“இந்தியா” கூட்டணிக்கு ஆதரவு பெருகுகிறது

viduthalai
1 Min Read

தூத்துக்குடி, மார்ச் 28- தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19ஆம்தேதி நடைபெறுகிறது. தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர் களை ஆதரித்து பிரச்சாரம் மேற் கொண்டு வருகிறார்.

அந்த வகையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்மேற்கொள்ள தூத்துக்குடி சென்றுள்ளார்.
இதற்கிடையில், திருநெல்வேலி, கன்னி யாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட் டங்களை சேர்ந்த கிறிஸ்துவ, இஸ்லாமிய மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் ஆகி யோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அந்தோணிசாமி ஆயர், பேரா யர் பர்னட் பாஸ், டாக்டர் மரியதாஸ். பொன்ராஜ். ஹாஜி இ.ஆர்.செய்யது அகமது, எம்.கே.எம்.செய்யது அகமது கபீர், எம்.கே.எம். அகமது ஷாபி, நவாஸ்கான், எப். காதர் முகைதீன், ஷேக் அப்துல்லா, மீனாட்சி சுந்தரம். செல்லையா ஆகியோரும், கன்னியாகு மரி மாவட்டத்தை சேர்ந்த பாலபிர ஜாதிபதி, நசரேன் சூசை ஆகியோர் சந்தித்தார்கள்.

மேலும், தூத்துக்குடி தென்னிந்திய திருச்சபை திருமண்டல பேராயர் மற்றும் செங்கோல் ஆதினம், தீப் பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், அய்க்கிய வியாபாரிகள் சங்கம், மீனவர் நல சங்கம், தூத்துக்குடி சி.எஸ்.அய். திருச்சபையினர் ஆகியோர் முதலமைச் சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்வின்போது, தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோதங்கராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *