மதுரை சி.பி.எம். தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் தனது 5 ஆண்டு சாதனைகள் குறித்த நூல் வெளியீடு

1 Min Read

மதுரை,மார்ச் 28- தாங்கள் செய்த சாதனைகளின் பட்டியலைத் துண்டுப் பிரசுரமாக வெளியிட்டு, வாக்கு சேகரிப்போரி டையே, சற்று மாறுத லாக, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்க டேசன், கடந்த 5 ஆண்டுக ளில் அவர் செய்த பணிகள் குறித்த தகவல்களை ‘5 ஆண்டு கள் 150 வெற்றிகள்’ என்ற தலைப்பில் தொகுத்து ஒரு சிறு நூலாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது.

மக்களவையில் ஆங்கி லத்தில் கேட்கப்படும் கேள் விகளுக்கு அமைச்சர்கள் ஹிந்தியில் பதில் அளிக் கும் நடைமுறையை எதிர்த்து, 2020இல் சென்னை உயர் நீதிமன் றத்தில் வெங்கடேசன் வழக்குத் தொடுத்தார்.

அந்த நடைமுறையா னது ஆட்சிமொழிச் சட்டத் துக்கு எதிரானது என நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
வெங்கடேசன், தொகுதி மேம்பாட்டுக்கா கச் செய்த பணிகளோடு, இத்தகைய சட்டப் போராட்டங்களும் நூலில் சீரிய முறையில் தொகுக்கப்பட்டிருக்கின் றன; ‘மக்கள் ஊழியன்’ என்கிற பெயரில் அவரது பணிகள் குறித்த ஆவணப் படமும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *