மேட்டூர்

1 Min Read

சேலம் அரிசிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரன் (27), எலக்ட்ரீசியன். இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பிள்ளையார் சிலைகளை கரைக்க மேட்டூர் காவிரி ஆற்றுகுச் சென்றனர்.அப்போது வீரன் திடீரென தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர்கள் கருமலைக்கூடல், மேட்டூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வீரன் உடலை மீட்டனர். பின்னர் உடற்கூராய்விற்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கருமலைக்கூடல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

ஏற்கெனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிலைகளைக் கரைக்கச்சென்ற போது இரண்டு சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்த சோகம் அடங்குவதற்குள் மீண்டும் விநாயகர் சிலை களை கரைக்க சென்ற 2 பேர் பலியாகி உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *