விக்ரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க. தோழர் புகழேந்தி மறைந்தாரே! கழகத் தலைவர் இரங்கல்

1 Min Read

விக்ரவாண்டித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் புகழேந்தி அவர்கள் (வயது 71) உடல் நலக் குறைவு ஏற்பட்டு, திடீரென்று இன்று (6.4.2024) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம்.
அருமை சகோதரர் அமைச்சர் க.பொன்முடி அவர்களுக்கு மிகவும் நெருக்கமான தோழமையுடன் இருந்து, இயக்கத்தின் கட்டுப்பாடும், கடமை உணர்வும் கொண்ட கொள்கைப்பூர்வமான கண்ணியம் மிக்கவராக வாழ்ந்தவர். எவரிடமும் நட்புரிமையுடனும், பண்புடனும் பழகுபவர்.
நம்மிடம் மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் பழகி வந்தவர்.
அவருடைய திடீர் மறைவு அப்பகுதி மக்களுக்கும், திராவிடர் இயக்கத் தோழர்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் மிகப் பெரிய ஈடு செய்ய இயலாத பெருத்த நட்டமாகும்.
அவரது மறைவினால் வருந்தி வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தி.மு.க.விற்கும் மற்றும் அத்தொகுதி மக்களுக்கும் நமது ஆறுதல்; மறைந்த அந்த தொண்டறத் தோழருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
6.4.2024

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *