கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

4.4.2024

தி இந்து
♦ நட்டத்தில் இயங்கும் 33 நிறுவனங்கள் 582 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக அளித்தன, அதில் 75 விழுக்காடு பாஜகவுக்கு சென்றுள்ளது.
♦ ஆளும் பாஜகவுக்கு தேர்தல் நன்கொடையாக வழங்கிய குறைந்தது 45 நிறுவனங்களின் நிதி ஆதாரங்கள் சந்தேகத்திற்குரியவை என இந்து பத்திரிகையின் ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை
♦ வெள்ள பாதிப்பு நிவாரணம் தராமல் இழுத்தடிப்பு ரூ.2000 கோடி நிதி கோரி தமிழ்நாடு அரசு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது; – ஒன்றிய அரசு மீது குற்றச்சாட்டு
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
♦ மின்னணு வாக்கு இயந்திரத்துடன் வாக்கு ஒப்புகை சீட்டையும் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும் என்ற மனுவின் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் அடுத்த வாரத்தில் விசாரணை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
♦ தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பாஜக எம்.பி. உன்மேஷ் பாட்டீல், உத்தவ் தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்தார். மகாராட்டிரா ஜல்கான் மாவட்டத்தில் பாஜகவிற்கு பின்னடைவு.
♦ பாரதிய ஜனதா சமூகத்தின் மீது ஒரு சுமை’; பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தால் இனி தேர்தல் நடக்காது என திரிபுரா எதிர்க்கட்சிகள் கூறுகின்றன
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
♦ தேர்தல் அறிவித்த நிலையில் என்னை கைது செய்தது உள் நோக்கம் கொண்டது என டில்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதம். மனு மீதான உத்தரவை ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம்.
♦குஜராத்தில் பாஜகவிற்கு எதிராக சத்திரிய சமூகத்தினர் போர்க்கொடி.
தி டெலிகிராப்
♦ மோடியின் ஜும்லாவுக்கு எதிராக காங்கிரஸின் உத்தரவாதம்: வயநாட்டில் வேட்புமனுத் தாக்கல் செய்த ராகுல் காந்தியால் ஒரே நேரத்தில் தொடங்கப் பட்ட வீடு வீடாகச் சென்று உத்தரவாத அட்டை வழங்கும் திட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள எட்டு கோடி குடும்பங்களைச் சென்றடைய காங்கிரஸ் முடிவு.
டைம்ஸ் ஆப் இந்தியா
♦ வடலூரில் வள்ளலார் உலகளாவிய மய்யம் கட்ட தடை விதிக்க முடியாதென தமிழ்நாடு பாஜக ஆன்மிகம் மற்றும் கோயில் வளர்ச்சிப் பிரிவு மாநிலச் செயலர் எஸ்.வினோத் ராகவேந்திரன் தொடர்ந்த மனு மீது சென்னை நீதிமன்றம் தீர்ப்பு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *