சென்னை. மார்ச் 28- தமிழ் நாட்டில் இறுதி நிலவரப்படி 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் நாளில் வாக்குச்சாவடிகளில் பந்தல், குடிநீர் வசதிகள் செய்யப்படும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர் களிடம் அவர் நேற்று (27.3.2024) கூறியதாவது:
தமிழ்நாட்டில் தற்போது 3 கோடியே 6 லட்சத்து 2 ஆயி ரத்து 367 ஆண்கள், 3 கோடியே 7 லட்சத்து 16 ஆயிரத்து 69 பெண்கள், 8,465 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் அட்டை இல் லாவிட்டாலும், ஆணையம் தெரிவித்துள்ள 12 ஆவணங் களில் ஏதேனும் ஒன்றை காண் பித்து வாக்களிக்கலாம்.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே 68,144 வாக்குச் சாவடிகள் இருந் தன. இந்தநிலையில், 1,500 வாக் காளர்களுக்கு மேல் இருந் தால் கூடுதல் வாக்குச் சாவடிகள் அமைக்க வேண்டும் என்ற உத் தரவின் அடிப்படையில், மேலும் 177 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டுள்ளன.
வெயில் காலம் என்பதால், வாக்குச் சாவடிகளில் வாக்கா ளர்களுக்கு தேவையான சாமி யானா பந்தல், குடிநீர் வசதிகள் செய்யப்படுகின்றன. நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால், ஓஆர்எஸ் கரைசல் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
45 ஆயிரம் வாக்குச் சாவடிக ளில் நேரலை கண்காணிப்புக் கான (‘வெப் ஸ்ட்ரீமிங்’) கேமராக்கள் பொருத்தப்பட் டுள்ளன. சில வாக்குச் சாவடிக ளில் வெளியிலும் கேமராக்கள் இருக்கும்.
அஞ்சல் வாக்குக்கான 12-டி படிவத்தை 77,445 பேர் சமர்ப் பித்துள்ளனர். மாற்றுத் திறனா ளிகளில் 50,676 பேர் வழங்கியுள் ளனர். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை பணிக்காக 7 லட்சம் பேர் பயன்படுத்தப்பட உள்ளனர். இதில், 4 லட்சம் பேருக்கான முதல்கட்ட பயிற்சி முடிந்துள்ளது.
அடுத்தகட்ட பயிற்சியை ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள் ளது. நிறைவாக ஏப்ரல் 18ஆம் தேதியும் பயிற்சி அளிக்கப் படும். மேலும் 39 பொது பார்வையாளர்கள், 20 காவல் துறை பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்களை தேர்தல் ஆணையம்நியமித்துள்ளது.
ஒன்றிய அரசு மற்றும் வங்கிப் பணியில் உள்ள 7,851 பேர் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புப் பணிக்காக 190 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஒதுக்கப்பட்டுள்ள னர். இவர்களில் 25 கம்பெனி வீரர்கள் வந்துள்ளனர்.கடந்த 27ஆம் தேதி காலை 9 மணி வரை, ரூ.36.31 கோடி பணம், ரூ.37.19 கோடி தங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்கள், ரூ.1.89 கோடி மதுபானங்கள், ரூ.85 லட்சம் பரிசுப் பொருட் கள், ரூ.53 லட்சம் கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருட்கள் என ரூ.77.17 கோடி மதிப்பில் பணம், பொருட்களை பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ரூ.7.93 கோடி தொகை குறித்து வருமான வரித் துறை விசாரித்து வருகிறது.இதுவரை சி-விஜில் மூலம் 1,279 புகார்கள் பெறப்பட்டு, அதில் 955 புகார் களுக்கு தீர்வு காணப்பட் டுள்ளது. அரசுக்கு சொந்த மான பொது சுவர்களில் இருந்த 3.16 லட்சம் அரசியல் விளம்பரங்கள், தனியாருக்கு சொந்தமான 1.16 லட்சம் இடங்களில் இருந்த விளம்பரங் கள் அகற்றப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி குறித்து பேசிய விவகாரத்தில் அமைச் சர் அனிதா ராதாகிருஷ் ணனுக்கு எதிராக முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட் டுள்ளது.