புதுடில்லி,மார்ச் 31- ஜனநாயக சீர்த்திருத்தங் களுக்கான சங்கம் (ஏடிஆர்) என்ற அமைப்பு தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் வேட்பு மனுக்களை ஆய்வு செய்ததில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றின் விவரம்:
தற்போதைய மக்களவை உறுப்பினர்கள் 514 பேரில் 225 பேர்மீது குற்ற வழக்குகள் உள்ளன. இது 44 சதவீதம் ஆகும். இவர்களில் 29 % பேர் மீது கொலை, கொலை முயற்சி, இனக் கலவரத்தை தூண்டியது, கடத்தல் என கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களில் 9 பேர் மீது கொலை குற்றச்சாட்டுகள் உள்ளன.
குற்ற வழக்குகள் உள்ள உறுப்பினர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் உ.பி., மகாராட்டிரா, பீகார், ஆந்திரா, தெலங்கானா, இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். நாடாளுமன்ற உறுப் பினர்களில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் பெரும் பணக்காரர்களாக உள்ளனர். சிலர் பல நூறு கோடி சொத்து மதிப்புடையவர்களாக உள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நகுல்நாத், டி.கே.சுரேஷ், சுயேட்ச்சை நாடாளுமன்ற உறுப்பினர் கானுமுரு ரகு ராம கிருஷ்ணராஜு ஆகியோருக்கு பல நூறு கோடி சொத்துகள் உள்ளன.