சென்னை பார் கவுன்சிலில் வழக்குரைஞர் பதிவு நிகழ்வு மூத்த வழக்குரைஞர் அமர்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

Viduthalai
1 Min Read

அரசியல்

21-09-2023 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 525 பேர் சென்னை பார் கவுன்சிலில் வழக்குரைஞர்களாக பதிவு செய்த நிகழ்வில் தஞ்சை மூத்த வழக்குரைஞரும், தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவருமான சி. அமர்சிங் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய வழக்குரைஞர்களை முன்மொழிந்து உரையாற்றினார். சென்னை மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்துணைத் தலைவர் வழக்குரைஞர் வேலு. கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார். தலைவர் வழக்குரைஞர் அமல்ராஜ், துணைத் தலைவர், தேர்வு குழுத் தலைவர் வழக்குரைஞர் கே.பாலு, மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர்கள் தேர்வுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *