நாடு திரும்ப….
இலங்கை நீதிமன்றத்தில் இரா மேசுவரம் மீனவர்கள் 7 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தண்டனையை 5 ஆண்டு களுக்கு நிறுத்தி வைத்து, நாடு திரும்ப 7 பேருக்கும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
குரூப்-1 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக் கலாம் என்று அறிவித்துள்ளது.
உயர்வு
நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு ஊதியத்தை உயர்த்தி ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி ரூ.319 கிடைக்கும்.
திட்டம்
அரசு கலைக் கல்லூரிகளில் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது போல, 2024-2025ஆம் கல்வியாண் டில் அரசு உதவி பெறும் கல்லூரி களுக்கும் மாணவர் சேர்க்கை நடத்த கல்லூரி கல்வி இயக்ககம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.