முருகனின் ஜாதி மறுப்புத் திருமணம்

1 Min Read

அரசியல்

விருதுநகரில் ஒரு கூட்டத்தில் ஜாதி மறுப்புத் திருமணத்தை ஆதரித்துப் பேசிய அண்ணா, “நீங்களெல்லாம் கும்பிடுகிற சுப்பிரமணிய சுவாமியே ஒரு வேட்டுவப் பெண்ணைக்  கட்டிக்கிறப்ப, நீங்களும் அவர் வழியில் நடக்கிறதுல என்ன தப்பு?” என்று கேட்டார். ஒரு கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று, சாமியைக் கேலி செய்கிறார். அடுத்து தான் பேசுகிற கருத்துக்கு அதையே ஆதாரமாகக் காட்டுகிறார்.

“இப்படிப் பேச அண்ணாவை விட்டால் வேறு யாரு?” என்று சிலிர்த்துக் கொண்டது கூட்டம். ஜாதி மறுப்புத் திருமணங்கள், சடங்கு மறுப்புத் திருமணங்களை ஒரு அரசியல் செயல் பாடாகவே திராவிடர் கழகமும் தி.மு.க.வும் அக்காலகட்டத்தில் தொடர்ந்து செய்தாலும், சமூகங்கள் இடையேயான முட்டல் – மோதலாக அதை அவர்கள் மாற்றவில்லை.

கட்சிக்குள்ளேயேகூட காதலித்துத் திருமண முடிவை எடுப்பவர்களிடம் “கூடுமானவரை பெற்றோர் ஒப்புதலையும் ஆசியையும் பெற முயற்சியுங்கள். அங்கிருந்துதான் உங்கள் குடும்ப வாழ்வின் எல்லா வெற்றிகளும் தொடங்குகின்றன” என்பாராம் அண்ணா. பெரும்பாலான சுயமரியாதைத் திருமணங்கள் குடும்பத்தார் சூழ நடைபெறும் சூழலை உருவாக்கியது சுயமரியாதைத் திருமண இயக்கத்தின் முக்கியமான வெற்றிகளில் ஒன்று.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *