கோவையில் தமிழர் தலைவர் பரப்புரை ஏற்பாடுகள் தீவிரம்

1 Min Read

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாரை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கோவையில் பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்ட முன்னேற் பாடு குறித்து திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர், சட்டமன்ற மேனாள் உறுப்பினர் நா.கார்த்திக் அவர்களுடன் கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் தோழர்கள் சந்தித்தனர்.
நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஆ.பிரபாகரன், மாவட்ட துணை தலைவர் மு.தமிழ் செல்வம், தெற்கு பகுதி செயலாளர் தெ.குமரேசன், தொழிலாளர் அணி வெங்கடாசலம், ஆட்டோ சக்தி, ஜி.டி.நாயுடு நினைவு பெரியார் படிப்பகம், பெரியார் புத்தக நிலையம் காப்பாளர் அ.மு.ராஜா, ந.குரு, தோழர் ரமேஷ், ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *