Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: வெள்ள நிவாரணம் கேட்டு ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வேலூர் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
அரசுதமிழ்நாடு

வெள்ள நிவாரணம் கேட்டு ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வேலூர் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Last updated: April 3, 2024 2:03 pm
Published April 3, 2024
தமிழ்நாடு
SHARE

வேலூர், ஏப்.3- ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் நாளை (3.4.2024) வழக்கு தொடர போகிறோம் என்று வேலூரில் நேற்று (2.4.2024) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

வேலூர் – கோட்டை மைதானத் தில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று (2.4.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. வேட்பா ளர்கள் கதிர் ஆனந்த் (வேலூர்), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்) ஆகியோரை ஆதரித்து, தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உதயசூரியன் சின் னத்துக்கு வாக்குகள் திரட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது:-

இந்த நாட்டில் சர்வாதிகாரம் தலைதூக்கக் கூடாது. ஜனநாயகம் கேள்விக்குறியாக மாறிவிடக் கூடாது. சமூகநீதி காற்றில் பறக்கக்கூடாது, மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் அறவே கூடாது என்பதற்காகத் தான் வாக்கு கேட்டு வந்திருக் கிறேன்.

பிரதமர் மோடியால் மக்களி டம் தன்னுடைய ஆட்சி சாதனை களைச் சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை. பழைய சம்பவங்க ளைப் பற்றி பொய்யான கதை களைச் சொல்லி, அதன் மூலமாக மக்களை குழப்பி, ஏமாற்றி, தேர்தல் ஆதாயம் அடைய முடியுமா? என்று முயற்சி செய்கிறார்.
அதுதான் கச்சத்தீவு பிரச்சினை. இந்திய அரசு கச்சத் தீவை இலங் கைக்கு கொடுத்ததைப் பற்றி இப் போது பா.ஜனதா பேச ஆரம்பித்தி ருக்கிறார்கள். ஆனால், இது அவர் களுக்கு எதிராகவே திரும்பி விட்டது.

Also read

தமிழ்நாடு
தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் 500 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்தாண்டும் அனுமதியில்லை
மும்மொழித் திட்டத்தை ஒப்புக்கொண்டால்தான் மாநிலத்திற்குக் கல்வி நிதியைத் தருவோம் என்று கூறுவதா? ஒன்றிய பி.ஜே.பி. அரசு நடத்துவது கமிஷன் ஏஜெண்ட் வேலையா? பேர அரசியலா?

தேன்கூட்டில் கையை வைத்தது போல, இப்போது பா.ஜனதா மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். 2014இல் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா உச்ச நீதிமன்றத்தில் என்ன கூறியது? “கச்சத் தீவு மீண்டும் வேண்டும் என்றால் இலங்கை அரசுடன் போரில்தான் ஈடுபட வேண்டும்” என்று கூறியது.

இந்த 10 ஆண்டு காலத்தில் பிரதமர் மோடி. எத்தனை முறை இலங்கைக்கு பயணம் செய்தார் அப்போதெல்லாம் ஒரு முறையா வது கச்சத்தீவை மீண்டும் கேட்டி ருக்கிறாரா?
இலங்கை அதிபரை சந்தித்த போதெல்லாம் கச்சத்தீவு இந்தி யாவுக்குதான் சொந்தம் என்று சொல்லியிருக்கிறாரா?
அப்போதெல்லாம் கச்சத்தீவு மோடியின் ஞாபகத்திற்கு வர வில்லை. நேரு காலத்தில் நடந்தது-இந்திரா காலத்தில் நடந்தது எல் லாம் ஞாபகம் இருக்கும் மோடிக்கு. 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகம் இருக்கிறதா?

நீங்கள் (பிரதமர்) கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி சென்னைக்கு வந்து, நேரு உள்விளையாட்டு அரங்கத் தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டீர்கள். அந்த நிகழ்ச்சியில், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையைத் தர வேண்டும். “நீட்’ விலக்கு அளிக்க வேண்டும் என்று சில கோரிக்கை களை வைத்தேன்.
அந்தக் கோரிக்கைகளில் முதல் கோரிக்கையாக நான் வைத்ததே. “கச்சத்தீவை மீட்டெடுக்க வேண் டும். மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்ட வேண் டும்” என்றுதான் கோரிக்கை வைத்தேன்.

ஞாபகம் இருக்கிறதா? அந்தக் கோரிக்கை மனுவையாவது இது வரை படித்துப் பார்த்தீர்களா? எத்தனை கதைகள், எத்தனை நாடகங்கள்.
முதலில், ஆர்.டி.அய். விண்ணப் பம் செய்த 4 வேலை நாட்களில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் பற்றி எப்படி தகவல் கொடுத்தார்கள்?
இரண்டாவது, இப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர், 2015இல் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தபோது கொடுத்த தகவலில், கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக எப்போதும் இருந்ததில்லை” என்று பா.ஜனதா அரசு தகவல் கொடுத்தி ருக்கிறது. இப்போது தேர்தல் வரு கிறது என்று தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி தகவலை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அந்தர் பல்டி ஏன்?

மூன்றாவது, கடந்த பல ஆண் டுகளாக கச்சத்தீவு பற்றி நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பிய போதெல்லாம் அதற்கு உரிய பதி லைச் சொல்லவில்லை. எத்த னையோ பேர் ஆர்.டி.அய். விண்ணப்பம் செய்தபோதும் தெளி வான தகவல்களை கொடுக்க வில்லை.

உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது என்று பதில் சொல்லா மல் இருந்த பா.ஜனதா, அரசு இப்போது ஆர்.டி.அய். மூலம் எப்படி தவறான தகவலைக் கொடுத் தார்கள்? பா.ஜனதாவை சேர்ந்த ஒரு தனிநபருக்கு எப்படி வெளியுற வுத்துறை நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களைக் கொடுத்திருக்கிறார்கள்?
நான்காவது, கச்சத்தீவிற்காக இப்போது திடீர் கண்ணீர் வடிக் கும் பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மீனவர்கள் கைது, துப்பாக்கிச்சூடு என்று நடந்ததே? ஒரு கண்டிப்பாவது இலங்கைக்குச் செய்தாரா? ஏன் செய்யவில்லை? அருணாசலப் பிர தேசத்தின் பல பகுதிகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடுகிறதே? இப்போது, சீனா பற்றியாவது வாய்திறந்தாரா?

30-க்கும் மேற்பட்ட நம்முடைய இடங்களுக்குச் சீன மொழியில் பெயர்களை வெளியிட்டிருக்கி றதே? அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? இலங்கையை கண் டிக்கவும் துணிச்சல் இல்லை. சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் நீங் கள் கச்சத்தீவை பற்றி பேசலாமா?

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

நீங்கள் போடும் நாடகம் எல்லாம் இன்னும் சிறிது நாட்களுக் குத்தான் என்பதை எச்சரிக்கை யாகச் சொல்ல விரும்புகிறேன். டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல மைச்சர் ஹேமந்த் சோரன் ஆகி யோரைக் கைது செய்ததும் எவ் வளவு பெரிய தவறு என்று பா.ஜனதா விரைவில் உணரத்தான் போகிறது.
சர்வாதிகாரத்தை நோக்கி பய ணம் மேற்கொள்ளும் பா.ஜனதா விடம் நீதி, நேர்மை,நியாயம் என்ற எதையுமே எதிர்பார்க்கவில்லை. அதனால்தான், சட்டத்தின் மேல் நம்பிக்கை வைத்து நீதிமன்றங்களை நாடுகிறோம்.

இந்த அநீதிகளை எதிர்த்து, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் எல்லோரும் நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம்.
நாமும் வெள்ள நிவாரணம் கேட்டுக்கேட்டு பார்த்தோம். தர வில்லை. நாளை (அதாவது இன்று 3.4.2024) காலை உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப் போகிறோம்.
தமிழ்நாட்டுக்கு விரோதமான கட்சி

மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் கடமை மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது. மக்களோடு மக்களாக, மக்களுக்கு நெருக்கமாக இருப்பது மாநில அரசுகள்தான். மாநிலங்கள் நீதி பெறவும், நிதி பெறவும் உச்ச நீதிமன்ற கதவுகளைத்தான் தட்ட வேண்டும் என்றால். இதற்கு எதற்கு மோடி பிரதமர் பதவியில் உட் கார்ந்து இருக்கிறார் என்பதுதான் என்னுடைய கேள்வி.
தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் விரோதமான கட்சி பா.ஜனதா. அந்த கட்சிக்கு அளிக்கும் வாக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வைக்கும் வேட்டு என் பதை மறந்துவிடாதீர்கள்.
தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜனதா தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. இரண்டையும் ஒரு சேர வீழ்த்துங்கள்.

-இவ்வாறு அவர் பேசினார்.

Ad imageAd image

You Might Also Like

தொகுதி மறுவரையறை பிரச்சினையில் தி.மு.க.வின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணி வகுக்கும்!

‘கேலோ இந்தியா’ திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஓரவஞ்சனை!

ரூ.290 கோடி மதிப்பில் அமையவுள்ள திருச்சி நூலகத்திற்கு காமராசர் பெயர்

பொதுமக்கள், காவல் துறையினர் நலனுக்காக ரூ.54.36 கோடி நிதி ஒதுக்கீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் மேற்படிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி 9ஆம் தேதி நடைபெறுகிறது

TAGGED:முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?