ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
தந்தை பெரியார் மீதும், திராவிட இயக்கத்தின் மீதும் தொடர்ந்து ஏதேனும் அவதூறை அள்ளித் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதில் அக்கிரகாரக் கூட்டம் வரிசையில் நிற்கிறது… குறிப்பாக இந்தத் தேர்தல் காலகட்டத்தில்!
அதிலும், பார்ப்பனர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் எந்த பாச்சாவும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல… இந்தியா முழுமைக்கும் பலிக்காது என்ற உண்மை புரியப் புரிய, புதிது புதிதாகச் சர்ச்சைகளை உற்பத்தி செய்து கொண்டே இருக் கிறார்கள்.
சீர்மரபினர் சமூகத்தின் பல்லாண்டுக் கோரிக் கையான ஒன்றிய அரசின் சமூகநீதித் திட்டங்களுக்குப் பயன்படும் வகையில் Denotified Tribes என்ற பெயரில் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு முதலமைச்சர் நடை முறைப்படுத்தியிருக்கிறார். அதையும் தற்போதைய சட்ட சாத்தியங்களுக்கு உட்பட்டு, DNC/DNT என்று ஒரே சான்றிதழ் வழங்கி, மாநில அளவிலான இட ஒதுக்கீடும் பாதிக்கப்படாமல், ஒன்றிய அளவிலான திட்டங்களுக்கும் பயன்படும் வகையில், சொன் னதைச் செய்த பெருமிதத்துடன் பிரச்சாரத்தில் ஈடு படுகிறார் என்றதும், மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் சமூகத்தினரின் ஆதரவைக் குலைக்க, எதையாவது திரிக்கலாமா என்று முயல்கிறது தினமலர் கூட்டம்.
அதன் ‘தேர்தல் களம்’ பகுதியின் 28.03.2024 அன்றைய இரண்டாம் பக்கத்தில், ”குற்றப் பரம்பரை சட்டத்திற்கு எதிராக ஈ.வெ.ரா., போராடினாரா?” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பார்ப்பனரல்லாதாருக்குள்ளே சிண்டு முடிவது அவர்களுக்கு நெடுங்காலமாகக் கை கொடுத்த கலை. பெரியாரை, திராவிட இயக்கத்தை நேரடியாக எதிர்க்காமல், எவர் பின்னாலாவது ஒளிந்துகொண்டு உரசல் ஏற்படுத்த முயல்வார்கள். அதிலும், பசும்பொன் முத்துராமலிங்க(தேவரை)ரைக் காட்டி பெரியாரை அவருக்கு எதிரியாகச் சித்தரிக்கும் முயற்சிகளைப் பல பார்ப்பனர்கள் செய்யக் கண்டி ருப்போம். (அவர்களின் பெயர்களைச் சொல்லி நாம் தரம் தாழ்ந்துபோக விரும்பவில்லை.)
அத்தகையதொரு முயற்சி தான் மீண்டும் தின மலரால் செய்யப்பட்டி ருக்கிறது. யாரும் சொல்லாத செய்தி களைத் தாங்களாகவே கற்பனை செய்து கொண்டு, அதற்கு மறுப்பு எழுதும் மனோவியாதி பார்ப்பன – ஹிந்துத்துவக் கூலிகளுக்கு உண்டு. அதன் மூலம் நாம் சொல்லாதனவற்றை நம் தலையில் கட்டிவிடும் மோசடியை அரங்கேற்றுவார்கள்.
குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக பசும்பொன் முத்துராமலிங்கர் (தேவர்) போராடவில்லை என்று திராவிட இயக்கத்தவர் சொல்வதாக தாமே ஒரு பொய்யை உருவாக்கிக் கொண்டு தினமலரில் பதில் எழுதியிருக்கிறார் ஒருவர்.
சமூகப் புரட்சி வரலாற்றிலும், சமூகநீதி வரலாற் றிலும் எவர் ஒருவருடைய பங்களிப்பையும் மறைக்க வேண்டிய அவசியமோ, அபகரிக்க வேண்டிய அவசியமோ திராவிட இயக்கத்திற்கு எப்போதும் இல்லை. திராவிட இயக்கத்தின் உண்மையான, முழு மையான பங்களிப்புகளே இன்னும் ஆவணப்படுத்த முடியாத அளவிற்கு விரிந்து பரவி இருக்கின்றன. இதில் பெரியாருக்கும், திராவிட இயக்கத்திற்கும் யாரையும் மறைக்க வேண்டிய அவசியம் என்ன?
இன்று ‘சீர்மரபினர்’ என்று மரியாதையுடன் அழைக்கப்படும் இந்தப் பெயரை வழங்கியதே திராவிட இயக்கம் தான்; முத்தமிழறிஞர் கலைஞர் தான். அதற்கு முன்பு, இதே மண்ணின் மைந்தர்களைக் குற்றப் பழங்குடியினர் என்றும், குற்றப் பரம்பரையினர் என்றுமே குறிப்பிட்டுக் கொண்டிருந்த ஆவணங்களை மாற்றி சீர்மரபினர் என்று அழைக்க ஆணையிட்டவர் கலைஞர்.
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மனிதத் தன்மையற்ற முறையில், கைரேகையைப் பதியச் செய்து, இரவு நேரங்களில் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி ஆங்கி லேய அரசு செய்த கொடுமையை நீக்க ஆவன செய்தது நீதிக்கட்சியே என்னும் உண்மையைத் தெரிந்தே மறைக் கிறார்கள்; அல்லது தெரிந்து கொள்ளாமல் உளறுகிறார்கள்.
‘சுயமரியாதை ஒவ்வொருவரின் பிறப்புரிமை’ என்பது இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடு. எங்கெல் லாம் ஒருவரின் சுயமரியாதை மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அவருக்கு ஆதரவாக எழுந்து நின்றது இந்த இயக்கம்.
1911-இல் குற்றப் பரம்பரைச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது பெரியாரோ, நீதிக்கட்சியோ எதிர்க்க வில்லை என்கிறது தினமலர். அப்போது பெரியாரும் அரசியலுக்கு வரவில்லை; நீதிக்கட்சி தொடங்கப்படவுமில்லை. (ஆனால் நீதிக்கட்சி ஏன் அப்போது எதிர்க்கவில்லை என்று கேட்கிறது தினமலர்.
என்ன அறிவோ?) 1913இல் சென்னை ராஜ தானியில் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் 89 ஜாதிகள் பட்டியலில் இடம் பெற்றன. பிரமலைக்கள்ளர்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்ட போது 1915-ஆம் ஆண்டு மதுரையிலிருந்து வழக்குரைஞர் ஜார்ஜ் ஜோசப் (இன்றும் ரோசாப்பூ துரை என்று அப்பகுதி மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவர்) மூலம் ஆளுநருக்கு முறையிட்டனர். ஒவ்வொரு சமூகமாக படிப்படியாக இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.
1920-ஆம் ஆண்டு பெருங்காம நல்லூரில், சுயமரியாதைக்கான வீரஞ்செறிந்த போராட்டம் நடைபெறுகிறது. 17 பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தப் போராட்டத்திற்குப் பிறகும், கைரேகைச் சட்டம் என்று வழக்கத்தில் அழைக்கப்பட்ட இச் சட்டத்தை எதிர்த்து ஜார்ஜ் ஜோசப் அப்பகுதி முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைத் திரட்டினார். (இந்த ஜார்ஜ் ஜோசப் தான், இதற்குப் பின்னரான காலத்தில் தனித் துவமிக்க தலைவராக எழுந்த தந்தை பெரியாரை வைக்கம் போராட்டத்திற்கு அழைத்துக் கடிதம் எழுதி யவர்.)
இந்தக் கால கட்டத்தில், குறைந்தபட்ச அதிகாரங் களுடன் இரட்டை ஆட்சி முறை அடிப்படையில், சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த நீதிக்கட்சி, சமூகநீதியை நிலைநாட்டவும், கல்வி வேலைவாய்ப்பு களில் பார்ப்பனரல்லாதார் அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படுத்தவும் முயன்று வந்தது. குற்றப் பரம்பரையினர் என்று வகைப் படுத்தப்பட்டோருக்கும், மிகவும் பிற் படுத்தப்பட்ட சமூகங்களுக்கும் ஆற்றிய பணிகளில் ஒரு சிலவற்றைக் காண்போம்.
1920-1923 ஆண்டுக் காலத்தில் முதல் அமைச் சரவையின் சாதனையை நீதிக்கட்சியே வெளியிட்டுள்ளஆணை எண் 116 வாயிலாக அறிய முடிகிறது.
கோவை மாவட்டத்திலுள்ள வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு 25-நிதி உதவிகள் (ஸ்காலர்ஷிப்புகள்) அளிக்கப்பட்டன.
கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற்காகப் புதிதாக ‘லேபர் கமிஷனர்’ நியமிக்கப்பட்டு அவர் சில வழி முறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.
தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அய்ந்து பள்ளிகளைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப்பட்டது.
தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடை முறை செலவுகளை ஏற்றல்; சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.
கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் படிக்கும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.
ஆனால், தினமலரோ, 1920-ஆம் ஆண்டுக்குப் பிறகு நேராக 1939-ஆம் ஆண்டுக்குச் சென்றுவிட்டது.
”மதுரை அரசியல்” என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் ப.திருமலை எழுதியுள்ள புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்திகள் குற்றப் பரம்பரைச் சட்டம் பற்றிய பல்வேறு தகவல்களைத் தருகின்றன. இவர் எந்தக் கட்சியைச் சார்ந்தவரும் அல்லர். பொது வானவர்.
“1933 இல் இந்திய அரசியல் சட்ட சீர்திருத்தக் குழு முன்னிலை யில் நடந்த விசாரணையில் இந்தச் சட்டத்தின் கொடுமைகளையும் தீர்க்கும் வழி முறைகளையும் குறித்து அம்பேத்கர் பேசினார்.
அப்போது அவர், ‘குற்றப் பரம்பரையினர் எனப்படுவோரின் கொடூர நிலையை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். குற்றப் பரம்பரையினர் நாட்டு மக்களிடையே சிதறிக் கிடக்கின்றனர். பம்பாயில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து பேசுகிறேன். இந்த மக்களின் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்தவும், நலன்களைப் பாதுகாக்கவும் அந்தச் சட்டத்தில் ஆளுநருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டி ருக்கின்றன. அந்தச் சட்டம் பத்தி 108இன் கீழ் ஆளுநர் சில ஆணைகளைப் பிறப்பித்து, நாடு முழுவதும் சிதறிக் கிடக்கின்ற அந்த மக்களின் நலனைப் பாதுகாக்கவும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க முடியாதா என்ன? ஒருவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்று ஆளுநருக்குத் தெரிந்தவுடன், அவர்களது நலனுக்குச் சில சட்டங்கள் இயற்றலாம் அல்லவா? ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்தால் என்ன? மக்களிடையே வசித்தால் என்ன? கிரிமினல் இன மக்கள் சம்பந்தப்பட்ட சட்டம் அந்தக் குறிப்பிட்ட இன மக்கள் எங்கே இருந்தாலும் அவர்களுக்குப் பாதகமாகவே இருக்கிறது’ என்றார்.
அந்த விசாரணையில்தான் குற்றப் பரம்பரைச் சட்டத்தில் திருத்தம் செய்யவோ, குற்றப் பரம்பரையினருக்கு மறுவாழ்வு அளிப்பதற்கோ, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கோ இந்திய அரசின் ஆளுநரை விட அந்தந்த மாநில அரசுகளுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என்பதை இந்திய அரசே பதிவு செய்யக் காரணமானார் அம்பேத்கர்.
பெருங்காமநல்லூர் போராட்டத்துக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி அரசு குற்றப் பரம்பரைச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து, கள்ளர்களில் பெரும்பான்மையான மக்களை அந்தச் சட்டத்தின் பிடியிலிருந்து விடுவித்தது. கள்ளர் சீரமைப்புக்கு என தனியாக ஒரு அய்.சி.எஸ். அலுவலரை நியமித்தது. ‘லேபர் கமிஷனர்’ என்பது அந்தப் பதவியின் பெயர். அவர் அளித்த சிபாரிசுகளின்படி நீதிக்கட்சி அரசு கள்ளர் சீரமைப்புப் பணிகளை கள்ளர் சீரமைப்புத் திட்டம் என்ற பெயரில் முழு வீச்சில் செயல்படுத்தியது.
1934 மே 12, 13 தேதிகளில் அபிராமத்தில் நடந்த மாநாட்டின் தீர்மானப்படி ஆப்ப நாட்டு மறவர்களை குற்றப்பரம்பரைப் பட்டியலில் இருந்து நீக்கக் கோரி அரசை சந்தித்துப் பேச ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவர் வரதராஜுலு நாயுடு. உறுப்பினர்களாக முத்துராமலிங்க தேவர், நவநீதகிருஷ்ண தேவர், பிள்ளையார்குளம் பெருமாள் தேவர், சசிவர்ண தேவர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அந்தக் குழு நீதிக்கட்சி அரசி டம் மனு அளித்தது. வெறும் மனு அளித்த உடனேயே அந்தப் பிரிவு மக்களைப் பட்டியலில் இருந்து நீக்கியது நீதிக்கட்சி அரசு. அப்போது பொப்பிலி அரசர் என்ற இராமகிருஷ்ண ரங்காராவ் முதலமைச்சராக இருந்தார்.
1947 ஏப்ரல் மாதம் சென்னை மாகாண உள்துறை அமைச்சராக இருந்தவரும் சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவருமான பி. சுப்பராயன்தான் இந்தக் கொடிய சட்டத்தை ஒழிக்கும் சட்ட முன் வடிவை ஆளுநரிடம் சமர்ப்பித்து, அவரது ஒப்புதலுக்குப் பின் 1947 ஜூன் 5 ஆம் நாளில் இந்தச் சட்டத்தை ஒழித்தார்.”
திராவிட இயக்கத்தின் பங்களிப்பு என்ன என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தருகிறது இந்த வரலாறு. ஆனால் தினமலரோ இதை மறைக்கிறது.
1934-ஆம் ஆண்டு தந்தை பெரியார் சிறையில் இருந்தபோது நடைபெற்ற அபிராமம் மாநாட்டில், காங்கிரஸ் கட்சித் தலைவரும், தந்தை பெரியாரின் நண்பருமான பி.வரதராஜுலு நாயுடு பங்கேற்கிறார். அந்த மாநாட்டின் சார்பாக மனு வழங்கப்படுகிறது. அப்போது நடவடிக்கை எடுத்தவர் முகமது உஸ்மான் என்ற ஆளுநர் என்று எழுதுகிறது தினமலர். இதோ: “அந்த மனு மீதான அன்றைய கவர்னர் சர் முகமது உஸ்மான் நடவடிக்கையால், 2,000 பேர் மீதான சட்டம், 341 பேர் என குறைந்தது.”
முகமது உஸ்மான் யார்? நீதிக்கட்சியின் தலைவர் அல்லவா? பொப்பிலி அரசர் காலத்தில் அமைச்சராக இருந்து, பின்னர் நான்குமாத காலத்திற்கு சென்னை மாகாணத்தின் இடைக்கால ஆளுநராக, பிரிட்டிஷார் அல்லாத ஒருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டார் என்றால் அவர் முகமது உஸ்மான் தான். அவருடைய பெயரைக் குறிப்பிட்டுள்ள தினமலருக்கு, அவர் யார் எனத் தெரியவில்லை என்றுதானே பொருள். (தெரிந்திருந்தால், அதையும் மறைத்திருப்பார்கள்.)
பசும்பொன் முத்துராமலிங்கம்(தேவருக்கு) அவர்களுக்கு தந்தை பெரியாரின் பகுத்தறிவு உள்ளிட்ட சில கொள்கைகளில், ஈடுபாடு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், பெரியாருக்கும் அவருக்கும் நேரடி முரண் இருந்ததாக, வரலாற்றில் இல்லாத கதைகளை, பொய்யாக அவரது பெயரால் உருவாக்கிக் கொண்டிருப்பது ஆர்.எஸ்.எஸ். தான்!
தமிழர்களை ஜாதி ரீதியாக அணி திரட்ட முயலும் ஆர்.எஸ்.எஸ்., அடுத்து குறி வைத்திருப்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைத் தான். ஒடுக்கப்பட்டோருக்கும் பிற்படுத்தப் பட்டோருக்கும் திராவிட இயக்கம் ஆற்றியிருக்கும் அளப்பரிய பணி களால் ஜாதி இழிவிலிருந்து வெளிவந்து கொண்டி ருக்கும் போது, அவர்களை மீண்டும் அக் குழியில் தள்ளி, தங்களின் ஏவலராக வைத்துக் கொள்ளத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் சதியைப் புரிந்து கொள்வோம்.
1992-ஆம் ஆண்டு இந்திரா சஹானி வழக்கில் மண்டல் ஆணைய அறிக்கைக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில், மாண்பமை நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் மட்டும் தனியாகத் தனது தீர்ப்புரையை எழுதினார். “அனைவரும் ஒரே கருத்தில் தானே இருக்கிறோம். ஒரே தீர்ப்பாக எழுதிவிடலாமே” என்று மற்ற நீதிபதிகள் கேட்ட போதும், “நான் குறிப்பாக எழுத வேண்டிய சில செய்திகள் இருக்கின்றன. குற்றப் பழங்குடியினர் என்று கை ரேகைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்த சமூகத்தில், பெண் களின் கண்ணீருக்கிடையே காவல் நிலையத்திற்குச் சென்று ஒவ்வொருநாளும் ஆண்கள் கைநாட்டு வைக்க வேண்டியிருந்த சமூகத்தில் பிறந்த நான், இன்று ஒரு காவல் துறை அதிகாரியை விசா ரணைக்கு அழைக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு திராவிட இயக்கம் வழங்கிய சமூகநீதி தான் காரணம். எனவே, நான் சொல்ல வேண்டிய செய்திகளைத் தனியே எழுதுகிறேன்” என்று தனித் தீர்ப்புரை எழுதினார் நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன்.
ஒவ்வொரு சமூகத்துக்கும் திராவிட இயக்கம் ஆற்றியிருக்கும் பங்களிப்பு தனித்துவமானது. அதை ‘நூல்’ திரையிட்டு மறைக்கவும், இல்லாதவற்றை இட்டுக்கட்டவும் முயலாதீர்! எச்சரிக்கை!
சமூகப் புரட்சி வரலாற்றிலும், சமூகநீதி வரலாற்றிலும் எவர் ஒருவருடைய பங்களிப்பையும் மறைக்க வேண்டிய அவசியமோ, அபகரிக்க வேண்டிய அவசியமோ திராவிட இயக்கத்திற்கு எப்போதும் இல்லை. திராவிட இயக்கத்தின் உண்மையான, முழுமையான பங்களிப்புகளே இன்னும் ஆவணப்படுத்த முடியாத அளவிற்கு விரிந்து பரவி இருக்கின்றன. இதில் பெரியாருக்கும், திராவிட இயக்கத்திற்கும் யாரையும் மறைக்க வேண்டிய அவசியம் என்ன?
“குற்றப் பழங்குடியினர் என்று கைரேகைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்த சமூகத்தில், பெண்களின் கண்ணீருக்கிடையே காவல் நிலையத்திற்குச் சென்று ஒவ்வொருநாளும் ஆண்கள் கைநாட்டு வைக்கவேண்டியிருந்த சமூகத்தில் பிறந்த நான், இன்று ஒரு காவல் துறை அதிகாரியை விசாரணைக்கு அழைக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு திராவிட இயக்கம் வழங்கிய சமூகநீதி தான் காரணம். எனவே, நான் சொல்ல வேண்டிய செய்திகளைத் தனியே எழுதுகிறேன்” என்று தனித் தீர்ப்புரை எழுதினார் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன்.
அன்றைய தென்னாற்காடு மாவட்டம் ( தற்பொழுது கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் இருக்கும் நெய்வேலி – வெள்ளையன் குப்பம்) வன்னியர் படையாட்சி மக்களை குற்றப்பரம்பரை என்று அறிவித்த பொழுது, உனக்கு எதிராக போராடியது நீதிக்கட்சியும் பெரியாரும்தான்.. குறிப்பாக நெய்வேலிக்கு 600 ஏக்கரை தானமாக அளித்த ஜம்புலிங்க முதலியார் அவர்கள் மிகப்பெரிய போராட்டம் எடுத்துள்ளார்… இதனைக் குறித்து ” தென்னார்க்காடு மாவட்ட படையாட்சிகள் ” இன்று பெரியார் கட்டுரை எழுதியுள்ளார் குடியரசில்…
புதுமை பலரும் மறந்து விடுகிறார்கள்.
* அதற்க்கு எதிராக