சென்னை, நவ. 21- பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 9 ஆம் ஆண்டு துவக்க விழா 18.11.2023 அன்று மாலை 06:-30 மணிக்கு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைக் கழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் அசோக் குமார் (தி.மு.க.) முன்னிலையில் பா.முத்தழகு தலைமையில் துவங்கியது. ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன் வாழ்த்திப் பேசினார். நிகழ்வில் சுமதி மணி, அரவிந்தன், கருப்பசாமி, ஆறுமுகம், சசிகுமார், சரத், ஜெயசீலன்,கெஜலட்சுமி, சின்னு ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் தமிழ் மதி (மாணவர் கழகம்) நன்றி கூறினார்.