உணவு பாதுகாப்பு: தமிழ்நாடு முழுவதும் உணவு விடுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆணை

Viduthalai
2 Min Read

அரசியல்

சென்னை, செப். 20- தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்து தரம் இல்லாத உணவுகளை விற்பனை செய்யும் உணவகத்தின் உரி மத்தை ரத்து செய்து சீல் வைக்க சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் உத்தரவிட் டுள்ளார்.

இது தொடர்பாக நேற்று (19.9.2023) அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 16ஆ-ம் தேதி இரவு அய்வின் என்கிற உணவகத்தில் உணவு சாப்பிட்ட 42 பேர் வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற் பட்டு நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக 17ஆ-ம் தேதி காலையில் அறிக்கை பெறப் பட்டது.

கலையரசி என்னும் 14 வயது மாணவியும் இதில் பாதிக்கப் பட்டு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். அந்த மாணவி 18ஆம் தேதி இறந்ததாகத் தகவல் கிடைத்தது. 

நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர், உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு எடுக்கப்பட்ட நட வடிக்கை விவரத்தை கீழ்க்கண்ட வாறு சமர்ப்பித்துள்ளார்.

 உணவகம் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு சந்தேகப்படும் வகையில் வைக்கப்பட்டிருந்த உணவிலிருந்து 3 உணவு மாதிரி கள் எடுக்கப்பட்டு சேலம் உணவு பகுப்பாய்வகத்துக்கு அனுப்பப் பட்டுள்ளன. இதன் அறிக்கை இந்த வார இறுதியில் வரவுள் ளது.

சந்தேகத்துக்குரிய 42 கிலோ இறைச்சி கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் உணவகத் தின் உணவுப் பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டு, உணவகம் சீல் வைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆட்சி யரின் உத்தரவின்படி, ஷவர்மா மற்றும் சந்தேகத்துக்குரிய கிரில் சிக்கன் போன்ற உணவுப் பொருள் களை விற்பனை செய்ய நாமக்கல் மாவட்டத்தில் தடை விதிக்கப் பட்டுள்ளது.

பொது சுகாதாரத் துறையு டன் இணைந்து கண்காணிக்க அமைக் கப்பட்ட 13 சுகாதார ஆய்வாளர் களை உள்ளடக்கிய குழு, தமிழ் நாடு முழுவதும் ஆய்வு செய்து உணவுதரம் இல் லாத சூழலில் அபராதம் விதித் தல், உரிமத்தை ரத்து செய்து, கடைக்கு சீல் வைத் தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்.

என்னுடைய (மா.சுப்பிரமணி யன்) அறிவுறுத்தலின் பேரில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆ-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஷவர்மா உள்ளிட்ட எளிதில் கெட்டுப் போகக்கூடிய உணவு களை ஆய்வு செய்ய நியமன அலு வலர்கள் மற்றும் உணவுப் பாது காப்பு அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. 

அதன்தொடர்ச்சியாக நடை பெற்ற ஆய்வில் கெட்டுப் போன உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட் டுள்ளன. இப்படி பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட் டும். நாமக்கல் மாவட்டத்தில் இந்த அசம்பா விதம் ஏற்பட்டுள் ளது வருத்தம் அளிக்கிறது.

எனவே, உணவுப் பாதுகாப் புத் துறை அலுவலர்கள் தமிழ் நாடு முழுவதும் மேற்கொண்ட ஆய்வு குறித்துஅறிக்கை சமர்ப் பிக்க வேண்டும். நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர், உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆகியோ ரிடம் நடந்த சம்பவத் துக்கான துறைரீதியான விளக் கம் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *