தேர்தல் பத்திரங்களுக்குள் தோண்டத் தோண்ட ஊழல்!

viduthalai
6 Min Read

ஊழலைச் சட்டபூர்வமாக்குவதற்காக பா.ஜ.க. கண்டறிந்த வழிமுறைதான் தேர்தல் பத்திரங்கள் என்ப தைத் தொடர்ந்து எச்சரிக்கை செய்து கொண்டே இருந் தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும், சமூக ஆர்வலர்கள் சிலரும் இதனைத் தொடர்ந்து எழுதியும், பேசியும், வழக்குத் தொடுத்தும் தேர்தல் பத்திர முறை கேடுகளை அம்பலப்படுத்துவதில் பெரும் பங்காற்றினர்.

அதிர்ச்சியில் உறைந்த நாடு

கட்டுரை

டெல்லி-அம்ரிஸ்டர்-கத்ரா
அதிவிரைவுச் சாலை

வழக்கு முடிந்து, தேர்தல் பத்திரங்களை வாங்கியோர் யார்? எப்போது வாங்கினார்கள்? யாருக்குக் கொடுத் தார்கள்? அவர்கள் எப்போது பணமாக்கினார்கள்? என்ற தகவல்கள் வெளிவர, வெளிவர அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது ஒட்டுமொத்த நாடும். தேர்தல் பத்திரங்களை வாங்கியதற்கும், காண்டிராக்டுகளைப் பெற்றதற்கும் தொடர்பிருக்கிறது. ரெய்டுகள் நடந்த தற்கும் தேர்தல் பத்திரங்களை வாங்கியதற்கும் தொடர் பிருக்கிறது. தேதி வாரியாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
“சி.பி.அய், அமலாக்கத்துறை, வருமானவரித் துறை யின் வழக்குகளை எதிர்கொண்டுள்ள 41 நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு சுமார் 2461 கோடி ரூபாயை நன்கொடை யாகக் கொடுத்துள்ளன. இவற்றில் 1698 கோடி ரூபாய் மேற்சொன்ன துறையினரின் சோதனை நடவடிக்கை களுக்குப் பிறகு வழங்கப்பட்டவையாகும். அதிலும் 121 கோடி ரூபாய் ரெய்டு நடந்த மூன்று மாத காலத்திற்குள் வழங்கப்பட்டதாகும்.

தேர்தல் பத்திரங்களை வாங்கிய 33 நிறுவனங்கள், இந்தியாவில் முக்கியமான 172 பெரிய காண்டிராக்டுக ளையும், திட்ட ஒப்புதல்களையும் பெற்றுள்ளன.
1751 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்களை வாங்கி யுள்ள இந்நிறுவனங்கள், அதன் மூலம் 3.7 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களையும், காண்டிராக்டுகளையும் அள்ளியுள்ளன.

“போஸ்ட் பெய்டு” முறையில் ஒப்பந்தங்கள்

அது மட்டுமல்லாமல், போஸ்ட் பெய்டு முறையில் 62,000 கோடி மதிப்பிலான திட்டங்களையும், காண்டி ராக்டுகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசும், பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளும் வழங்கியதற்குப் பிறகு, இந்நிறுவனங் களிடமிருந்து 49 முறை, மொத்தம் 580 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை லஞ்சமாகப் பா.ஜ.க. பெற்றுள்ளது” என்று பட்டியலிடுகிறார் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக வாதாடிய வழக்கு ரைஞர் பிரஷாந்த் பூஷண்.
“அய்தராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட மேகா இஞ்சினியரிங் அண்ட் இன்ஃபிராஸ்ட்ரக்சர் நிறுவனம் 966 கோடி ரூபாய்க்குத் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ள இரண்டாவது பெரிய நிறுவனம் ஆகும். இந் நிறுவனம், ஜம்மு காஷ்மீரில் ஆசியாவின் மிகப் பெரிய 4500 கோடி ரூபாய் மதிப்புள்ள சோஜிலா சுரங்கப் பாதையைக் கட்டுவது உள்ளிட்ட முக்கியமான சில காண்டிராக்டுகளைப் பெற்றுள்ளது. மும்பையின் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் புல்லட் ரயில் நிலையத்தைக் கட்டுவதற்கான 3681 கோடி ரூபாய் காண்டிராக்ட்டை 2023 மார்ச் மாதத்தில் பெற்றுள்ளது” என்று என்.டி.டி.வி இணையதளம் விவரிக்கிறது.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் சி.எம்.ரமேஷின் ரித்விக் ப்ராஜக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கிய சில வாரங்களில், இமாச்சலப் பிரதேசத்தின் சன்னி நீர்மின்சக்தித் திட்டத்திற்கான பொறியியல், பொருள் வாங்குதல் மற்றும் கட்டுமானத்திற்கான 1098 கோடி ரூபாய் மதிப்புள்ள காண்டிராக்டைப் பெற்றுள்ளது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்களையொட்டி இது நடந்தது. அடுத்த இரண்டு மாதங்கள் கழித்து, மேலும் 40 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங் களை அந்த நிறுவனம் வாங்கியது.

இந்த நிறுவனம் உத்தரகாண்டில் அதே காலகட்டத் தில் ஈடுபட்டிருந்த மற்றொரு நீர்மின்சக்தித் திட்டத்திற் காகத் தரையைக் குடைந்து கொண்டிருந்தபோது அருகி லிருந்த ஜோஷிமத் என்ற நகரின் சாலைகளும், வீடுக ளும் இடிந்துகொண்டிருந்தன. இதற்கு இந் நிறுவனத்தின் முறையற்ற திட்டமிடலும், அந்த மண்ணின் தன்மையைப் புரிந்துகொள்ளாமல் கட்டுமானம் மற்றும் குடைவு வழிகளை ஏற்படுத்தியதுமே காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனாலும் தேர்தல் பாண்டுகள் கொடுத்து அடுத்தடுத்த திட்டங்களைப் பெற்றுக் கொண்டது பா.ஜ.க. எம்.பி.யின் இந்த நிறுவனம்.

கட்டும்போதே உடைந்த பாலம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ரஞ்சித் பில்ட்கான் லிமிடெட் நிறுவனம் 10 கோடி ரூபாய்க்கு 2023 ஜனவரி 24 அன்று தேர்தல் பத்திரங்களை வாங்கியது. பிறகு 2023 ஜூலை 11 அன்று 5 கோடி ரூபாய்க்குத் தேர்தல் பத்திரங்களை வாங்கியது. இந்த நி

றுவனத்திற்குத் தொடர்ந்து பல ஒப்பந்தங்களை வழங்கி வருகிறது குஜராத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு.

கட்டுரை

குஜராத்தில் கட்டும்போதே
உடைந்த முமத்புரா பாலம்

இந்த நிறுவனம் 2019இல் கட்டத் தொடங்கிய முமத் புரா பாலம், கட்டிமுடிக்கப்படும் முன்பே மோசமான கான்கிரீட் உள்ளிட்ட காரணங்களால் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இடிந்தது. இது தொடர்பாகவும், மேலும் பல வழக்குகளும் அந்த நிறுவனத்தின் மீது உள்ளன. அதே நிறுவனம் தான் 15 கோடி ரூபாய்க்குத் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. இம் மாதம் 7-ஆம் தேதி இதே நிறுவனத்திற்கு அகமதாபாத் நகராட்சி நிர்வாகம் 109 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரை மீளக் கட்டமைக்கிறோம் என்ற பெயரில் ஏராளமான திட்டங்களை அறிவித்து, அவற்றின் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் தரகு வணிகம் நடந்துவருவதை இந்த தேர்தல் பத்திரங்களின் மூலம் அறிய முடிகிறது. ஏற்கெனவே, அய்தராபாத்தின் மேகா நிறுவனம் ஜம்மு-காஷ்மீரில் பெற்ற காண்டிராக்டுகளைப் பார்த்தோம்.
இதோ மற்றொன்று. லக்னோவைத் தலைமையிட மாகக் கொண்ட ஆப்கோ இன்ப்ராடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பா.ஜ.க.வுக்குப் பல கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் கொடுத்து, பல்லாயிரக் கணக்கான கோடிகளுக்குக் காண்டிராக்டுகளைப் பெற்று உள்ளது.

6.4 கிமீ நீளமுள்ள இசட் மார்க் சுரங்கப் பாதை, ஜம்மு காஷ்மீரின் கண்டெர்பல் மாவட்டத்தில் கட்டப்படுகிறது. தேசிய முக்கியத்துவும், பாதுகாப்பு முக்கியத்துவமும் வாய்ந்த சிறீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக அமையவுள்ள 2,716 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தக் காண்டிராக்டை 2019 டிசம்பர் மாதத்தில் பெற்றது ஆப்கோ இன்ப்ராடெக் நிறுவனம். அதற்கு அடுத்த சில வாரங்களில். 2020 ஜனவரி 15 அன்று 10 கோடி ரூபாய்க்குத் தேர்தல் பத்திரங்களை வாங்கிய அந் நிறுவனம், அதை பாரதிய ஜனதா கட்சிக்குக் கொடுத்தது. பா.ஜ.க. அதை 6 மாதங்கள் கழித்து வங்கியில் கொடுத்துப் பணமாக வரவு வைத்துக் கொண்டது என்று ஸ்க்ரால், நியூஸ் லாண்டரி, தி நியூஸ் மினிட் இணைய தளங்கள் மற்றும் சில செய்தியாளர்கள் நடத்திய புலனாய்வை எடுத்துக்காட்டுறது கஷ்மிரி லைஃப்.

கிழிந்து தொங்கும் உத்தமர் வேடம்

கட்டுரை

சோஜிலா சுரங்கப் பாதை

மொத்தம் 30 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கிய ஆப்கோ இன்ஃப்ராடெக் நிறுவனம், அனைத் தையும் ஆளும் பா.ஜ.க.வுக்கே கொடுத்துள்ளது. காரண மில்லாமலா?
அதில் ரு.10 கோடியை 2022 ஜனவரியில் பாரதிய ஜனதா கட்சிக்குக் கொடுத்த சிறிது காலத்திலேயே 650 கி.மீ. நீளத்திற்குத் திட்டமிடப்பட்டுள்ள டில்லி-அம்ரிஸ்டர் -கத்ரா அதிவிரைவுச் சாலைத் திட்டத்தில், 28.92 கிமீ நீளமுள்ள ஜம்மு டிவிசனின் இரண்டு பகுதிக்கான 1547.91 கோடி ரூபாய் மதிப்பிலான காண்டிராக்டுகளைப் பெற்றுள்ளது ஆப்கோ நிறுவனம். பல்லாயிரம் கோடி ரூபாய் காண்டிராக்டுக்கு இந்தச் சிறு தொகையா (ரூ.30 கோடி) லஞ்சமாக இருக்க முடியும்? இது வெள்ளையாகக் கொடுக்கப்பட்டுள்ள லஞ்சப் பணம் ஊழல் அவ்வளவே!
இன்னும் தோண்டத் தோண்டத் தேர்தல் பத்திரங் களுக்குள் புதைந்துள்ள ஏராளமான ஊழல்கள் வெளிப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஊழல் ஒழிப்பு உத்தமர் களாக வேடம் போட்டுக் கொண்டிருந்த மோடி உள் ளிட்ட பா.ஜ.க.வினரின் வேடம் படுகேவலமாகக் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது.

– ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *