பி.ஜே.பி. ஆட்சியில் விருதுகளுக்குக்கூட சமஸ் கிருத வருண தர்ம பெயர்கள்தானா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *