இறுதி ஊர்வலத்தின்போது சாலைகளில் மலர் மாலைகளை வீசினால் கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

2 Min Read

சென்னை,மார்ச் 28- கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஒருவரது இறப்பின் காரணமாக நடந்த இறுதி ஊர்வலத்தின்போது மலர் மாலைகள் சாலையில் வீசப்பட்டதால் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாகவும், எனவே, இது போன்ற அத்துமீறல்களை தடுக் கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் கட லூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர், கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்,

அதையடுத்து இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்காக விசா ரித்த தலைமை நீதிபதி அமர்வு, இதுகுறித்து தமிழ்நாடு அரசு விதி முறைகளை வகுக்க உத்தரவிட்டி ருந்தது.
நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், இறுதி ஊர்வலத்தின் போது மலர் மாலைகளை வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலை களில் வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல் ஆணையர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்க ளுக்கு கடந்த மார்ச் 20இல் காவல் துறை தலைமை இயக்குநர் பிறப் பித்துள்ள சுற்றறிக்கை நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருந்ததாவது:

இறந்தவர்களின் இறுதி ஊர்வலம் எந்த வழியாக செல்கிறது என்பதை முன்கூட்டியே காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும். அந்த வழித்தடத்தில் போக்குவ ரத்தை காவல்துறையினர் ஒழுங்கு படுத்தி கொடுக்க வேண்டும்.
இறந்தவரின் உடல் மீது போடப்படும் மாலைகள், மலர் வளையங்களை வீட்டுக்கு அருகி லேயே பாதுகாப்பாக அப்புறப் படுத்த வேண்டும். இறுதி ஊர்வலத் தின்போது அதிக அளவில் மலர் மாலைகளை கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக, அந்த மாலைகளை பொது போக்கு வரத்துக்கும், வாகன ஓட்டி களுக்கும் இடையூறாக சாலைக ளில் வீசியெறிந்து செல்லக்கூடாது.

சட்டம் – ஒழுங்கு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் இறுதி ஊர்வலத்துக்கான நிபந்தனைகளை விதித்து அதை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும்.
இந்த நிபந்தனைகளை மீறு வோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக் கப்பட்டிருந்தது.
அதையடுத்து நீதிபதிகள், காவல் துறை தலைமை இயக்குநரின் இந்த சுற்றறிக்கையை காவல்துறையினர் தீவிரமாக அமல்படுத்துவர் என நம்புவதாகக் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *