கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

10.4.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் மத விரோத சக்திகளை எதிர்த்துப் போராடுகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* மோடி அரசில் அமைச்சராக இருந்த அரியானா மாநிலத்தை சேர்ந்த விரேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்தார். ஜனநாயகத்தைக் காக்க விலகினேன் என பேட்டி.
* நான் மீண்டும் வருவேன் என்கிறார் பிரதமர் மோடி. அதே வார்த்தையைத் தான் மகாராட்டிராவில் அன்றைய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சொன்னார். என்ன நடந்தது? என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் சுனில் கடாடே.
* பெண்கள் நலன் சார்ந்த திட்டமான, கட்டணமில்லா பேருந்து பயணம், கிரக ஜோதி திட்டம், இந்திரா காந்தி வீட்டு வசதி திட்டம் அனைத்தும் பெண்களிடம் நல்ல வரவேற்பை தெலங்கானாவில் பெற்றுள்ளது காங்கிரசுக்கு பெண்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்தியுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சர்வாதிகார ஆட்சிக்கும் ஜனநாயகத்துக்கும் இடையே ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் இது: சாகு மகாராஜ் சத்ரபதியின் வாரிசு அலோக் தேஷ் பாண்டே பேச்சு.
* பொருளாதாரத்தில் எச்சரிக்கை மணி ஒலிக்கிறது, குடும்பங்கள் மெதுவாக கடனில் மூழ்குகின்றன: மோடி அரசின் பத்தாண்டு சாதனை என காங்கிரஸ் கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக விவசாயிகளுக்கு எதிரானது, ஜனநாயகத்துக்கு எதிரானது, கூட்டாட்சிக்கு எதிரானது மற்றும் கார்ப்பரேட் களுக்கு ஆதரவானது, எனவே அதை கடுமையாக எதிர்த்து அம்பலப்படுத்த வேண்டும் என பஞ்சாப் விவசாயிகள் போர்க்கொடி. மோடி ஆட்சி மீது 11 கேள்விக்கணை எழுப்பியுள்ளனர்.
* வளர்ச்சியைப் பற்றி பேசத் தவறிய பாஜக மதப் பிரச்சினைகளை எழுப்புகிறது: சச்சின் பைலட்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உத்தவ் தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே மகாராட்டிராவில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. உத்தவ் கட்சிக்கு 21, காங்கிரஸ் 17, பவார் கட்சி 10 என தொகுதிகள் முடிவு.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *