பாசிச பா.ஜ.க. ஆட்சியை ஒன்றியத்தில் இருந்து அகற்றிட
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து
50க்கும் மேற்பட்ட அமைப்பினர் – சங்கங்கள் ஆதரவு!
“இந்தியா” கூட்டணி வெற்றிபெறப் பாடுபடுவோம் எனவும் வாக்குறுதி அளித்தனர்!
சென்னை, மார்ச் 29- தமிழ்நாடு உள்பட இந்தியாவின் கட்டுப்பாடான ஜனநாயக மதச் சார்பற்ற கூட்டாட்சித் தத்துவம் பாதுகாக்கப் படவும், பாசிச பா.ஜ.க. ஆட்சியை ஒன்றியத் தில் இருந்து அகற்றிடவும் 10 ஆண்டு காலம் ஊழல்கள் மூலம் தமிழ் நாட்டைப் படுபாதா ளத்திற்குத் தள்ளிய அ.தி.மு.க கட்சியைப் புறக்கணித்திடவும் நடைபெறும் நாடாளு மன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள இந்தியா கூட்டணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சியில் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் வெள்ளம் போல் திரண்டு வந்து வரவேற்பு தெரிவித்து இந்தியா கூட்டணிக்கே தங்களுடைய வாக்குகள் என்று கூறி ஆதரவு தெரிவித்த காட்சிகளும் செய்திகளும் தொலைக்காட்சிகள் பத்திரிகைகள் வாயிலாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் முதலமைச்சர் தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பல்வேறு கட்சிகளும் அரசியல் இயக்கங்களும் அமைப்புகளும், சங்கங்களும் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு :-
திராவிடர் கழகம்
திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி யின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் தம்முடைய அமைப்புகள் சார்பில் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
“இந்தியா” கூட்டணிக்கு எம்.ஜி.ஆர்.கழகம் ஆதரவு
இராம. வீரப்பன் தலைமையிலான எம்.ஜி. ஆர்.கழகம், தமிழ் நாடு சீர்மரபினர் நல வாரிய உறுப்பினருமான ராஜ் மற்றும் நிர் வாகிகள்;
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் சமூக நீதி மக்கள் கட்சி மாவீரன் பொல்லான் பேரவைத் தலைவர் வடிவேல் ராமன் மற்றும் நிர்வாகிகள்,
தென்னக அருந்ததியர் மக்கள் முன் னேற்றக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் செங்குட்டுவன் மற்றும் நிர்வாகிகள், கோவில் பூசாரி நல சங்கத் தலைவர் வாசு மற்றும் மாநில நிர்வாகிகள், தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கத் தலைவர் பரிமளம் மற்றும் நிர்வாகிகள்,தென்னிந்திய விஸ்வ-கர்மா முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் சரவணன்; தமிழக வீரசேவை முன்னேற்ற பேரவை, தலைவர் தங்க தமிழ் செல்வன்; தமிழ்நாடு தியாகராஜ பாகவதர் எம்கேடி பேரவை மாநிலத் தலைவர் கவிஞர் ரவி பாரதி, எஸ். ஆர்.எம். மாநில பொதுச் செயலாளர் பாலசுப் பிரமணியன் சமூக நீதிக் கட்சி சார்பில், மாநில பொதுச்செயலாளர் வெள்ளமடை நாகராசன் ஆகியோர் நேரில் சந்தித்து இந்தியா கூட் டணிக்கு நடைபெறவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தலில் ஆதரவு அளிப்பதாகவும், இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பா ளர்கள் வெற்றி பெற ஆதரவு அளிப்பதோடு, தி.மு.க. கூட்டணி வெற்றிபெற தங்கள் கட்சி நிர்வாகிகள் பாடுபடுவார்கள் எனவும் உறுதி அளித்தனர்.
மேலும், பூலித்தேவன் மக்கள் கழகத்தின் தலைவர் எஸ்.பெருமாள்சாமியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தி.மு.க. கூட்டணிக்கு புதிதாக
16 விவசாய சங்கங்கள் ஆதரவு
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கே.வீ.இளங்கீரன் தலைமையில் இந்திய விவசாயிகள் சங்கம் தனபதி, அய்க்கிய விவசாயிகள் சங்கம் சங்கரய்யா, சிபா கரும்பு விவசாயிகள் சங்கம் வாரணாசி ராஜேந்திரன், தற்சார்பு விவசாயிகள் சங்கம் பொன்னையா, உழவர் மன்ற கூட்டமைப்பு ஜீவகுமார், மதுரை மாவட்ட நஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்கம் மணிகண்டன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு நல சங்கம் சுப்பிரமணியம் உட்பட மொத்தம் 16 அமைப்புகளின் பிரதிநிதிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களை 23-3-2024 அன்று சந்தித்து தி.மு.க. கூட்டணிக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், சமூக நீதிப் பேரவை, தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம், தஞ்சாவூர் மாநகர காய்கனி விற்பனையார்கள் சங்கம், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு, நம்மாழ் வார் இயற்கை விவசாயம் ஆகிய இயக்கங் களும் தூத்துக்குடியில் முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களை 26-3-2024 அன்று காலை, தூத்துக்குடியில், கிறிஸ்துவ, இஸ்லா மிய மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் மற்றும் தொழிலதிபர்கள் 12 பேர் சந்தித்து அரசு செய்து வரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்து ஆதரவு தெரிவித்தனர், விருதுநகர் மாவட் டத்தைச் சேர்ந்த தென்னிந்திய உலோக கொள்கலன் உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம், பருப்பு உற்பத்தியா ளர்கள் சங்கத்தைச் சேர்ந்த செந்தில் மற்றும் விவேகானந்தம், தனியா உற்பத்தியாளர் வணிக சங்கத்தைச் வி.எஸ்.ஆர்.ராதாகிருஷ் ணன் மற்றும் சவுந்தர பாண்டியன் சேர்ந்த விருதுநகர், வர்த்தக சபையைச் சேர்ந்த பவ ளம் சத்யமூர்த்தி, மிள காய் வர்த்தக சபை யைச் சேர்ந்த ஆனந்த், தென்காசி மாவட்டத் தில் வைகுண்டராஜா வணிக சங்கத்தைச் சேர்ந்த செங்குந்தர் சங்கத்தைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியன், ஜவுளி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் சுப் பிரமணியன், யாதவர் சங்கத் தலைவர் குரு சாமியின் மனைவி வேலம்மாள், புளியங்குடி பள்ளிவாசல் ஜமாத் கமிட்டித் தலைவர் மவுலூல் கவுமி உட்பட 50க்கு மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர் கள் முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு ஆதரவு தெரி வித்தனர்.
.