டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு நடவடிக்கை!

1 Min Read

அரசியல்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையிலுள்ள பல்வேறு பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், நீச்சல் குளங்கள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் பல்வேறு இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் டெங்கு கொசு எந்த வகையில் பரவுகிறது என்பதை விளக்கி, துண்டறிக்கை வழங்கி எந்ததெந்தப் பொருள்களில் இருந்து பரவுகிறது என விளக்க முறையை மக்களிடத்தில் தெளிவுபடுத்திக் கொண்டுள்ளது. மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் ஒவ்வொரு வார்டுகளிலும் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு மேற்கொள்ளும் பணியைத் துரிதப்படுத்தியுள்ளனர்.

திறந்த நீர்த்தொட்டி, தேங்காய் ஓடுகள், குளிர் சாதனப் பெட்டி, பயன்படுத்தப்படாத டயர், திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள வாளி, ஆட்டுக்கல் போன்ற பொருள்களில் தேங்கக்கூடிய நீரிலிருந்து கொசுக்கள் உருவாகிறது. டெங்கு நோயின் அறிகுறிகள்: காய்ச்சல், மூட்டு மற்றும் தசைகளில் கடுமையான வலி, தோளில் தடுப்புகள், தலைவலி போன்றவையாகும். தகவல் மற்றும் உதவிக்கு: 1913.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *