அந்தமான், செப். 22 – அந்தமான் மாநில திராவிடர் கழகம் சார்பில் 17.9.2023 அன்று ரத்தினம் மார்க்கெட் அருகில் திரங்கா பூங்கா முன்பு தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள், திராவிடர் கழகக் கொடியேற்று விழா கழக நிர்வாகிகள் அன்பு மற்றும் ஜாகீர் முன்னிலையில் நடத்தப்பட்டது.
நிகழ்வில், அந்தமான் மாநில திரா விட முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவர் அலெக்சாண்டர்அ.இரா. மரு தவாணன் தலைமையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் அந்தமான் மாநில தி.மு.க. துணை அமைப்பாளர்கள் ராஜா மருதவாணன், கவிஞர் வெ.சு. செந்தில்குமார், சின்னத்தம்பி, மேனாள் துணை அமைப்பாளர்கள் கண்ணன், திருமலைக்கண்ணு தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், நகரத் துணைச் செயலாளர், சாச்சா ராஜேந்திரன் மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ஜாகிர் உசேன், மேனாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜெயசிங்க ராஜா, பகுதி கழகச் செயலாளர்கள் கடோ அம்மா வாசை ஆகியோர் பங்கேற்றனர் முடி வில் ஜாகீர் நன்றி கூறினார்.