அந்தமானில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

1 Min Read

உலகம், திராவிடர் கழகம்

அந்தமான், செப். 22 – அந்தமான் மாநில திராவிடர் கழகம் சார்பில் 17.9.2023 அன்று ரத்தினம் மார்க்கெட் அருகில் திரங்கா பூங்கா முன்பு தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள், திராவிடர் கழகக் கொடியேற்று விழா கழக நிர்வாகிகள் அன்பு மற்றும் ஜாகீர் முன்னிலையில் நடத்தப்பட்டது.

நிகழ்வில், அந்தமான் மாநில திரா விட முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவர் அலெக்சாண்டர்அ.இரா. மரு தவாணன் தலைமையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.  

இந்நிகழ்வில் அந்தமான் மாநில தி.மு.க. துணை அமைப்பாளர்கள் ராஜா மருதவாணன், கவிஞர் வெ.சு. செந்தில்குமார், சின்னத்தம்பி, மேனாள் துணை அமைப்பாளர்கள் கண்ணன், திருமலைக்கண்ணு தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், நகரத் துணைச் செயலாளர், சாச்சா ராஜேந்திரன் மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ஜாகிர் உசேன், மேனாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜெயசிங்க ராஜா, பகுதி கழகச் செயலாளர்கள் கடோ அம்மா வாசை ஆகியோர் பங்கேற்றனர் முடி வில் ஜாகீர் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *