29.3.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
♦ சிறையில் இருந்து அரசுப் பணிகளை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்வதில் தடையில்லை – டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ கேசிஆர் கட்சியின் மா நிலங்களவை உறுப்பினர் கேசவராவ் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார்.
♦ பஞ்சாப் ஆம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பாஜக ‘ஆபரேசன் லோடஸ்’ முயற்சி – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ மேற்கு வங்கம் கிருஷ்ணாநகர் வேட்பாளருக்கு விடுத்த அழைப்பில், அமலாக்கத்துறையால் கைப்பற்றப் பட்ட ரூ. 3000 கோடியை மக்களிடம் திருப்பித் தருவதற் கான ‘சட்ட வழிகளை’ ஆராய்ந்து வருவதாக பிரதமர் கூறியது தேர்தல் விதிமுறை மீறல் என தேர்தல் ஆணை யத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் புகார்.
♦ சோனியா, கார்கே, ராகுல் ஆகியோர் ஏப்ரல் 6ஆம் தேதி ஜெய்ப்பூரில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளி யிடுகின்றனர்
♦ சரத் பவார் கட்சியில் இருந்து விலகி அஜித் பவார் மற்றும் பிற கட்சித் தலைவர்களுடன் பாஜகவில் இணைந்த எட்டு மாதங்களுக்குப் பிறகு, ஏர் இந்தியா-இந்தியன் ஏர் லைன்ஸ் இணைப்பு வழக்கில் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட பிரபுல் படேல் மீதான வழக்கை முடித்து வைக்க சி.பி.அய். மனு தாக்கல் செய்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ தினமும் ரூ.400 தர காங்கிரஸ் வாக்குறுதி யால் பாஜக அச்சம் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு 4% முதல் 10% வரை ஊதிய உயர்வு என ஒன்றிய அரசு அறிவிப்பு
♦ கடந்த வாரம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சிபிஅய்யால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் ஏற்று மதியில், பாஜக மாநிலத் தலைவர் டக்குபதி புரந்தேஸ்வரிக்கு போதைப்பொருள் கடத்தலுக்கு தொடர்பு இருப்பதாக ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் குற்றச்சாட்டு.
♦ பாஜக அரசின் மீது மக்களுக்கு கோபம் உள்ளது, வாஜ்பாய்க்கு ஏற்பட்ட கதியை மோடி சந்திக்க நேரிடும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் தெரிவித்துள்ளார்.
தி இந்து:
♦ பிஎச்டி சேர்க்கைக்கும் வரும் ஆண்டுகளில் இருந்து நெட் தேர்வு கட்டாயம் என மோடி அரசின் யு.ஜி.சி. முடிவு.
றீ மோடி அரசு தவறான அக்னிவீர் திட்டத்திற்காக இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – மல்லிகார் ஜூனா கார்கே
தி டெலிகிராப்:
♦ டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கான “நியாயமான, வெளிப்படையான, சரியான நேரத்தில் சட்டப்பூர்வ செயல்முறைகளை” ஊக்குவிப்பதை யாரும் ஆட்சேபிக்க முடியாது என அமெரிக்கா கருத்து.
டைம்ஸ் ஆப் இந்தியா:
♦அமேதியைச் சேர்ந்த நீட் தேர்வில் பங்கேற்ற மாணவி கோட்டாவில் உள்ள தனது தங்கும் அறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வாரத்தில் இது இரண்டாவது தற்கொலையாகும். இந்த ஆண்டு ராஜஸ் தானின் பயிற்சி மய்யத்தில் தயாராகும் மருத்துவ மற்றும் பொறியியல் மாணவர்களின் ஏழாவது தற்கொலை.
– குடந்தை கருணா