இன்னும் எத்­தனை காலம்­தான் ஏமாற்­று­வாரோ இந்த மோடி?

viduthalai
7 Min Read

‘மைனிங்’ ஊழல் மன்னன் காலி ஜனார்த்தன ரெட்டி
பா.ஜ.க.வில் சேர்க்கப்பட்ட போது …

வாரிசு அர­சி­ய­லை­யும், ஊழ­லை­யும்ஒழிக்­கவே தான் இந்த பூமி­யில் அவ­த­ரித்­துள்­ள­தாக அலப்­பறை கிளப்­பிக் கொண்­டி­ருக்­கும் பிர­த­மர் மோடி­யின் முகத்­திரை நாளும் நாளும் கிழிந்து தொங்­கத் தொடங்கி வரு ­கி­றது.பி.ஜே.பி. உண்­மை­யி­லேயே வாரிசு அர­சி­யலைஒழிக்­கி­றதா? தமிழ்­நாட்­டில் டாக்­டர் ராம்­தாஸ் – அன்­பு­மணி தலை­மை­யிலே இயங்­கும் பாட்­டாளி மக்­கள் கட்­சி­யு­ட­னும், மூப்­ப­னா­ரின் மகன் வாசன் தலைமை ஏற்று நடத்­தும் தமிழ் மாநில காங்­கி­ர­சு­ட­னும், கரு­நா­ட­கத்­தில் தேவ­க­வுடா, அவர் இளைய மகன் குமா­ர­சாமி, மூத்­த­ ம­கன் ரேவண்ணா, குமா­ர­சா­மி­யின் மனைவி, ரேவண்­ணா­வின் மனைவி, குமா­ர­சா­மி­யின் மகன், ரேவண்­ணா­வின் மகன் என்று ஒட்­டு­மொத்­தக் குடும்­பமே நடத்­திக்­கொண்­டி­ருக்­கும் மதச்­சார்­பற்ற ஜனதா தளம் (JDS) கட்­சி­யு­ட­னும், என்.டி.ராம­ராவ் ஆரம்­பித்து பின்­னர் அவ­ரது மரு­ம­கன் சந்­தி­ர­பாபு நாயுடு தலை­வ­ரா­க­வும், நாயு­டு­வின் மகன் நாரா லோகேஸ் பொதுச்செய­லா­ள­ரா­க­வும் விளங்கிடும் தெலுங்கு தேசம்கட்­சி­யு­ட­னும் வடக்கே ராம்­வி­லாஸ் பஸ்­வா­னின் மகன் சிராஜ் பஸ்­வா­னின் லோக் ஜன­சக்தி கட்­சி­ யு­ட­னும், கூட்­டணி வைத்து பா.ஜ.க., தேர்­தலை சந்­தித்­துக் கொண்டிருக்கிறது என்­ப­தெல்­லாம் தெரிந்­தும், மோடி, வாரிசு அர­சி­யலை ஒழிக்­கப் போகி­றேன்” என்று கூறிக்­கொண்டு திரி­வ­தைப் பார்க்­கும் போது, மக்­க­ளின் உட­லில் உள்ள அத்­த­னைப் பொறி­களி­லி­ருந்­தும் சிரிப்பு வெடித்­துக் கிளம்­பத்­தானே செய்­கி­றது!

மறைந்த பெருங்கவி­ஞர் ஒரு­வர், அதிக அள­வில் மது அருந்­திக் கொண்­டி­ருப்­ப­தைக் கண்ட அவ­ரது நண்­பர் ஒரு­வர், ‘இப்­படி ஓய்­வின்றி குடித்து உடம்­பைக் கெடுத்­துக் கொள்­கி­றீர்­களே, ஏன்?’ – என்று கேட்­ட­போது “நாட்­டி­லே­யுள்ள மதுவை எல்­லாம் நாமே குடித்­துத் தீர்த்­து­விட்­டால் மது ஒழிந்து விடு­மல்­லவா” – என நகைச்­சு­வை­யு­டன் கூறி­னா­ராம். அந்­தக் கவி­ஞ­னின் மது ஒழிப்பு நட­வ­டிக்­கை­யும் மோடி­யின் வாரிசு ஒழிப்பு அர­சி­ய­லும் ஒரே ரகத்­தைச் சார்ந்­த­தா­கவே இருக்­கி­றது!

“வாரிசு அர­சி­யலை ஒழிப்­பதே இலட்­சி­யம்என்று கூறி இப்­படி வாரி­சுக் கட்­சி­க­ளு­டன் கூட்­டணிசேர்­கி­றீர்­களே?”என்று கேட்­டால் அது குறித்து மனி­தர் வாயைத் திறப்­பதே இல்லை; இடத்துக்குத் தகுந்­தாற்­போல அலி­கார் பூட்­டை­யும், திண்­டுக்­கல் பூட்­டை­யும் வாங்கி வாயைப் பூட்­டிக் கொள்­கி­றார்!மோடி அமைச்­ச­ர­வை­யில் உள்ள வாரி­சு­கள் பட்­டி­யல் படங்­க­ளோடு, (செய்தி ஊட­கங்­கள் பல இருட்­ட­டிப்பு செய்த நிலை­யி­லும்) சமூக ஊட­கங்­க­ளில் வந்­த­னவே; ஏன் எதிர்க்­கட்­சி­யி­னர் பல­ரும் பா.ஜ.க.வை ஆக்­ர­மித்­துள்ள வாரி­சு க­ளைப் பட்­டி­ய­லிட்­டுக் கேட்­ட­னரே; அதற்கு பதில் அளித்­தாரா? அந்­தப் பிரச்­சினை குறித்து பதி­ல­ளிக்­காது வாயை ஜிப் போட்டு தைத்து வைத்­துக் கொண்­ட­வர்­கள்தானே மோடி, அமித்ஷா, நட்டா கூட்­டா­ளி­கள்!மோடி வாரிசு அர­சி­யலை ஒழிக்­கும் இலட்­ச­ணம் இப்­படி சந்தி சிரிக்­கை­யில், அவர் ஊழலை ஒழிக்­கப் போவ­தா­கக் கூறு­வது, சாக்­கடை சக­தி­யில் ஊறி­டும் பிராணி – சுத்­தம் பற்றி மேடை ஏறி சத்­தம் போட்டு முழங்­கு­வது போலவே இருக்­கி­றது.

• 526 கோடிக்கு மன்­மோ­கன்­சிங் அரசு வாங்­கு­வ­தற்கு ஒப்­பந்­தம் போட்ட ரஃபேல் விமா­னங்­கள் தொடர்­பான ஒப்­பந்­தங்­களை ரத்து செய்து விட்டு, அதே விமா­னங்­களை சுமார் 1670 கோடி கொடுத்து வாங்­கு­வ­தாக மோடி அரசு ஒப்­பந்­தம் செய்து கொண்­டது.
• மன்­மோ­கன் சிங் அரசு போட்ட ஒப்­பந்­தப்­படி18 விமா­னங்­கள் மட்­டுமே உட­னடி தயார் நிலை­யி­லும், மீதி 108 விமா­னங்­கள் இந்­தி­யா­வி­லேயேதயா­ரிக்­கப்­ப­டும். ஆனால் மோடி ஒப்­பந்­தப்­படி எல்­லாமே பிரான்­சில்­தான் தயா­ரிக்­கப்­ப­டும்.மன்­மோ­கன்­சிங் அர­சின் ஒப்­பந்­தப்­படி ரஃபேல் விமா­னம் தயா­ரிக்­கும் நிறு­வ­னம், இந்­தி­யா­வில் உள்ள பொதுத்­துறை நிறு­வ­ன­மான ஹெச்.ஏ.எல்.(HAL) நிறு­வ­னத்­துக்கு தொழில்­நுட்ப ஒத்­து­ழைப்புவழங்­கும். மோடி­யின் ஒப்­பந்­தப்­படி, விமா­னத்தயா­ரிப்­பில் எந்­த­வித அனு­ப­வ­மு­மில்­லாத அனில்அம்­பா­னி­யின் ரிலை­யன்ஸ் நிறுவனத்துக்கு தொழில்­நுட்ப ஒத்­து­ழைப்பு தரப்­ப­டும். (2015இல் மோடி பிரான்ஸ் சென்றுரஃபேல் விமா­னம் வாங்­கப்­ப­டும் என்று அறி­வித்­த­ போது, அவ­ரு­டன் பிரான்ஸ் சென்­ற­வர் அனில் அம்­பானி!)

அரசியல், தமிழ்நாடு

நாட்­டின் பாது­காப்­புத் தொடர்­பான விமா­னங்­கள் வாங்­கு­வ­தில் இத்­தனை குள­று­ப­டி­கள் நடந்­த­தற்­குக் கார­ணம் என்ன? என்­றெல்­லாம் ஊழல் நட­வ­டிக்­கை­கள் ஒவ்­வொன்­றையும்சுட்­டிக் காட்டி எதிர்க்­கட்­சிகள் எழுப்­பிய கேள்­விக­ளுக்கு பிர­த­மர் மோடி வாயையே திறக்­க வில்லை; இந்­தப் போர் விமா­னங்­கள் வாங்­கியவிலையை, ரக­சி­ய­மா­கவே மோடி வைத்­தி­ருந்­த­தும்இங்குகுறிப்­பி­டத்­தக்­கது! பிரான்­சுக்கு அனில் அம்­பா­னி­யோடு பறந்து சென்று ரஃபேல் விமா­னம் வாங்­கப்­ப­டும் என்று அறி­வித்­த­தி­லி­ருந்து, ஒப்­பந்­தம் போட்ட வரை நேர­டி­யா­கத் தொடர்­பி­லி­ருந்­த­வர் பிர­த­மர் மோடி! எதிர்க்­கட்­சி­கள் எழுப்­பிய குரல் எல்­லாம் மோடி­யின் காதில் விழா­தது போல, அதற்கு பதிலே கூறாது கடை­சி­வரை இருந்த மற்­றும் இருந்து கொண்­டி­ருக்­கும் மோடி­தான் ஊழலை ஒழிக்­கப் போகி­றா­ராம்!

சி.ஏ.ஜி. அறிக்கைப்படி பா.ஜ.க. அரசில் நடை பெற்ற ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஊழல், தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.8 ஆயிரத்து 250 கோடி ஊழல் போன்றவை குறித்தும் வாயையே திறப்பதில்லை மோடி!

இப்­போ­தும் நமக்கு மதுவை எல்­லாம் குடித்து மதுவை ஒழிக்­கப் போவ­தா­கச் சொன்­ன­து­தான் நினை­வுக்கு வரு­கி­றது! அப்­ப­டித்­தான் ஊழல் பேர் வழி­கள் என்று மோடி­யால் குற்­றம் சாட்­டப்­பட்ட எதிர்க்­கட்­சி­யி­னரை அழைத்து பா.ஜ.க.வில் சேர்த்து அவர்­களை புனி­த­மாக்­கிக் கொண்­டி­ருக்­கி­றார்மோடி! மோடி நடத்­தும் யோக்ய நாட­கத்தை ஒவ்­வொன்­றா­கப் பட்­டி­ய­லிட்­டால் பக்கங்­கள் போதாது!

இப்­போது மிகச் சமீ­பத்­தில் கரு­நா­டக மாநி­லத்­தில், ஒரு பெரும் புள்ளி பி.ஜே.பி. யில் மீண்­டும் இணைக்­கப்பட்­டுள்­ளார். இவர் மே­னாள் பி.ஜே.பி. தான்!
ஒரு காலத்­தில் கரு­நா­டக மாநில பி.ஜே.பி. யில் அமைச்­ச­ரா­க­வும், ‘கிங்­மேக்­க­ரா­க’­வும் இருந்­த­வர் பெயர் காலி ஜனார்த்­த­ன­ரெட்டி! சட்­ட­வி­ரோ­த­மாக கனிம வளங்­க­ளை­யும் இரும்­புத் தாதுக்­க­ளை­யும் அள்ளி விற்­பனை செய்­த­தாக 2011 ஆம் ஆண்டு சி.பி.அய்.யால் கைது செய்­யப்­பட்­ட­வர்.

அரசியல், தமிழ்நாடு

2008 ஆம் ஆண்டு கரு­நா­டக மாநி­லத்­தில் பி.ஜே.பி. அரசு நடந்­த­போ­து­தான் இவர் சட்ட விரோ­தச் செயல்­க­ளில் ஈடு­பட்டு ஊழல் செய்­த­தா­கக் கூறப்­பட்­டது. 2011 ஆம் ஆண்­டில் அவர் சி.பி.ஐ.யால் கைது செய்­யப்­பட்­ட­தும் குறிப்­­பிடத்­தக்­கது. 2008 ஆம் ஆண்டு பி.ஜே.பி.யின் ஆட்சி எடி­யூ­ரப்பா தலை­மை­யில் கரு­நா­ட­கத்­தில் நடந்­த­போது அவர் அமைச்­ச­ராக இருந்­த­வர். ‘Mining Mafia’(இரும்­பு­தாது சுரங்­கக் கொள்­ளைக் கும்­பல்) என ஒரு கட்­டத்­தில் பி.ஜே.பி. தலை­வர்­க­ளா­லேயே வரு­ணிக்­கப்­பட்­ட­வர்! பிறகு பி.ஜே.பி.யைத் துறந்து தனிக் கட்சி துவங்­கி­னார் இவர்! அந்­தக் கட்சி கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யிட்­டது!

ஓரி­டத்­தைத் தவிர போட்­டி­யிட்ட எல்லா இடங்­ க­ளி­லும் தோற்­றி­ருந்­தா­லும் பெல்­லாரி பகு­தி­க­ளில் அந்­தக் கட்­சி­யி­னர் கணி­ச­மான வாக்­கு­க­ளைப் பெற்­றி­ருந்­த­னர்! இவர் தனிக் கட்­சித் தொடங்­கி ­யி­ருந்­தா­லும், இவ­ரது கூட்டாளிகளாக இருந்த சகோ­த­ரர்­கள் பி.ஜே.பி.யில் தொடர்ந்­தார்­கள். பி.ஜே.பி. வேட்­பா­ள­ராகசென்ற தேர்­த­லில் களம் இறங்கி காங்­கி­ரஸ் வேட்பாளர்களிடம் தோற்­ற­னர்! தோற்­ற­பின் செய்­தி ­யா­ளர்­கள் அவர்­களை பேட்டி கண்­ட­போது, “பி.ஜே.பி.யையும் எங்­க­ளை­யும் பயன்­ப­டுத்­திக் கொண்டு சட்ட விரோ­த­ மாக பணம் சம்­பா­தித்­த­வர் ஜனார்த்தன ரெட்டி; இந்த உண்மை மொத்த உல­குக்கே தெரி­யும்” – என்று வெளிப்­ப­டை­யாக பி.ஜே.பி.யின் யோக்­ய­தையை போட்டு உடைத்­த­னர்!
ஜனார்த்­தன ரெட்டி, சட்ட விரோ­த­மாக இரும்­புத்­தாது எடுத்து ஏற்­று­மதி செய்­த­தில் ஏறத்­தாழ 35,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடை­பெற்­றுள் ­ள­தாக குற்­றம் சாட்­டப்­பட்டு கைதா­ன­வர்! சி.பி.அய். இவர் மீது 8வழக்­கு­கள் தொடர்ந்­தி­ருந்­தது.
அது மட்­டு­மல்ல; ரெட்டி சகோ­த­ரர்­க­ளில் ஒரு­வ­ரும், தொடர்ந்து பார­திய ஜனதா கட்­சி­யில் இருந்து கொண்­டி­ருப்­ப­வ­ரு­மான காலி சோம சேக­ர­ரெட்டி, தனது சகோ­த­ரர் ஜனார்த்­தன ரெட்­டியை ‘பிணையில்’ விட, சி.பி.அய். தனி நீதி­மன்ற நீதி­ப­திக்கு லஞ்­சம் கொடுத்த வழக்­கில் கைதா­னார். இவர் பார­திய ஜனதா கட்­சி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­த­வர் என்­ப­தும் குறிப்­பி­டத் தகுந்­தது!

அரசியல், தமிழ்நாடு
ஊழலை ஒழிக்­கப் புறப்­பட்­டி­ ருக்­கும் மோடி கூட்­டத்­தில் மீண்­டும் இணைந்­தி­ருக்­கும் இந்த காலி ஜனார்த்­தன ரெட்டி குறித்­தும் பல ஆயி­ரம் கோடி ஊழல் வழக்­கு­கள் குறித்­தும் பலர் மறதிருக்கக்கூடும். மறந்­த­வர்­கள் சுல­ப­மாக நினை­வு­கூர, அவர் குறித்­தும் அவ­ரது உடை­மை­கள் குறித்­தும் ஏடு­க­ளில் அன்றுவந்த சில செய்­தி­க­ளைக் குறிப்­பிட்­டால் திடீ­ரென நினை­வில் பளிச்சிடக்­கூ­டும்! அத்­த­னை­யும் தங்க மய­மான செய்­தி­கள் அல்­லவா? ஜனார்த்­தன ரெட்டி அம­ரும் நாற்­காலி தங்­கத்­தால் ஆனது (அன்­றைய மதிப்­பில் 2.2 கோடி ரூபாய்) அவ­ரது பூஜை அறை­யில் இருந்த பூஜை பாத்­தி­ரங்­கள் அனைத்­துமே தங்­கத்­தால் செய்­யப்­பட்­டவை. (அன்­றைய மதிப்பு 2.58 கோடி ரூபாய்) வீட்­டில் உண­வ­ருந்த வைத்­தி­ருந்த தங்­கத் தட்­டு­கள், கிண்­ணங்கள், சிறிய பெரிய கரண்­டி­கள், முள் கரண்டி, ஸ்பூன் போன்ற தங்க உப­க­ர­ணங்­க­ளின் மதிப்பு ரூ.20.87 லட்­சம். அவர் வீட்­டில் வைத்­தி­ருந்த தங்க நகை­க­ளின்பட்­டி­யலே மூன்று முழு பக்­கங்­க­ளைக் கடந்தவை!இப்­படி தங்­கப் பட்­டி­யலே பக்­கம்­பக்­க­மாக நீளக் கூடி­யவை! அவர் மீதான கிரி­மி­னல் வழக்­கு­கள் பல ஆண்­டு­க­ளாக நீண்டு கொண்­டி­ருக்­கின்­றன.

இந்த நபர் பா.ஜ.க.வின் மே­னாள் அமைச்­சர்! “ஊழலை ஒழிப்­பதே தனது தலை­யா­யக் கடன்!” எனக் கூறி நாட்டை நித்­தம் நித்­தம் ஏமாற்­றிக் கொண்­டி­ருக்­கும் மோடி கட்­சி­யில் இப்­போது மீண்­டும் ஒரு முக்­கி­யப் புள்­ளி­யா­கி­ யுள்­ளார்!

அரசியல், தமிழ்நாடு

“இருக்­கின்ற மதுவை எல்­லாம் குடித்து மதுவை ஒழிக்­கப் போகி­றேன்” – என்று கவி­ஞர் நகைச்­சு­வை­யா­கக் கூறி­னாரே, அது­போல மோடி கூட்­டமோ, இருக்­கிற ஊழல் பேர்­வ­ழி­களை எல்­லாம் தங்­க­ளோடு இணைத்து ஊழலை ஒழிக்­கப் போகி­றோம் என்று கூறப் போகி­றார்­களோ என்­னவோ!
“சத்­தி­யம் தவ­றாத உத்­த­மர் போலவே நடிக்­கி­றார்
சம­யம் பார்த்­துப் பல வகை­யி­லும் கொள்ளை அடிக்­கி­றார்
பக்­த­னைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்­களை வலை­யி­னில் மாட்டி
– எத்­தனை காலம்­தான் ஏமாற்­று­வார் இந்த நாட்­டிலே,”என்ற மலைக்கள்ளன் படத்துப் பாடல், இந்த மகா கொள்ளையர்களுக்கு எத்­தனை தத்­ரூ­ப­மா­கப் பொருந்தி வரு­கி­றது பார்த்­தீர்­களா?
வரும் தேர்­த­லில் இந்த ஏமாற்­றுப் பேர் வழி­க­ளின் எத்து வேலை­க­ளுக்கு முடி­வு­கட்ட எழு­வோம்; செயல்­ப­டு­வோம்!

நன்றி: ‘முரசொலி’, 29.3.2024

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *