“பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாட்டுக்கு வருவது தி.மு.க.வுக்குதான் பெரிய பிளஸ் பாயிண்ட்”

viduthalai
1 Min Read

சென்னை,ஏப்.10- “இந்தியா டுடே” ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் அவர் களுக்குக் தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 5.4.2024 அன்று அவரது இல்லத்தில் அளித்த ஓர் அரிதான நேர்காணல்.

ராஜ்தீப்: தமிழ்நாடு முழுக்க நீங்கள் பரப்புரைப் பயணம் மேற்கொண்டிருக் கிறீர்கள். உங்கள் நேரத்துக்கு நன்றி. வணக்கம்.
முதலமைச்சர்: வணக்கம்.

ராஜ்தீப்: கடந்த முறை தமிழ்நாடு – புதுவையில் ஒரு தொகுதி நீங்கலாக அனைத்திலும் வெற்றி பெற்றீர்கள். இந்த முறையும் நம்பிக்கையாக இருக் கிறீர்களா?
முதலமைச்சர்: இம்முறை 40க்கு 40இல் உறுதியாக வெல்வோம்.

ராஜ்தீப்: நாற்பதிலும் வெல்வீர்களா?
முதலமைச்சர்: நிச்சயமாக.

ராஜ்தீப்: இந்தத் தேர்தலின் முதன் மையான விவகாரம் எது?
முதலமைச்சர்: ஆட்சிக்கு வருவதற்கு முன் என்னென்ன உறுதிமொழிகள் சொன்னோமோ, வாக்குறுதி கொடுத் தோமோ, அதை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம். அது இல்லாமல், பல உறுதிமொழிகளை மக்களுக்குச் செய்திருக்கிறோம். பெண்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். அதனால் நிச்சயமாக திமுக கூட்டணி முழுமையாக வெற்றி அடையும்.

ராஜ்தீப்: பாஜகவின் வளர்ச்சியைப் பற்றி உங்களுக்குக் கவலை இல்லையா? மோடி எனும் காரணி தமிழ்நாட்டில் வேலை செய்யாதா?
முதலமைச்சர்: மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வருகிறாரோ… அவ்வளவிற்கு அவ்வளவு தி.மு.க.விற்கு பிளஸ். ஏன் என்றால், வந்து வடை சுட்டுவிட்டு போகிறார், பொய் சொல்லி விட்டு போகிறார். அதனால் எங்களுக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்.

ராஜ்தீப்: உங்களின் முதன்மையான எதிரி அஇஅதிமுக-வா அல்லது பாஜக-வா?
முதலமைச்சர்: அஇஅதிமுக-தான் எங்களின் பிரதான எதிர்க்கட்சி. பாஜக; சும்மா டிராமா செய்து கொண் டிருக்கிறார்கள். இரண்டாவது யார் வருவது என்று அவர்களுக்குள் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *