2.4.2024 செவ்வாய்க்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 5ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி ♦ இடம்: பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ♦ தலைப்பு: இந்தியா கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ♦ தலைமை: முனு.ஆதி மாறன் (திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்) ♦ செயலாளர்: துரை.மணிவண்ணன் (மதிமுக மேற்கு தாம்பரம் செயலாளர்) ♦ ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்) ♦ சிறப்புரை: செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்).
3.4.2024 புதன்கிழமை
சிதம்பரம் மாவட்ட
கழகக் கலந்துரையாடல்
குமாரகுடி: மாலை 4 மணி ♦ இடம்: சுயமரியாதைச் சுடர் மீனாட்சிசுந்தரம் வளாகம், சேத்தியாத்தோப்பு அருகில், குமாரகுடி ♦ தலைமை: த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்) ♦ பொருள்: நாடாளுமன்றத் தேர்தல், பிரச்சாரக்கூட்டம் நடத்துதல் ♦ குறிப்பு: கழகத் தோழர்கள், மகளிரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, பகுத்தறிவு ஆசிரியர் அணி அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம் ♦ இவண்: பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்டச் செயலாளர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), யாழ்.திலீபன் (மாவட்ட இணைச் செயலாளர்), கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்).
4.4.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 ♦ தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) ♦ சிறப்புரை: முனைவர் த.கு.திவாகரன் ♦ தலைப்பு: நீதிக்கட்சியின் தந்தை சமூகநீதிக் களத்தின் சரித்திர நாயகர் சர். பிட்டி. தியாகராயர் ♦ முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் ♦ நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்).