சோனியா மீது அவதூறு பேச்சா? அசாம் முதலமைச்சர் மீது காவல்துறையில் காங்கிரஸ் புகார்

Viduthalai
1 Min Read

அரசியல்

கவுகாத்தி, செப். 22- காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சோனியா காந் தியின் வீட்டை எரிக்க வேண்டும் என்று வெறுப் புணர்வை தூண்டும் வகையில் பேசிய அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள் ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட் டத்தில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற பேர ணியில் அசாம் முதல மைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்து கொண் டார்.அப்போது அவர், காங்கிரஸின் முக்கிய உறுப்பினரான கமல்நாத் தின் இந்து அடையா ளத்தை கேலி செய்யும் வகையில் பேசியதோடு, 10, ஜன்பத் எரிக்கப்பட வேண்டும் என்று வெறுப் புணர்வை தூண்டியுள் ளார். 

எனவே அசாம் முதல மைச்சர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் தேபப்ரதா சைக்கியா தனது புகாரில் தெரிவித்துள்ளார். டில்லியில் 10, ஜன்பத் முகவரிஎன்பது சோனியா காந்தி வசிக்கும்இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது. 

“சட்டத்தின் ஆட்சி யால் நிர்வகிக்கப்படும் ஒரு நாட்டில், பிஸ்வா சர்மாவின் இந்த மோச மான பேச்சு வன்முறை மற்றும் தீ வைப்புக்கு ஒரு தெளிவான தூண்டுதலை வழங்கியுள்ளதாக” காவல் துறையினரிடம் அளித்த புகாரில் சைக் கியா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சிவசாகர் மாவட்டத்தின் மூத்த காவல்தூறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அசாம் முதலமைச்சர் மீதான புகாரை ஆராய்ந்து வருவ தாகவும், நடவடிக்கை எடுப்பது குறித்து இன் னும் முடிவு செய்யப்பட வில்லை” என்றும் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *