தமிழிசை சவுந்தர்ராஜன் ஒரு மாநில ஆளுநராக இருந்தவர் – ஆனால் அவரை பதவி விலகச்சொல்லி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வைக்கிறார்கள் – காரணம் அவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்.
ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றிய அமைச் சராகத் தொடர்ந்தார். அவரையும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வைத்துள்ளனர் – காரணம் அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்
நயினார் நாகேந்திரன் பாஜகவின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களுள் ஒருவர் – பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவரை நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வைத்துள்ளனர்.
நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் போன்ற பார்ப்பனர்கள் வெயிலில் அலையாமல், சாமானிய மக்களைச் சந்திக்காமல் அலுங்காமல் குலுங்காமல், ஒன்றிய கேபினெட் அமைச்சர்களாகத் தொடரு வார்கள் – காரணம் இவர்கள் பார்ப்பனர்கள்
தமிழிசை, எல். முருகன், நயினார் நாகேந்திரன் இவர்கள் வெற்றி பெறுவதால்…தமிழ்நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை. 2014 முதல் 2019 வரை இணை அமைச்சராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன் ஒன்றிய இணை அமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டிற்குச் செய்த நன்மைகளைக் கூறவில்லை.
அதே போல் எல். முருகனிடம் எந்தக் கேள்வி கேட்டாலும் “ஜெய் சிறீராம் ஜெய் சிறீராம்” என்று சொல்லிக்கொண்டு ஓட்டம் பிடிக்கிறார்.
இவர்கள் நிச்சயம் தோல்வியடைவார்கள். பாஜகவின் திட்டம் – சாமானியர்களின் முதுகில் அமர்ந்து வளரவேண்டும்; வளர்ந்த பிறகு இவர்களை அரசியலை விட்டு ஓரங்கட்ட வேண்டும்.
இவர்களை அரசியலை விட்டு ஓரங்கட்ட பாஜகவுக்கு ஒரு காரணம் தேவை – அது தேர்தலில் தோற்றவர்கள் – அவ்வளவுதான்.
ஆனால்…..தேர்தல் என்றால் என்னவென்றே தெரியாத நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய பார்ப்பனர்கள் எக்காலங்களிலும்…. அதி முக்கியமானவர்களாக அதிகார பலத்தோடு வலம் வந்துகொண்டே இருப்பார்கள்.
உயர் ஜாதி சமூகங்களுக்கும் தாழ்த்தப் பட்ட சமூகங்களுக்கும் இடையே பாகுபாடு காட்டாத ஒரு கட்சியாக பாஜக இருந்திருந்தால் நிர்மலாவையும், ஜெய்சங்கரையும் தேர்தலில் போட்டியிட நிறுத்தி இருக்க வேண்டும் அல்லவா – ஏன் நிறுத்தவில்லை?
இவர்களின் இந்த நடவடிக்கையே பி.ஜே.பி. யாருக்கான கட்சி என்பதைத் தெளிவாகவே காட்டுகிறது.
என்னிடம் பணம் இல்லை என்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மாநிலங்களவைக்குத் தேர்வானபோது அவரின் சொத்துப் பட்டியல் வெளியானதுண்டு.
அது – அவர் வருமானவரி செலுத்தும் நிலை யில் உள்ளவர் என்பதைக் காட்டவில்லையா?
இன்னொன்றையும் கூறியுள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தமிழ்நாடு சமுதாயப் பிரச்சினைகள் எல்லாம் தலை எடுக்கக் கூடிய மண் என்று குறிப்பிட்டுள்ளார்.
என்ன காரணம் புரிகிறதா? தந்தை பெரியார் மண்ணாயிற்றே! அதைத்தான் பூடகமாகச் சொல் லுகிறார்.
தந்தை பெரியார் சொல்லுவார் – நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போராட்டமல்ல – ஆரியர் – திராவிடர் போராட்டமே என்பார்.
திருமதி நிர்மலா சீதாராமன் கூறுவதை ஒப்பிட்டுப் பாருங்கள் – புரியும்.