சென்னை, மார்ச் 29 நாடாளுமன்றத் தேர்தலை நாடு முழுவதும் அமைதியாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவப்படையினர் தமிழ்நாடு வரவ ழைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு, அங்கு அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விவகாரத் தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலுக்கு அறிவுறுத்தப் பட்டது.
இதையடுத்து, தமிழ் நாடு முழுவதும் உள்ள ரவுடிகளின் பட்டியலை சேகரிக்க அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் களுக்கு அவர் உத்தரவிட் டார். அதன்படி, சுமார் 21 ஆயிரம் ரவுடிகளை பட் டியலிடப்பட்டு ள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் களில் செயல்பாட்டில் உள்ளவர்கள், திருந்தி வாழ்பவர்கள், சிறையில் உள்ளவர்கள், பிணையில் வெளியேநடமாடுபவர் கள், தலைமறைவாக உள் ளவர்கள் என தனித்தனி யாக பட்டியலிடப்பட் டுள்ளது.
மேலும், குற்ற பின்னணி கொண்ட ரவுடி களின் வீடுகளுக்குநேரடி யாகச் சென்று குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர். குற்ற பின்னணி கொண்ட சுமார் 3 ஆயிரம் பேரிடம் தவறு செய்ய மாட்டோம் என எழுதியும் வாங்கப் பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோரின் நேரடி மேற்பார்வையில் கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, அஸ்ரா கார்க் ஆகியோர், ரவுடிகளை உன்னிப்பாகக் கண்காணித்து நடவடிக் கைகளை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அமைதி யான முறையில் நாடாளு மன்றத் தேர்தலை நடத்த அனைத்து நடவடிக்கை களும் எடுக்கப்பட்டுள் ளன. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் கள் மீது பார பட்சம் இன்றி கடும்நடவ டிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் குண் டர் சட்டமும் பாயும்’’ என்றனர்.