கோவை,மார்ச் 29- கோவை மக்கள வைத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனுவின் பிரமாணப் பத்திரம் அதிகாரிகளின் உதவியுடன் மாற்றப்பட்டிருப்பதாக அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. கோவை மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை (27.3.2024) நிறைவடைந் தது. இதில் 53 வேட்பாளர்கள் சார்பில் 59 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மனுக்கள் பரிசீலனை வியாழக் கிழமை (28.3.2024) நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார், அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன், பாஜக வேட்பாளர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ம.கலாமணி உள்ளிட்ட 41 பேரின் மனுக்கள் ஏற்கப் பட்டன. பல்வேறு காரணங்களால் 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
மனுக்கள் பரிசீலனையின்போது, பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனுவில் பிழை இருப்பதாக திமுக, அதிமுக வேட்பாளர்களின் பிரதிநிதிகள், நாம் தமிழர், சுயேச்சை வேட்பாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்கு பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால் அப்போது கடும் கூச்சல் – குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் அதிமுக, நாம் தமிழர் கட்சி வேட் பாளர்களின் சார்பில் மாவட்டத் தேர் தல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட் டது. இது குறித்து அதிமுக வழக் குரைஞர் கோபாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி, வழக்குரைஞர் விஜயராகவன் ஆகி யோர் செய்தியாளர்களிடம் கூறியதா வது:
அண்ணாமலையின் வேட்புமனுவு டன் இருந்த பிரமாணப் பத்திரம் நீதி மன்றத்துக்குப் பயன்படுத்தும் பத்திரத் தில் இருந்தது.
ஆனால் நீதிமன்றப் பயன்பாட்டுக்கு அல்லாத பத்திரம் மூலம் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும். அவர் தவறான பத்திரத்தை இணைத்திருந்த நிலையில், மனுக்கள் பரிசீலனையின்போது மாவட்டத் தேர்தல் அலுவலர் இதை கவனிக்கத் தவறிவிட்டார். எனவே, அண்ணாமலை யின் மனுவை நிராகரிப்பதுடன், அவ ருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணாமலை தரப்பில் இரண்டு வேட்புமனுக்களுக்கும் ஒரே பிரமாணப் பத்திரம்தான் தாக்கல் செய்யப் பட்டிருந்தது. காலையில் ஒரு மனுவை நிராகரித்த தேர்தல் அலுவலர் மற் றொன்றை ஏற்பதாகக் கூறினார். அப்போது அந்த மனுவுடன் 200 ரூபாய்க்கான பத்திரத்தில் இருந்த பிரமாணப் பத்திரம் மட்டுமே இருந்தது. ஆனால், நாங்கள் தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்கச் சென்றபோது 100 ரூபாய் பத்திரத்திலான சரியான பிரமாணப் பத்திரம் அவரது மேஜையில் இருக்கிறது. பின்னர் அதுவே மாலை 5.17 மணிக்கு இணை யதளத்திலும் பதிவேற்றப்பட்டிருக் கிறது. தேர்தல் ஆணையமும், தேர்தல் நடத்தும் அதிகாரியும் பாஜக வுக்கு சாதகமாக நடந்து கொள்வது ஆதாரப்பூர்வமாக தெரிந்துவிட்டது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இ-மெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளோம். இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை உயர்நீதி மன்றத்தை நாட இருக்கிறோம் என் றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, பாஜக வேட்பாளர் அண்ணாமலை இரண்டு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்த நிலையில் சரியான 27-ஆம் எண் கொண்ட வேட்புமனுவுக்கான பிர மாணப் பத்திரத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு பதிலாக, கணினி ஆபரேட்டர் தவறுதலாக 17-ஆம் எண் கொண்ட மனுவுக்கான பிரமாண பத்திரத்தைப் பதிவேற்றம் செய்துவிட்டார். அதுபற்றி தெரிந்ததும் சரியான பிரமாணப் பத்திரத்தைப் பதி வேற்றம் செய்துவிட்டோம் என்றனர்.