மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவில் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது

Viduthalai
2 Min Read

பா.ஜ.க. மூத்த தலைவர் உமாபாரதி

போபால், செப்.22  நாடாளுமன்றம் மற் றும் சட்டப்பேரவைகளில் பெண் களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங் கும் மசோதாவில் இதர பிற்படுத்தப் பட்டட பிரிவுக்கான (ஓபிசி) இட ஒதுக் கீடு இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக மூத்த பாஜக தலைவர் உமாபாரதி தெரிவித்துள்ளார். 

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு 19.9.2023 மக்களவையில் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. அதில், பெண்களுக்கான இட ஒதுக்கீடு 15 ஆண்டுகள் நடைமுறையில் இருக் கும், பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டில் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடும் அடங்கியிருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான உமா பாரதி செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசு கையில், “மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு பெண்களுக்கான இட ஒத்துக்கீடு இல் லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. நாம் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக் கீட்டை உறுதி செய்யாமல் போனால் அது பாஜகமீது பெண்களுக்கு இருக்கும் நம்பிக்கையை உடைத்துவிடும். 

பிரதமர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. 19.9.2023 அன்று காலையில் பிரதமருக்கு கடிதம் எழுதிய நான், மசோதா தாக்கல் செய் யப்படும் வரை அமைதியாக இருந் தேன். மசோதாவில் ஓபிசியினருக்கான இடஒதுக்கீடு இல்லாததால் ஏமாற்ற மடைந்தேன். பிற்படுத்த பிரிவு பெண் களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு வழங்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

பெண்கள் இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடிக்கு உமாபாரதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சட்ட மியற்றும் இடங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்பது மிகவும் சிறந்த ஏற்பாடு. இந்த 33 சதவீதத்தில், 50 சதவீதம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பிற் படுத்தப்பட்ட வகுப்பு பெண்களுக்கான சிறப்பு இடஒதுக்கீட்டுக்கான வழிமுறை உள்ளது.

அதேபோல் மண்டல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கான இட ஒதுக்கீட்டையும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற மசோதா முன்பு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது (தேவ கவுடா பிரத மராக இருந்த போது), தான் உடனடியாக எழுந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதாவில் மாற்றங்கள் செய்ய வேண் டும் என்று கோரினேன். அதன் பின்னர் அந்த மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது என்று பிரதமருக்கு முந்தைய நிகழ்வுகளை நினைவூட்டி யுள்ளார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *