பா.ஜ.க. சார்பில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாக ஏமாற்றி பல கோடிகளை சுருட்டிய மடாதிபதி

1 Min Read

பெங்களூரு, செப்.19  சட்ட சபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட சீட் வாங்கி கொடுப்பதாக கூறி தொழில் அதிபரை ஏமாற்றி மோசடி செய்ததன் மூலம் கிடைத்த ரூ.1லு கோடியில் மடாதிபதி சொத்துகள் வாங்கிக் குவித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

உடுப்பி மாவட்டம் பைந் தூரை சேர்ந்த தொழில்அதிபர் கோவிந்தபாபு பூஜாரிக்கு, தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட சீட் வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்யப்பட்டு இருந் தது. இந்த மோசடி வழக்கில் விஜயநகர் மாவட்டம் ஹூவினகடஹள்ளியில் உள்ள காலு மடத்தின் மடா திபதி அபினவ காலசிறீயின் பெயர் 3-ஆவது குற்றவாளியாக இடம் பெற்றுள்ளது. மோசடி மூலம் பறித்த ரூ.5 கோடியில், ரூ.1லு கோடி மடாதிபதிக்கு சென்றது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. அந்த பணத்தைக் கொண்டு அவர் சொத்துகள் வாங்கிக் குவித்துள்ளார். குறிப்பாக நிலம், பெட்ரோல் விற்பனை நிலையத்தை மடாதிபதி வாங்கியது தெரியவந்துள்ளது.

இந்த சொத்துகள் அனைத் தும் பினாமி பெயரிலேயே அவர் வாங்கி இருக்கிறார். அதன்படி, தனது மனைவியின் தந்தையான மாமனார் பெயரில் ஹூவினகடஹள்ளி அருகே கோலஜி கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் வாங்கி, அங்கு கரும்பு பயிரிட்டுள்ளார். ஹிரே கடஹள்ளி புறநகர் பகுதியில் உள்ள தர்காவை யொட்டி ஒரு ஏக்கர் நிலத் தையும், ஹிரே கடஹள்ளி-மாகல சாலையில் ரூ.16 லட்சம் மதிப்பிலான வீட்டுமனையை யும் மடாதிபதி வாங்கி உள் ளார்.

இதுதவிர ஹிரே கடஹள்ளி-ககரனூரு சாலையில் உள்ள சந்திரப்பா என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலை யத்திற்கு ரூ.40 லட்சம் கொடுத்து, மடாதிபதி பங்கு தாரராக ஆகி இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித் துள்ளனர். மேலும் மும்பை உள்ளிட்ட பல நக ரங்களிலும் உறவினர்கள் பெயரில் சொத் துக்களை வாங்கியுள்ளார் இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் மடாதிபதி அபினவ கால சிறியை கைது செய்ய ஒன்றிய குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *