‘அது வேற வாய்’

viduthalai
1 Min Read

குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியதால் போட்டியில் இருந்து விலகியது அமமுக – இது அன்று.

10.02.2023 ஈரோடு சட்டப்பேரவைக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட தினகரன் கட்சியின் அமமுக வேட்பு மனு தாக்கல் செய்தது. மேலும் தனக்கு தனது கட்சியின் சின்னமாக மக்கள் மனதில் நின்றுவிட்ட குக்கர் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், தேர்தல் ஆணையமோ அதை விருப்பப் பட்டியலில் வைத்தது. இதனை அடுத்து அந்தச் சின்னத்தை கேட்டு 4 சுயேட்சைகள் விருப்பம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்கமுடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததால் ஈரோடு இடைத் தேர்தல் போட்டியிலிருந்து அமமுக தினகரன் விலகிவிட்டார். ஆனால் இம்முறை பாஜகவோடு கூட்டணி வைத்த அதே நாளில் தினகரனின் அமமுக-விற்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டது. இதற்கு தேர்தல் ஆணையம் என்ன கூறப் போகிறதோ??

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *