கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

28.3.2024
தி வயர்:
* வேலையில்லாத் திண்டாட்டத்தை அரசால் உண்மையில் தீர்க்க முடியாது என மோடி அரசின் தலை மைப் பொருளாதார ஆலோசகர் நாகேஷ்வரன் ஒப்புதல்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பஞ்சாப், ஒடிசா மாநிலங்களில் கூட்டணி அமைக்கும் யுக்தி பாஜகவிற்கு பலிக்கவில்லை என்கிறது தலையங்க செய்தி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு, காங்கிரஸின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் குறித்து அமெரிக்கா கவலை. நியாயமான, வெளிப்படையான, சரியான நேரத் தில் சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கருத்து.
தி இந்து:
* குஜராத் பல்கலைக்கழகத்தில், ரம்ஜான் தொழுகை செய்த வெளி நாட்டு மாணவர்கள், மதவாத கும்பலால் தாக்கப்பட்டு காயமடைந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தங்கள் மீது நடந்த தாக்குதல் மட்டுமல்ல, காவல்துறையின் செயலற்ற தன்மையும் சிலர் தப்பிக்க காரணமானது என அந்த மாணவர்கள் கூறியுள்ளனர்.
* வேலையில்லாத் திண்டாட்டம் என்பது மக்களவைத் தேர்தலின் பிரதான பிரச்சினையாக இருக்கும். 10 ஆண்டுகளில் 20 கோடி வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த பிரதமர், 12 கோடி வேலை வாய்ப்புகளை இளைஞர்களிடம் இருந்து பறித்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
* பிஜேபியில் உள்ள சில முக்கிய தலைவர்களைத் தவிர, அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் மற்ற மூத்த பாஜக அதிகாரிகளின் மகன்கள் அல்லது மகள்கள் அரசியலில் உள்ளனர் என சசி தரூர் பதில்.
தி டெலிகிராப்:
* வேலைவாய்ப்பை உருவாக்க முடியாவிட்டால் பதவியில் இருந்து விலகுங்கள், மோடி அரசுக்கு காங்கிரஸ் வேண்டுகோள்.
* தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகள் தொடர்பாக பாஜக அம்பலப்படுத்தல்களுக்கு மத்தியில், பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் கருநாடக சுரங்கத் தொழிலதிபர் ஜி. ஜனார்த்தன ரெட்டியை பிஜேபி கட்சியில் சேர்த்துக் கொண்டதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பெரிய அளவிலான ஊழலை இயல்பாக்கியுள்ளனர் என்று காங்கிரஸ் கண்டனம்.
இந்தியாவின் டைம்ஸ்:
* அரசுப் பள்ளிகளில் பயின்று, தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் மற்ற மாநிலங்களிலும் திராவிட மாடல் ஆட்சி பின்பற்றப்பட்டு வருவதாக உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *