விதிமீறல் : பிஜேபி நிர்வாகிமீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு

viduthalai
0 Min Read

சென்னை, மார்ச் 31- தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன். ஜாபர்கான்பேட்டை பகுதியில் 28.3.2024 அன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சுமை ஆட்டோவில் பேண்டு வாத்திய குழுவினர் அமர்ந்து இசைத்தனர். அந்த சுமை ஆட்டோவை பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி கார்த்தி கேயன் அளித்த புகாரின்பேரில், குமரன்நகர் காவல்துறையினர் பாஜகவின் சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி அமைப்பாளர் சரவணன்மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட சுமை ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *