கிருஷ்ணகிரி, மார்ச்.29– ‘தேர்தல் ஆணையத்திற்கு ஒன்றிய அரசு கொடுக்கும் அழுத்தம் காரண மாக பா.ஜனதா கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் கேட்கும் சின்னம் கிடைக்கிறது’ என்று அ.தி.மு.க. துணை பொதுச் செய லாளர் கே.பி.முனுசாமி கூறினார்.
கூட்டணி கட்சிகளுக்கு சின்னம்
அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் நேற்று (28.3.2024) செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதா இடத்தில் மோடி உள்ளதாக டி.டி.வி. தினகரன் பேசியுள்ளார். அவரை ‘எனது முகத்தில் – முழிக்காதே’ என துரத்தியவர் ஜெயலலிதா கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியா, இந்த லேடியா எனக்கேட்டவர் ஜெய லலிதா. ஆனால், தற்போது சந்தர்ப் பவாத கூட்டணி அமைத்து, ஜெயலலிதா பெயரை வைத்து இன்று டி.டி.வி. தினகரன் நாடகமாடுகிறார்.
ஒன்றிய பா.ஜனதா அரசு தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்கும் அழுத்தம் காரண மாகவே, அவர்களது கூட் டணிக் கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைக்கிறது.எதிர்க் கட்சிகள் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரி கிறது. பா.ஜனதாவினர் 350 – முதல் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்கிற மாயத் தோற்றத்தை உருவாக்கி, மக்களிடையே வாக்குகளை பெற முயற்சி செய்கின்றனர். இதேபோல், அண்ணாமலை கோவையில் வெற்றி பெறுவது உறுதி எத்தனை வாக்குகள் வித்தியாசம் என்பதை தான் பார்க்க வேண்டும் என்றெல் லாம் பேசி வருகின்றனர். அவர்கள் கற்பனை உலகத்தில் மிதந்து வருகின்றனர். கோவை யில் பா.ஜனதா எந்த இடத்தை பிடிக்கப் போகிறது என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.
தேர்தல் ஆணையம் தற் போது ஒன்றிய அரசின் அழுத்தத்தில், அதிகாரத்தை தவறாகப் செய்கிறது. இதை தேர்தலில் அவர்கள் செய்ய முடியாது. அதையும் தாண்டி ஒருதலைபட்சமாக செயல்பட் டால் அந்த வாக்குச்சாவடியிலேயே பதில் கிடைக்கும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தன்னை காப்பாற்றி கொள்ள சிறுபான்மையினரை பற்றி பேசுவார். அவரை போலவே அவரது மகன் உதய நிதியும் சிறுபிள்ளைத்தனமாக பேசி,மக்களை ஏமாற்ற பார்க் கிறார். தி.மு.க.வினர் கடந்த காலங்களில், ‘கோ பேக் மோடி’ என்றனர். தற்போது ‘வெல்கம் மோடி’ என்கின்றனர். தொடர்ந்து மக்களை ஏமாற்று கின்றனர். மோடி அலை என்ற ஒன்று இல்லை என்பது தேர்தல் முடிவுக்கு பின் தெரியும்.
-இவ்வாறு அவர் கூறினார்.