மக்களவை உறுப்பினர்கள் 225 பேர் மீது குற்ற வழக்குகள்

1 Min Read

புதுடில்லி,மார்ச் 31- ஜனநாயக சீர்த்திருத்தங் களுக்கான சங்கம் (ஏடிஆர்) என்ற அமைப்பு தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் வேட்பு மனுக்களை ஆய்வு செய்ததில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றின் விவரம்:

தற்போதைய மக்களவை உறுப்பினர்கள் 514 பேரில் 225 பேர்மீது குற்ற வழக்குகள் உள்ளன. இது 44 சதவீதம் ஆகும். இவர்களில் 29 % பேர் மீது கொலை, கொலை முயற்சி, இனக் கலவரத்தை தூண்டியது, கடத்தல் என கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களில் 9 பேர் மீது கொலை குற்றச்சாட்டுகள் உள்ளன.

குற்ற வழக்குகள் உள்ள உறுப்பினர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் உ.பி., மகாராட்டிரா, பீகார், ஆந்திரா, தெலங்கானா, இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். நாடாளுமன்ற உறுப் பினர்களில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் பெரும் பணக்காரர்களாக உள்ளனர். சிலர் பல நூறு கோடி சொத்து மதிப்புடையவர்களாக உள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நகுல்நாத், டி.கே.சுரேஷ், சுயேட்ச்சை நாடாளுமன்ற உறுப்பினர் கானுமுரு ரகு ராம கிருஷ்ணராஜு ஆகியோருக்கு பல நூறு கோடி சொத்துகள் உள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *